நிலமீட்சிப் போராட்டம்-சாலைமறியல்
தா.பாண்டியன் உள்ளிட்ட 700 பேர் கைது.!
பொள்ளாச்சி.ஜன.27. கடந்த 1981.ல் கையகப்படுத்தப்பட்டு,இதுவரை பயனாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய நிலத்தை வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கும் தமிழக அரசைக் கண்டித்தும்,இது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற வலியுறுத்தியும்,கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலையில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிலமீட்சிப் போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்pன் போது சாலைமறியலில் ஈடுபட்ட,இ.கம்ய+.மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்,தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் லிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலையில்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நில மீட்சிப் போராட்டம் இன்று நடைபெற்றது.கட்சியின் மாநிலச்செயலாளர் திரு.தா.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில்,தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.லிங்கம்,மற்றும் கோவைமாவட்ட செயலாளர்கள் சு.பழனிச்சாமி, கே.புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 1981.ஆம் ஆண்டு,பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் ஒடையகுளம் பகுதிகளில் உள்ள சுமார் 600 ஏக்கர் நிலங்களுக்கான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.ஆனால் இதுவரை அந்த நிலங்கள் தனியார் வசமிருந்து மீட்கப்பட்டு,பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை.எனவே அதனை மீட்டு உரிய பயனாளிகளுக்கு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியும்,இது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல் படுத்தவேண்டும் என்றும் இப்போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
இதற்காக ஆனைமலைபகுதியில் குவிந்த தொண்டர்கள்,ஒடையகுளம் பகுதியில் உள்ள நிலத்தை ஆக்ரமிப்பதற்காக,ஆனைமலையிலிருந்து ஊர்வலமாக செல்லத் துவங்கினர்.இதனை வழியிலேயே தடுத்து நிறுத்திய காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
ஆனால் போராட்டத்தைக் கைவிட மறுத்த இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியினர்,தா.பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து தா.பாண்டியன் மற்றும் 100.க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட போராட்டக்குழுவினரை,கூடுதல் எஸ்.பி.திரு.அண்ணாதுரை தலைமையில்,சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர்.
சுமார் 700.க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கூடி கோரிக்கையை வலியுறுத்தி,சாலைமறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் பொள்ளாச்சி-ஆனைமலை சாலையில் சுமார் இரண்டுமணிநேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
visuals in youtube-communist party of indiapollachi
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago