pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Monday, January 31, 2011

நிலமீட்சிப் போராட்டம்-சாலைமறியல்
தா.பாண்டியன் உள்ளிட்ட 700 பேர் கைது.!
பொள்ளாச்சி.ஜன.27. கடந்த 1981.ல் கையகப்படுத்தப்பட்டு,இதுவரை பயனாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய நிலத்தை வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கும் தமிழக அரசைக் கண்டித்தும்,இது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற வலியுறுத்தியும்,கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலையில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிலமீட்சிப் போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்pன் போது சாலைமறியலில் ஈடுபட்ட,இ.கம்ய+.மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்,தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் லிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலையில்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நில மீட்சிப் போராட்டம் இன்று நடைபெற்றது.கட்சியின் மாநிலச்செயலாளர் திரு.தா.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில்,தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.லிங்கம்,மற்றும் கோவைமாவட்ட செயலாளர்கள் சு.பழனிச்சாமி, கே.புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 1981.ஆம் ஆண்டு,பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் ஒடையகுளம் பகுதிகளில் உள்ள சுமார் 600 ஏக்கர் நிலங்களுக்கான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.ஆனால் இதுவரை அந்த நிலங்கள் தனியார் வசமிருந்து மீட்கப்பட்டு,பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை.எனவே அதனை மீட்டு உரிய பயனாளிகளுக்கு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியும்,இது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல் படுத்தவேண்டும் என்றும் இப்போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
இதற்காக ஆனைமலைபகுதியில் குவிந்த தொண்டர்கள்,ஒடையகுளம் பகுதியில் உள்ள நிலத்தை ஆக்ரமிப்பதற்காக,ஆனைமலையிலிருந்து ஊர்வலமாக செல்லத் துவங்கினர்.இதனை வழியிலேயே தடுத்து நிறுத்திய காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
ஆனால் போராட்டத்தைக் கைவிட மறுத்த இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியினர்,தா.பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து தா.பாண்டியன் மற்றும் 100.க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட போராட்டக்குழுவினரை,கூடுதல் எஸ்.பி.திரு.அண்ணாதுரை தலைமையில்,சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர்.
சுமார் 700.க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கூடி கோரிக்கையை வலியுறுத்தி,சாலைமறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் பொள்ளாச்சி-ஆனைமலை சாலையில் சுமார் இரண்டுமணிநேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
visuals in youtube-communist party of indiapollachi

Thursday, January 13, 2011

P.A.P திட்ட அலுவலகத்தில் விவசாயிகள் என்ற பெயரில் கலாட்டா.!


பொள்ளாச்சி.ஜன.12.கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்திற்குட்பட்ட,காண்டூர் கால்வாய் சீரமைப்புப் பணிக்காக,ரூ.184.5 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டது.இதற்காக வந்திருந்த வந்திருந்த ஒப்பந்ததாரர்களை,விவசாயிகள் என்ற பெயரில்,பி.ஏ.பி.திட்ட அலுவலகத்திற்குள் நுழைந்த சிலர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் ஐதராபாத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள பி.ஏ.பி.எனப்படும் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்திற்குட்பட்ட காண்டூர் கால்வாய் சீரமைப்புப் பணிக்காக,தமிழகஅரசு ரூ.184.5.கோடியை ஒதுக்கியுள்ளது.மூன்று கட்டங்களாக நடைபெறும்,இப்பணிக்காக ஒப்பந்தம் கோரப்பட்டதையடுத்து,தமிழகம்,ஆந்திரா மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஒப்பந்தாரர்கள் 21 பேர்,தங்கள் ஒப்பந்தங்களை இன்று பி.ஏ.பி.திட்ட அலுவலகத்தில் அளிப்பதற்காக வந்திருந்தனர்.
பி.ஏ.பி.திட்ட கண்காணிப்புப் பொறியாளர் ரங்கநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின்போது,விவசாயிகள் என்ற பெயரில் நுழைந்த 10.க்கும் மேற்பட்டோரில் சிலர் திமுக கரைவேட்டியுடன் வந்தது மட்டுமின்றி,பெரும்பாலான ஒப்பந்ததாரர்களை,தனியே அழைத்துச்சென்று பேசினர்,பின்னர் அவர்களை மனுச் செய்யவிடாமல் தடுத்து மிரட்டினர்.மேலும் ஆந்திரமாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த ஈஸ்வர் என்ற ஒப்பந்ததாரை, அடையாளம் தெரியாத சிலர் தாக்கியதில் அவர் லேசான காயமடைந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து,பி.ஏ.பி.திட்ட அலுவலக அதிகாரிகள் கொடுத்த,புகாரின்பேரில், டி.எஸ்.பி.முத்தழகு தலைமையில்,சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், கலாட்டாவில் ஈடுபட்டவர்களை வெளியேற்றியதையடுத்து அங்கு இயல்பு நிலை திரும்பியது.
ஓப்பந்ததாரர்கள் தாக்கப்பட்டது மற்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து, விவசாயிகளாக வந்தவர்களிடம் விசாரித்தபோது,கடந்த முறை காண்டூர் கால்வாயில் பணிகளை மேற்கொண்ட சிலர்,ஒழுங்காக செய்யாமல் போனதால்,கால்வாயில் பழுதுகள் ஏற்பட்டன என்றும்,அதனால் அதனை முறைப்படுத்துவதற்காக விவசாயிகள் என்ற முறையில் வந்ததாகவும் தெரிவித்தனர்.
ஆனால்,ஆரம்பம் முதலே,குறிப்பிட்ட ஒரு ஒப்பந்ததாரரை மட்டும் உள்ளே அனுமதித்துவிட்டு மற்றவர்களை மிரட்டியும்,தாக்க முற்படுவதுமாகவும் இருந்ததால்,ரூ.184.5 கோடிக்கான டெண்டரை மொத்தமாக ஒருவரே சுருட்டுவதற்கான முயற்சிகளே தெரிந்தது.யார் அந்த வி.ஐ.பி. என்பதற்கான விடையை மட்டும் விவசாயிகளாக வந்த பொள்ளாச்சி,சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த திமுகவினர் தெரிவிக்கவில்லை.
vedios in you tube- sunpollachi