pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Monday, June 28, 2010

கல்வி கட்டணக் கொள்ளை. காங்கிரஸ் புகார்.!

அதிக கல்விக்கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை.!
காங்கிரஸ்கட்சி கோரிக்கை.!

பொள்ளாச்சி.ஜுன்.28 கோவைமாவட்டம் பொள்ளாச்சியில்,அரசு அறிவித்த கட்டணத்தைவிட,அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் மீது,தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று,கோவைதெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் பொள்ளாச்சி சார்ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தனியார் பள்ளிகளுக்கு 2010-2011.ஆம் கல்வியாண்டிற்கான கல்விக்கட்டணத்தை தமிழகஅரசு நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.இதனைத் தவிர,வேறு எந்தக்கட்டணத்தையும் தனியார் பள்ளிகள் மாணவ,மாணவிகளிடமிருந்து வச+லிக்கக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தும், கோவைமாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட சில தனியார் பள்ளிகள் மாணவர்களிடமிருந்து,அதிக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். இதனால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால்,இதனை வெளியில் தெரியப்படுத்தினால்,தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதால்,பெற்றோர்கள் புகார் தர முன்வருவதில்லை.ஆகவே,தமிழக அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதோடு,தனியார் பள்ளிகளில் சோதனைகள் நடத்தி அதிகமான அளவில் வசூல் செய்த கட்டணங்களை பறிமுதல் செய்து பெற்றோர்களிடம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும்,மாவட்டக் கல்வி அலுவலகத்திலும் தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமையில்,மாவட்டத் துணைத்தலைவர் கன்னிமுத்து,பழனி செவ்வேல்,உட்பட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் தமிழகஅரசு இப்பிரச்சினையில் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால்,காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Sunday, June 20, 2010

பொள்ளாச்சியில் திருவள்ளுவர் சிலை..!

செம்மொழி மாநாட்டை முன்னிட்டு
ரூ.1 கோடி செலவில் திருவள்ளுவர் சிலை.!


பொள்ளாச்சி.ஜுன்.20 கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கேரள எல்லையான கோபாலபுரத்தில்,நெடுஞ்சாலைத்துறை சார்பில்,சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில்,திருவள்ளுவர் சிலை மற்றும் அறிவுச்சுடர் சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மாநாட்டிற்கு முன்பாக திறக்கப்படவுள்ள இச்சிலையமைப்பு பணிகளை,நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக எல்லைகளில் உள்ள நெடுஞ்சாலைகளில்,பிறமாநில மக்களை வரவேற்கும் விதமாக,முகப்புத்தூண்கள் அமைப்பதை,தமிழக நெடுஞ் சாலைத்துறை வழக்கமாகக் கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக,கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள,கேரள எல்லையான கோபாலபுரத்தில் முகப்புத்தூண்களை அமைக்க முடிவு செய்தது.இந்நிலையில் கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டின் நினைவாக இப்பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலையி;ன் நடுவே திருவள்ளுவர் சிலையும்,சாலையின் இருபுறமும் அறிவுச்சுடர் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு,அதற்கான பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.

கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைப் போலவே,அமைக்கப்பட்டு வரும் இத்திருவள்ளுவர் சிலை அமைப்புப் பணிகள் கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாடு துவக்கத்திற்கு முன்பாகவே திறப்புவிழா செய்யப்படும் வகையில்,பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும்,இச்சிலையமைப்புப் பணிக்காக,சாலைகள் அகலப்படுத்தப்பட்டு,நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும்,நடைபாதையோரப் பூங்காக்கள்,செயற்கை நீரூற்றுக்கள்,அலங்கார வண்ணவிளக்குகளும் அமைக்கப்பட்டுவருகின்றன.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இப்பணிகளை துரிதமாக முடிக்கும் வகையில் செயல்பட்டுவருகின்றனர்.
இதனையடுத்து,தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன்,இப்பணிகளைப் பார்வையிட்டு,ஆய்வு செய்ததோடு,சில திருத்தங்களையும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மேலும் வரும் 22.ஆம் தேதி,இச்சிலையமைப்புப் பணிகள் முற்றிலுமாக முடிக்கப்பட்டு,திறப்புவிழா செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், கேரள மாநிலத்து மக்களை வரவேற்கும் விதமாகவும்,திருவள்ளுவரின் புகழை மேலும் எடுத்துக்கூறும் வகையிலும் இச்சிலை அமையும் எனறும் அவர் தெரிவித்தார்.

Monday, June 14, 2010

தந்தங்கள் பறிமுதல்.! இருவர் கைது.!

20 கிலோ எடைகொண்ட 2 தந்தங்கள் பறிமுதல்.!
இருவர் கைது.! 4 பேருக்கு வலை வீச்சு.!

பொள்ளாச்சி.ஜுன்.13 கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர்-மலையாண்டிப்பட்டணத்தில்,யானைத்தந்தங்கள் இரண்டை, வனத்துறையினர் கைப்பற்றினர்.இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் தலைமறைவான 4 பேர் தீவிரமாகத் தேடப்பட்டு வருகின்றனர்.

கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் மலையாண்டிப்பட்டணத்தில் உள்ள இருசக்கர வாகனப்பழுது பார்க்கும் பட்டறை ஒன்றின் உரிமையாளரான முகமதுபாரி என்பவர் இரண்டு யானைத்தந்தங்களை விற்பனை செய்ய முயல்வதாக பொள்ளாச்சி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து,ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் தியாகராஜன் தலைமையில் பொள்ளாச்சி வனச்சரகர் வீரமணி உட்பட வனத்துறையினர் சம்பவ இடத்தில் இன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.இச்சோதனையில்,மொத்தம் சுமார் இருபது கிலோ எடை கொண்ட இரண்டு யானைத்தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைக் கைப்பற்றிய வனத்துறையினர்,பட்டறை உரிமையாளரான முகமது பாரி மற்றும்,தந்தங்களை விலைக்கு வாங்கிச் செல்ல வந்த தேனிமாவட்டம் சிலையாம்பட்டியைச் சேர்ந்த சந்தானம் ஆகியோரை உடனடியாகக் கைது செய்தனர். இருசக்கர வாகனப்பழுது பார்க்கும் பட்டறையிலிருந்து தந்தங்கள் கைப்பற்றப்பட்டதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வனத்துறை அதிகாரிகள்,இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் நான்குபேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


Sunday, June 13, 2010

















உள்ளே தொட்டால் உசுரு இனிக்கும்
தெள்ளுதமிழ் எங்கள் தமிழ்மொழி..!
என்றென்றும் செம்மொழி- எனும்
ஏற்றம்பெறும் மொழி-என்று
அறைகூவிடும் செம்மொழி மாநாடு..!

தமிழ்இனம் தனிஇனம்- எனும்
தாரகமந்திரத்தை…

தரணிக்கு உரைத்திடும் மாநாடே
தமிழ்ச் செம்மொழி மாநாடு..!

கோவை எனும் பாவை
தமிழ்க்கோவையால் மலர்ந்திடும் மாநாடு
ஆலைகளின் நகரம்-இனி
தமிழ்சோலைகளின் நகரமாம்,

முத்தமிழ் கலைஞராம்..,
மூத்த தமிழ்அறிஞராம்
எங்கள் தமிழன்னை தரணிக்கு அளித்திட்ட
அருந்தமிழ்க் கொடையாம்..!

செந்தமிழை கனியாக்கி,
தன்னை கிளியாக்கி
தமிழ்ச்சுவை பருகியவர் மட்டுமல்ல..,

தமிழர்தம் வாழ்வுதனை
தலைநிமிரச்செய்தவர்..!

தலைதரத் துணிந்தான் தம்பிக்கு
குமணவள்ளல்-உடன்பிறப்பான
தமிழ்இனம் வாழ-தன்னையே தந்தான்
கருணைவள்ளல்..!

வண்டமிழ்வானின் தலையுச்சிதனை
முகர்ந்தவர்-அதனால் நல்லோரின்
எண்ணங்களையும் கவர்ந்தவர்..!
என-வாழும் தமிழொன்று,நாளும்
வளரும் தமிழுக்காய் நடத்தும்
தமிழ்செம்மொழி மாநாட்டில்..,

செம்மொழியெனும் மான் ஆட..,
கனிமொழியெனும் குயில்பாட
குறளமுதம் தந்தவரை..
தமிழ்க்குரல் அமுதால் வாழ்த்த வந்தோம்

வீழ்வது நாமானாலும்
வாழ்வது தமிழாகட்டும்
உடல்மண்ணுக்கு.. உயிர்தமிழுக்கு..!

வாழ்க உலகத் தமிழ்செம்மொழி மாநாடு.!

--நன்றி வணக்கம்.!
-கவிஞர்.முத்தமிழ் செல்வி.-கோவை


Tuesday, June 8, 2010

செம்மொழி மாநாடு பெயரில் மோசடி.!

செம்மொழி மாநாட்டின்பேரில்,
இலவசபட்டா மோசடி.!...,8 பேர் கைது.!

பொள்ளாச்சி.ஜுன்.8 செம்மொழி மாநாட்டை முன்னிட்டு,ஒருலட்சம் பேருக்கு இலவசவீட்டுமனைப்பட்டா வழங்கவுள்ளதாகவும்,இதேபோல் வால்பாறை பகுதியில் வசிப்பவர்களுக்கும் இலவசபட்டா வழங்க உள்ளதாகக் கூறி,அதற்காக கட்டணம் வசூலித்த எட்டுபேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம்,இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவைமாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு,நேற்று வால்பாறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 500 பேர்,இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு ஒன்றாக மனுக் கொடுத்தனர்.இவ்வாறு கொடுக்கப்பட்ட மனுக்கள் ஒரேமாதிரியாக அச்சடிக்கப்பட்டிருந்ததைக்கண்ட மாவட்ட ஆட்சியர் உமாநாத்,இம்மனுக்கள் குறித்து சந்தேகம் அடைந்தார்.

இதனையடுத்து வால்பாறை வட்டாட்சியர் சந்திரனிடம் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.இது குறித்து மனுக்கள் அளித்த பொதுமக்களிடம்,நேற்றுமாலை சந்திரன் விசாரணை மேற்கொண்டதில்,நடைபெறவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி ஒருலட்சம்பேருக்கு,தமிழகஅரசு இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் அளிக்கவுள்ளதாகவும்,இத்திட்டத்தின்கீழ் வால்பாறை பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் வீட்டுமனை அளிக்கப்படவுள்ளதாகவும்,வால்பாறை நகராட்சி,ஏழாவது வார்டு உறுப்பினர் காளிமுத்து உட்பட சிலரைக்கொண்ட கும்பல் ஒன்று,இதற்கு கட்டணமாக தலா ரூ.100 முதல்,ரூ.500 வரை,1960 பேரிடம் வசூல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அரசால் அறிவிக்கப்படாத திட்டத்தின் பெயரைக்கூறி,பல லட்சரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளதை அறிந்த வட்டாட்சியர் சந்திரன் இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வால்பாறை காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து,தமிழகஅரசின் உத்தரவுப்படி,வழக்குப் பதிவு செய்த வால்பாறை போலீசார்,வால்பாறை நகராட்சி உறுப்பினர்,காளிமுத்து,சத்துணவு அமைப்பாளராகவுள்ள ஸ்டீபன்,குரங்குமுடி பகுதியைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் அன்பழகன்,செல்வம்,ஸ்டான்மோர் பகுதியைச் சேர்ந்த இருதயராஜ்
ராஜேந்திரன்,இஞ்சிப்பாறையைச் சேர்ந்த துரைப்பாண்டி,இராமர் ஆகிய எட்டுபேரையும் இரவோடு இரவாக கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்படாத,இலவச பட்டாகோரும் ஏராளமான விண்ணப்பங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பேட்டி-மாடசாமி-வால்பாறை டி.எஸ்.பி.

இம்மோசடியில் ஈடுபட்டுள்ள தமிழ்செல்வி மற்றும் மும்மூர்த்தி ஆகியோரும் வால்பாறை போலீசாரால் தேடப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,ருகெவை மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர்.

செம்மொழி மாநாட்டின் பெயரால் நடைபெற்ற இச்சம்பவம்,இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற தனிநபர்கள் அரசின் நலத்திட்டங்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி,பொதுமக்களை அணுகும்போது,பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும்,திட்டங்கள் குறித்து அரசுத்துறை அதிகாரிகளிடம் விசாரித்து உண்மையை அறிந்து கொள்ளவேண்டும் என்றும் வால்பாறை வட்டாட்சியர் சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
பேட்டி-சந்திரன்-வட்டாட்சியர்.