pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Thursday, December 23, 2010

வால்பாறையில் பிடிபட்ட சிறுத்தை அமராவதி வனப்பகுதியில் விடுவிப்பு.!

பொள்ளாச்சி.டிச.23.கோவைமாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள கெஜமுடி தேயிலைத் தோட்டத்தில்,வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கிய சிறுத்தைப்புலி பாதுகாப்பான முறையில் உடுமலையை அடுத்துள்ள அமராவதி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
கோவைமாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள தாய்முடி எஸ்டேட்டில் வசிக்கும் சரண்யா என்ற சிறுமி கடந்த சிலதினங்களுக்கு முன்பு சிறுத்தைப்புலியால் தாக்கப்பட்டு,படுகாயமடைந்தார்.
இதனையடுத்து வனத்துறையினர்,அந்த சிறுத்தையைப் பிடிப்பதற்காக,தாய்முடி மற்றும் கெஜமுடி எஸ்டேட் பகுதியில் கூண்டுகளை வைத்தனர்.இதனையடுத்து கடந்த 11.ஆம் தேதியன்று,நள்ளிரவில்,இக்கூண்டில் சுமார் 3 வயதுள்ள சிறுத்தைப்புலி ஒன்று சிக்கியது. ஆனால்,சுமார் 4 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு,தான் சிக்கிய கூண்டின் கம்பிகள்,மற்றும் வலைகளை கடித்தும்,வளைத்தும் கூண்டிலிருந்து வெளியேறிய சிறுத்தைப்புலி தப்பி வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.
இதனையடுத்து கடந்த பதினொரு நாட்களாக,மீண்டும் மூன்று இடங்களில் கூண்டுகளை வைத்து,வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதே சிறுத்தைப்புலி கெஜமுடி அப்பர் டிவிசன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கியது. இதனையடுத்து,சிறுத்தைப்புலி உரிய மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு,சுமார் 70 கி.மீ,தூரத்திலுள்ள ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்குட்பட்ட அமராவதி வனச்சரகத்திறக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
ஆனால் கூண்டிலிருந்து உடனடியாக வெளியேறாமல்,சூழ்நிiiயை நோட்டமிட்ட சிறுத்தை,சிறிது நேரம் கழித்து வனத்த்pற்குள் பாய்ந்தோடியது. லூரியின் மீது பாதுகாப்பாக நின்றிருந்த வனத்துறையினர்,சிறுத்தை மீண்டும் திரும்பிவந்து,தாக்கும் அபாயம் இருந்ததால், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சிலரவுண்டுகள் சுட்டனர்.
இதனால் அரண்டு போன சிறுத்தை படுவேகமாக வனத்திற்குள் ஓடிமறைந்தது.அமராவதி வனப்பகுதியில் மான்கள் உட்பட,உயவுக்கான விலங்குகள் அதிகளவு உள்ளது.இங்கம் அதிகளவு சிறுத்தைகள் உள்ளதால்,அவற்றுடன் இணைந்து கொள்ளும்.சிறுத்தை வசிப்பதற்கு ஏற்ற இடமாக,இந்த வனப்பகுதி உள்ளதால்,பிரச்சினைகள் எதுவும் இல்லை.கடந்த ஆறுமாதங்குளுக்கு முன் வால்பாறையில் சிக்கிய சிறுத்தையும் அமராவதி வனப்பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.என்று திருப்பூர்; மாவட்ட வனப்பாதுகாவலர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
vedios in youtube-sunpollachi

கூண்டிலிருந்து தப்பிய சிறுத்தை பிடிபட்டது.

பொள்ளாச்சி.டிச.22.கோவைமாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள கெஜமுடி தேயிலைத் தோட்டத்தில்,வைக்கப்பட்டிருந்த கூண்டிலிருந்து வலைகளையும்,கம்பிகளையும் கடித்தும்,வளைத்தும் தப்பிய சிறுத்தைப்புலி மீண்டும் சிக்கியது.இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவைமாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள தாய்முடி எஸ்டேட்டில் வசிக்கும் சரண்யா என்ற சிறுமி கடந்த சிலதினங்களுக்கு முன்பு சிறுத்தைப்புலியால் தாக்கப்பட்டு,படுகாயமடைந்தார்.
இதனையடுத்து வனத்துறையினர்,அந்த சிறுத்தையைப் பிடிப்பதற்காக,தாய்முடி மற்றும் கெஜமுடி எஸ்டேட் பகுதியில் கூண்டுகளை வைத்தனர்.இதனையுடத்து கடந்த 11.ஆம் தேதியன்று,நள்ளிரவில்,இக்கூண்டில் சுமார் 3 வயதுள்ள சிறுத்தைப்புலி ஒன்று சிக்கியது. ஆனால்,சுமார் 4 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு,தான் சிக்கிய கூண்டின் கம்பிகள்,மற்றும் வலைகளை கடித்தும்,வளைத்தும் கூண்டிலிருந்து வெளியேறிய சிறுத்தைப்புலி தப்பி வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.இதனால் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர்.பிடிபட்ட சிறுத்தைப்புலியை வனத்துறையினரெ விடுவித்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களிடையே இருந்தது.
இதனையடுத்து கடந்த பதினொரு நாட்களாக,மீண்டும் மூன்று இடங்களில் கூண்டுகளை வைத்து,வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில்,நேற்று இரவு அதே சிறுத்தைப்புலி கெஜமுடி அப்பர் டிவிசன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கியது.இது குறித்து தகவலறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் ஆரோக்கியராஜ் சேவியர் மற்றும் வனத்துறையினர் உடனடியாக சம்பவஇடத்திற்கு வந்து சிறுத்தை பிடிபட்ட கூண்டினைச் சுற்றி,தகரங்களால் மறைத்தும்,கற்களை அடுக்கியும்,சிறுத்தைப்புலி தப்பிச்செல்ல முடியாதபடி,பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து,சிறுத்தைப்புலி உரிய மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு,ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படும் என்றும் ஆரோக்கியராஜசேவியர் தெரிவித்துள்ளார்.

சிறுத்தை பிடிபட்டது குறித்து பொதுமக்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும்,இப்குதியில் மேலும் ஏராளமான சிறுத்தைப்புலிகள் தங்கள் குட்டிகளுடன் வலம்வருவதாகவும்,அவற்றையும் தொடர்ந்து கண்காணித்துப் பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
visuals in youtube-sunpollachi


Sunday, December 19, 2010

குழந்தையைக் கொன்று விட்டு நாடகமாடிய தாய்கைது.!

பொள்ளாச்சி.டிச.19.கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துஅனைமலை தாத்தூரைச் சேர்ந்த பெண்,தனது குழந்தையை கிணற்றில்போட்டுக் கொன்று விட்டு,கொள்ளையர்கள் வந்து குழந்கையைப் பறித்துச் சென்று கொன்றுவிட்டதாக நாடகமாடியது,போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து அப்பெண்ணை ஆனைமலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்து,ஆனைமலையருகேயுள்ள தாத்தூர் பகுதியில் வசிப்பவர் தர்மராஜ்.இவரது மனைவியான காளீஸ்வரி,தனது ஒன்றரை வயது மகன் சௌந்தர்ராஜனுடன்,ஆனைமலையருகேயுள்ள மருத்துவமனைக்கு சென்று திரும்பிவரும் வழியில்,தலையில் ஹெல்மெட்டுடன்,இருசக்கரவாகனத்தில் தன்னை பின் தொடர்ந்து வந்த மர்மமனிதர்கள் இருவர் திடீரென்று தனது கழுத்திலிருந்த 4 சவரன் தங்கநகையைப் பறித்துக் கொண்டதோடு, தன்னிடமிருந்து குழந்தையையும் பறித்துக் கொண்டனர் என்றும்,
புpன்னர் அவர்களைத் துரத்திச் சென்று பார்த்தபோது,தனது குழந்தையை அங்குள்ள கிணற்றில் போட்டுக் கொன்று விட்டதாகவும்,ஆனைமலை காவல்நிலையத்தில் புகார் செய்தார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆனைமலை போலீசார்,உடனடியாக சம்பவஇடத்திற்கு சென்று,காளீஸ்வரி குறிப்பிட்ட கிணற்றிலிருந்து குழந்தையின் சடலத்தை மீட்டனர்.மேலும் அப்பகுதியில் விசாரணையும் மேற்கொண்டனர்.
ஆனால் இவ்விசாரணையின்போது,காளீஸ்வரி குறிப்பிட்டதுபோல அப்பகுதியில் சம்பவம் ஏதும் நடைபெற்றதற்கான அறிகுறி எதுவும் தெரியாததால் போலீசார் குழப்பமடைந்தனர்.
இதனையடுத்து,காளீஸ்வரியிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால்,போலீசாரின் சந்தேகம் காளீஸ்வரி மீதே திரும்பியது.இதனையடுத்து உரியமுறையில் விசாரித்த போலீசாரிடம்,தனது காதல் திருமணத்தால்,பெற்றோருடன் இணையமுடியாத விரக்தியில் தான் இருந்ததாகவும்,அதற்கு இடைய+றாக குழந்தை இருந்ததால் அதனைக் கிணற்றில் போட்டுக் கொன்றதாகவும்,இதனை மறைப்பதற்காக கொள்ளையர்கள் வந்து தனது நகைகளைப் பறித்துச் செல்லும்போது,குழந்தையையும் கிணற்றில் போட்டுக் கொன்றுவிட்டதாக நாடகமாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆனைமலைபோலீசார்,காளீஸ்வரி மீது கொலைவழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.பெற்ற தாயே,தனது குழந்தையை கிணற்றில் தள்ளிக் கொன்ற சம்பவம்,இப்பகுதி பொதுமக்களிடையே பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
vedio in youtube-pollachi child murder.

Friday, December 17, 2010

வால்பாறை சாலைகள் குறித்து ஆய்வு.!

கோவைமாவட்டம் வால்பாறையில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களுக்குட்பட்ட, பழுதடைந்த சாலைகள்,பொள்ளாச்சி கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பழுதடைந்த சாலைகளில் அரசுப்பேருந்துகள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து,நடந்து செல்லும் பாதசாரிகள் சிறுத்தைப்புலிகள்,காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் தாக்குதலுக்குள்ளாவது வாடிக்கையாகி வருவதால், இந்த சாலைகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவைமாவட்டம் வால்பாறை பகுதியிலுள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களின் வழியாகச் செல்லும் சாலைகளில்,கடந்த காலங்களில் அரசுப்பேருந்துகள் சென்றுவந்து கொண்டு இருந்தன.நாளடைவில் அந்த சாலைகள் பராமரிப்பின்றி பழுதடைந்ததால் பெரும்பாலான பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
இதனையடுத்து அவ்வழியாக தங்கள் குடியிருப்புகளுக்கு,நடந்துசெல்லும் பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட பாதசாரிகள், சிறுத்தைப்புலிகள், காட்டுயானைகள்,கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் தாக்குதலுக்குள்ளாவதும்,சிலர் உயிரிழப்பதும் தொடர்கதையானது.
கடந்தசில தினங்களுக்கு முன் மாவட்டஆட்சியர் உமாநாத் தலைமையில் பொள்ளாச்சியில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கோவைதங்கம் மற்றும் வனத்துறை அதிகாரிகள், இப்பிரச்சினைகள் குறித்து மாவட்டஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துரைத்தனர்.
இதனையடுத்து சாலைகள் சீரமைக்கப்படுவதால் பெருமளவில் வன விலங்குகளால் ஏற்படும் தாக்குதல்களைத் தவிர்க்கமுடியும் என்றும். சீரமைக்கப்பட்ட சாலைகளில் அரசுப்பேருந்துகள் மற்றும் ஷேர்ஆட்டோக்கள் விடுவதன் மூலம் பாதசாரிகளின் நடமாட்டத்தைக் குறைக்கமுடியும் என்றும் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பழுதடைந்த சாலைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு அது குறித்த அறிக்கைகளைத் தருமாறு மாவட்ட ஆட்சியர் உமாநாத் உத்தரவிட்டடைத் தொடர்ந்து,பொள்ளாச்சி கோட்டாட்சியர் அழகிரிசாமி தலைமையில், அரசுப்போக்குவரத்துக்கழகம், நெடுஞ்சாலைத்துறை, மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் வால்பாறையை அடுத்துள்ள ஊசிமலை, சின்னக்கல்லார், சோலையார்,வில்லோனி உட்பட பலபகுதிகளில்உள்ள சுமார் 73.கி.மீ.நீளமுள்ள சாலைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுகளுக்குப் பிறகு பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில்,தனியார் தேயிலைத் தோட்டத்திற்குட்பட்ட பழுதடைந்த சாலைகள்,வால்பாறை நகராட்சி அல்லது நெடுஞ்சாலைத்துறைவசம் ஒப்படைக்கப்பட்டு புதிய சாலைகள் போடவும்,பழுதடைந்த சாலைகள் சீரமைக்கவும்,நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,இச்சாலைகளில் முதற்கட்டமாக அரசுப்பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசுமருத்துவமனையை விரிவாக்கம் செய்ய அனைத்துக் கட்சியினரும் கோரிக்கை.

அரசுமருத்துவமனையை விரிவாக்கம் செய்யவேண்டும்.
அனைத்துக் கட்சியினரும் கோரிக்கை.!
கோவைமாவட்டம் பொள்ளாச்சி அரசுமருத்துவமனை, மாவட்டத் தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டதையொட்டி, இம்மருத்துவமனையின் விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள தமிழகஅரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதோடு,இங்கு மருத்துவக் கல்லூரியையும் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சியினர் சார்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை தெற்குமாவட்டத்தில் பொள்ளாச்சி அரசுமருத்துவமனை மட்டுமே தற்போது மிகப்பெரிய மருத்துவமனையாக உள்ளது.இதன்மூலம், பொள்ளாச்சி, உடுமலை,வால்பாறை,கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.நாள்தோறும் 2 ஆயிரம் நோயாளிகள் வரை இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
ஆனால்,இம்மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட நவீனவசதிகள் எதுவுமில்லாததால்,சாதாரணமான சில நோய்கள் தவிர,விபத்து, சிக்கலான பிரசவம்,உள்ளிட்ட பெரும்பாலான சிகிச்சைகளுக்கு,கோவை அரசுமருத்துவமனைக்கே பரிந்துரை செய்யப்படுகிறது.இதனால் அரசுமருத்துவமனையை நாடிவரும் ஏழைநோயாளிகள்,பெரிதும் அவதிக்குள்ளாகும் நிலை தொடர்ந்துவருகிறது.
இதனையடுத்து,பொள்ளாச்சி அரசுமருத்துவமனையில்,நவீனகருவிகளுடன் கூடிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துவந்ததையடுத்து இம்மருத்துவமனை மாவட்டத் தலைமை மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டு,கடந்த மேமாதம் அரசுஆணை வெளியிடப்பட்டது.
அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் இடவசதி தேவைப்படும் நிலையுள்ளதால்,தற்போது இம்மருத்துவமனை யின் அருகில் செயல்படாதநிலையில் உள்ள,சுமார் 2 ஏக்கர் பரப்பளவிலான நகராட்சி மகளிர்மேல்நிலைப் பள்ளிவளாகத்தையும்,இதன் அருகிலேயே முக்கால் ஏக்கர் பரப்பளவிலான பாலகோபாலபுரம் பள்ளிவளாகத்தையும் இணைத்து,அரசு மருத்துவமனைக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு கட்டமைப்புவசதிகள் மேம்படுத்தப்பட்டு,மாவட்டத் தலைமை மருத்துவமனையாக,பொள்ளாச்சி அரசு மருத்துவமனை செயல்படும் நிலை ஏற்பட்டால்,500 படுக்கைவசதிகளுடனும்,சி.டி.ஸ்கேன்,விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு,எலும்பு,நரம்பியல்,கண்,காது,மூக்கு தொண்டைப்பிரிவு,மகப்பேறுக்கு முன் மற்றும் பின்கவனிப்பு மருத்துவப்பிரிவு,இருதயநோய்,லேப்ராஸ்கோப்பிக்குடன் கூடிய நவீன அறுவைசிகிச்சைப்பிரிவு உள்ளிட்ட 30.க்கும் மேற்பட்ட சிறப்புமருத்துவப்பிரிவுகளுடன் இம்மருத்துவமனை செயல்பட வாய்ப்புள்ளது என்றும்,அரசுமருத்துவக்கல்லூரியாக இயங்க வாய்ப்புள்ளது என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில்,நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்,வணிகவளாகம் கட்டுவதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ள பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.நகராட்சியின் வருவாயை அதிகப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டாலும்,பொதுமக்களின் நலன் கருதி,இதனை நிறுத்திவைக்கவேண்டும் என்றும்,மாவட்டத்தலைமை மருத்துவமனையாக மாற்றுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழகஅரசு முன்வரவேண்டும் என்பதே, அனைத்துக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள்,தொழில் வர்த்தகசபை,வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.



Tuesday, December 14, 2010

வனவிலங்குகளின் தாக்குதல்களிலிருந்து
பொதுமக்களைக் காக்க நடவடிக்கை-மாவட்ட ஆட்சியர்
பொள்ளாச்சி.டிச.14 கோவை மாவட்டம் வால்பாறையில்,தொடர்ந்து வனவிலங்குகளின் தாக்குதலுக்குள்ளாகும் பொதுமக்களைக் காக்கும் வகையில்,குடியிருப்புப் பகுதிகளிலுள்ள புதர்களை அகற்றுவது,சாலைகளை சீரமைப்பது உள்ள்pட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, பொள்ளாச்சியில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்டஆட்சியர் உமாநாத் தெரிவித்துள்ளார்.

கோவைமாவட்டம் வால்பாறை தேயிலைத் தோட்டக்குடியிருப்புகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள்,சிறுத்தைப்புலி மற்றும் காட்டுயானைகள் உட்பட வனவிலங்குகளின் தாக்குதலுக்குள்ளாவது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்துவரும் நிலையைத் தவிர்ப்பதற்காக,தமிழக அரசின் வழிகாட்டுதல்களுடன்,கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் திரு.உமாநாத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு.கோவைதங்கம், வால்பாறை நகரமன்றத் தலைவர் கணேசன்,ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உதவிவனப்பாதுகாவலர் தியாகராஜன்,மற்றும் தேயிலைத் தோட்டஅதிபர்கள் சங்கப்பிரதிநிதிகள்,அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள்,நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

வால்பாறை தேயிலைத் தோட்டக்குடியிருப்புகளில் வாழை,உள்ளிட்ட வனவலிலங்குகளின் கவனத்தைக் கவரும் வகையில் பயிர்களும்,நாய்,கோழி போன்ற சிறுவிலங்குககளை வளர்க்கக் கூடாது என்றும், அறிவுறுத்தப்பட்டது.
மேலும்,குடியிருப்புகளின் மிகஅருகாமையில் உள்ள புதர்கள் மற்றும் தேயிலைச் செடிகளில்,சிறுத்தைப்புலிகள் தஞ்சம் அடையும் நிலையுள்ளதால் இவற்றை அகற்ற தேயிலைத் தோட்ட அதிபர்கள் முனவரவேண்டும் என்றும் வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதேபோல்,வன எல்லையை ஒட்டியுள்ள சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டத்தைக் குறைக்கும் வகையில்,பேருந்து செல்லும் வசதியுள்ள அனைத்து சாலைகளிலும் அரசுப்போக்குவரத்துக் கழத்தின் சார்பில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவும்,இதற்காக தனியார் தேயிலைத் தோட்டங்களுக்கு சொந்தமான சாலைகளை நகராட்சி அல்லது நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் எனவும் இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.
இதனையடுத்து உடனடியாக இந்த ஆலோசனைகளை அமல்படுத்த,தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு.உமாநாத் தெரிவித்துள்ளார்.


போதையின் பாதையில் பொள்ளாச்சி..!

போதையின் பாதையில் பொள்ளாச்சி..!
பொள்ளாச்சி.டிச.14.கோவைமாவட்டம் பொள்ளாச்சியில்,கடந்த சில மாதங்களாக வலிநிவாரணிகளாக மருத்துவர்களால் பயன்படுத்தப்படும் மருந்துகளை,போதை மருந்துகளாகப் இளைஞர்கள் பயன்படுத்துவதும்,சமூக அக்கறையின்றி அவர்களிடையே இம்மருந்துகளை விற்பனை செய்து சிலர் லாபம் பார்ப்பதும் அதிகரித்துவருகிறது.காவல்துறையின் கையில் இக்குற்றவாளிகள் சிலர் சிக்கினாலும்,தொடர்கண்காணிப்பும்,கடுமையான தண்டனைகளையும் அளிக்க தமிழகஅரசு தக்கநடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதே தற்போது, சமூகஆர்வலர்களின் உரத்தகுரலாகவும் இப்பகுதியில் ஒலித்துவருகிறது.

மருத்துவத்துறையில்,அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்பொழுது வலிநிவாரணிகளாக மார்ப்பின்,பெத்தடின்,கீட்டமைன்,பெனார்கன்,மற்றும் ஃபோர்ட்வின் போன்ற மருந்துகள் மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றன.இதனால் நோயாளிகள் மயக்கத்திலாழ்ந்து வலியிலிருந்து விடுபடுகின்றனர்.
ஆனால் இம்மருந்துகள் தரும் மயக்கத்தை,போதையாகக் கருதி,தற்போது உபயோகித்துவரும் நபர்களின் எண்ணிக்கையும்,இதனை விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கையும் பொள்ளாச்சியில் அதிகரித்துவருகிறது.
பொள்ளாச்சி,கோவை,சென்னை,திருச்சி மற்றும் கேரளமாநிலத்திலிருந்தும் சிலரால்,மொத்தமாக வாங்கிவரப்படும் இம்மருந்துகள்,சொகுசுக்கார்களில் வைத்தும்,நகரத்தையொட்டி, ஆளரவமற்றும், கண்காணிப்பும் அற்ற இடங்கள், மயானங்கள்,ஆகிய பகுதிகளில்வைத்தும், வாடிக்கையான இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இம்மருந்துகளை விற்பனை செய்வதும்,ஊசிகளாகப் போடுவதும் நடைபெற்று வருகிறது.
இம்மருந்துகளை தொடர்ந்து உபயோகிப்பதால்,மூளையின் செயல்திறன் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு,தங்களுக்கு போதைமருந்துக்கான பணத் தேவைக்காக,இம்மருந்துகளுக்கு அடிமையானவர்கள் கொலைகூட செய்யத் துணிவார்கள் என்ற பகீர்த் தகவலை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் எய்ட்ஸ் உட்பட ஆட்கொல்லி நோய்களுக்குள்ளாகும் ஆபத்துகளும் அதிகம் என்றும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும் கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் போதை மருந்துகளை ஊசிகள் மூலம் செலுத்திக் கொள்ளும் இளஞர்களும், இம்மருந்துகளை விற்பனை செய்ததாக சிலரும் என கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் எட்டுபேர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தண்டணை பெற்றுள்ளனர்.இவர்களிடமிருந்து இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து பொள்ளாச்சி பகுதியிலுள்ள மருந்து விற்பனைக்கூடங்களில்,மருத்துவரின் கையொப்பமில்லாத சீட்டுகளுக்கு இம்மருந்துகளை விற்பனை செய்யக்கூடாதென போலீசார்அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால்,இளையசமுதாயத்தை சீர்குலைக்கும் போதைமருந்து விற்பனையாளர் களுக்கும்,அதனை உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கடுமையான தண்டணைகள் இல்லாவிட்டால்,மீண்டும்,மீண்டும் இக்குற்றத்தில் ஈடுபடும் வாய்ப்புகளே அதிகம். எனவே,தமிழகஅரசின் அக்கறையும்,காவல்துறையின் கடுமையான கண்காணிப்பும்,தண்டணைகளுமே இப்பிரச்சினைக்கு தீர்வு என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

Saturday, October 23, 2010

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் தொடர் மரணம்
வனத்துறையினர் அதிர்ச்சி
வால்பாறை அக்-23
வால்பாறை பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காட்டெருமை ஒன்று மரணம் அடைந்துள்ளது வனத்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 958 சதுர கிஇமீட்டர் பரப்பளவில் ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு வன விலங்குகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்திட தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனலி தேயிலை தோட்டத்தில் புலி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ஹைபாரஸ்ட் தேயிலை தோட்ட பகுதியில் ஒரு சிறுத்தைப்புலி இறந்து கிடந்தது. சென்ற வாரம் தமிழ்நாடு தேயிலை தோட்டகழக தேயிலை தோட்டத்தில் காட்டெருமை ஒன்று சேற்றில் சிக்கி இறந்தது. இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள கிணற்றில் காட்டெருமை ஒன்று விழுந்து தப்பிக்க போராடியது.
தகவலறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்திரவின் பேரில் வனவர் சின்னசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் காட்டெருமையை உயிருடன் மீட்க நடவடிக்கை மேற்கொன்டார். பல மணி நேர போராட்டத்திற்கு பின் இந்நடவடிக்கை பலனின்றி காட்டெருமை இறந்தது. இதுபற்றி கருத்து கூறிய வனவர் சின்னசாமி இறந்த ஆண் காட்டெருமைக்கு சுமார் 7 வயது இருக்கும் காட்டெருமைகளுக்கிடையே ஏற்பட்ட சன்டையில் இந்த காட்டெருமை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. கிணறு ஆழமாக இருந்ததால் காட்டெருமை தப்பிக்க எடுத்த போராட்டத்தால் களைப்படைந்து தண்ணீரை குடித்து இறந்துள்ளது. உடல் கூறு பரிசோதனைக்குப்பின் அடக்கம் செய்யப்படும் என்றார். தொடர்ந்து வன விலங்குகளின் மரணங்கள் வனத்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Sunday, August 29, 2010

வால்பாறையில் மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்.!

வால்பாறையில் தடையை மீறி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

வனச்சட்டத்தை அமலாக்க வலியுறுத்தியும் மலை வாழ் மக்கள் சங்கத் தலை வர்கள் மீது பொய் வழக்குப் போட்டதைக் கண்டித்தும் வால்பாறையில் காவல் துறையின் தடையை மீறி மலைவாழ் மக்கள் சங்கத் தின் சார்பில் எழுச்சிமிகு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

சனிக்கிழமை ஸ்டான் மோர் சந்திப்பில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத் துக்கு உடுமலை முதல் பல் வேறு மலை செட்டில் மென்டுகளில் வசிக்கக் கூடிய மலைமக்கள்இ பெண் கள்இ இளைஞர்கள்இ முதி யோர் என நூற்றுக்கணக்கானோர் பேர் திரண்டு வந்தி ருந்தனர். இதில் கோவை மாவட்ட மலைவாழ் மக்கள் சங்கச் செயலாளர் வி. சந்திரசேகர் தலைமை வகித் தார். இதில் மலைவாழ் மக் கள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம்இ விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.ஆர்.மது சூதனன்இ திருப்பூர் மாவட் டத் தலைவர் பி.மோகன்இ மாவட்டத் துணைத் தலை வர் ஏ.ராஜகோபால்இ மலை வாழ் மக்கள் சங்கத் தலை வர் கோ.செல்வம் ஆகி யோர் கண்டன உரையாற் றினர்.

வனத்துறையின் ஊழல்இ அராஜக அட்டூழியத்தை அம்பலப்படுத்தியதற்காக மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர்கள் செல்வம்இ தவசி ஆகியோர் மீது வஞ்சம் தீர்க்கும் நோக்கத்தில் பொய் வழக்குப் பதிவு செய்த வால் பாறை காவல் துறையைக் கண்டித்து தலைவர்கள் உரையாற்றினர்.

வால்பாறை சிஐடியு பொதுச் செயலாளர் ஏ.டி. கே.தனபாண்டியன்இ மலை வாழ் மக்கள் சங்கச் செயலாளர் அருள்தாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முன்னதாக இந்த ஆர்ப் பாட்டத்துக்கு அனுமதி மறுத்திருப்பதாக வால் பாறை டி.எஸ்.பி. மாடசாமி வெள்ளிக்கிழமை இரவு கடிதம் கொடுத்ததுடன்இ சங்கத் தலைவர்களுக்கு மிரட்டல் விடுத்தார். அதை யும் மீறி திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. எனினும் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற் பாடு செய்திருந்த ஒலி பெருக்கி வாகனத்தையும்இ கருவிகளையும் காவல் துறை யினர் பறித்துக் கொண்டு அராஜகமாக நடந்து கொண் டனர். இதைத் தலைவர்கள் வன்மையாகக் கண்டித்தனர். பொய் வழக்குகளை ஒரு மாத காலத்திற்குள் வாபஸ் வாங்காவிட்டால்இ மலை மக்கள் மீது காவல் துறைஇ வனத்துறையின் அடக்கு முறை தொடர்ந்தால் அடுத்த மாதம் பொள்ளாச்சி கோட் டாட்சியர் அலுவலகம் முன் பாக ஆயிரக்கணக்கான மலை மக்களைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று மாநி லத்தலைவர் பெ.சண்முகம் அறிவித்தார்.

இதில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன்இ வால்பாறை சிஐடியு தலைவர் எம்.மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். சங்கச் செயலாளர் என். மணி நன்றி கூறினார்.

காவல் துறையின் தடை யை மீறி வால்பாறை நகரின் முக்கிய வீதியில் முழக்கங் களை எழுப்பியபடி மலை மக்கள் கையில் செங்கொடி ஏந்தி கம்பீரமாக அணி வகுத்துச் சென்றதை வால் பாறை நகர மக்கள் வியப் புடன் பார்த்தனர்.

நன்றி-தீக்கதிர் நாளிதழ்-29.8.10// vedio in toutube sunpollachi


Monday, August 23, 2010

ஓணம் திருவிழா.!









பொள்ளாச்சி.ஆக.23. கோவைமாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள கேரளசமாஜம் சார்பில், கேரளாவின் பாரம்பரிய முறைப்படி ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு அத்தப்பூக்கோலமிட்டு பெண்கள் ஆடிப்பாடியும் திருவிழாவைக் கொண்டாடியது அனைவரையும் கவர்ந்தது.

கோவைமாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன்சுற்றுப்புறங்களில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலையாள மொழிபேசும் கேரளத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
இந்ந்pலையில்,கேரளாவில் இன்று முதல் பத்துநாட்களுக்கு,மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகையன்று தங்கள் சொந்த ஊரான கேரளத்திற்கு சென்று இவ்விழாவைக் கொண்டாட முடியாதவர்களுக்கென,பொள்ளாச்சியிலுள்ள கேரளசமாஜம் சார்பில்,அதன் தலைவர் சோமன் மாத்யூ தலைமையில் ஓணம் திருவிழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதனையடுத்து இன்று காலையில் கேரளசமாஜத்தில் குவிந்த கேரளமக்கள்,சமாஜத்தின்முன்பும்,தங்கள் வீடுகளிலும் பலவண்ணப்பூக்களைக் கொண்டு வெகு அழகான கோலங்களை அமைத்தனர்.பின்னர் அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகையை வாழ்த்தி வரவேற்கும் பாடல்களுடன் நடனங்களும் ஆடினர்.இந்நிகழ்ச்சியில் கேரளசமாஜத்தின் செயலாளர் வாசுதேவன்,அலுவலக செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கேரளாவில் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்படுவதுபோலவே, பொள்ளாச்சியிலும் இத்திருவிழா கொண்டாடப்பட்டது அனைவரையும் கவர்ந்தது.

பேட்டி-சோமன் மாத்யூ-தலைவர் கேரளசமாஜம்.

Friday, August 20, 2010

தியாகராஜர் ஆராதனை இசைவிழா..!


சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பில்,கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்,17.ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று நடைபெற்றது.ஆண்டுதோறும் திருவையாற்றில் நடைபெறும் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழாவினையடுத்து,இவ்விழா பொள்ளாச்சியில் மட்டுமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

சங்கீத மும்மூர்த்திகள் எனக்குறிப்பிடப்படும் ஸ்ரீ தியாகராஜர்,சியாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துசுவாமி தீட்சிதர் ஆகிய மூவருள்,ஸ்ரீ தியாகராஜருக்கு ஆண்டுதோறும் ஆராதனைவிழா நடைபெறுவது வழக்கம்.திருவையாற்றில் மிகச் சிறப்பாக நடைபெறும் இவ்விழாவில் தமிழகம் முழவதுமிருந்து நூற்றுக்கணக்கான இசைக்லைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் இசையால் ஆராதனை செய்வது போல,கோவைமாவட்டம் பொள்ளாச்சியிலும் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பில் இன்று நடைபெற்றவிழாவில்,கோவை மாவட்டம் மட்டுமின்றி,தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுமிருந்து வந்திருந்த ஏராளமான இசைக்கலைஞர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு,நாதஸ்வரம்,தவில்,மற்றும் இசைக்கருவிகளுடன் ஸ்ரீ தியாகராஜருக்கு ஆராதனை செய்தனர்.
ஒருநாள் முழவதும் நடைபெறும் இவ்விழாவில்,ஒவ்வொரு அரைமணிக்கும் ஒரு குழுவாக,இசைக்கலைஞர்கள் ஆராதனை விழாவில் பங்கேற்றுவருகின்றனர்

மேலும்,வளரும் இசைக்கலைஞர்களுக்கு உத்வேகத்தை அளிக்கவும்,இசையின் முக்கியத்துவத்தை விளக்கவும்,அதன் மீதான தொடர் ஈடுபாட்டையும் ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இவ்விழாவில்,25 ஆண்டுகளாக இசைத்துறையில் அனுபவமிக்க மூத்த கலைஞர்களுக்கு நாதப்பிரம்ம பூஷன் என்ற பட்டம் வழங்குவதோடு,இசைக்கலைஞர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் செய்வதாக சங்க நிர்வசாகிகள் தெரிவித்துள்ளனர்.


Saturday, August 14, 2010

தமிழகம் கேரளாவின் குப்பைதொட்டியல்ல..!











பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்.!

பொள்ளாச்சி.ஆக.13 தமிழக எல்லைப்பகுதிகளில் மருத்துவக்கழிவுகள் மற்றும் இறைச்சிக்கழிவுகளை தொடர்ந்து கொட்டி தமிழகத்தை தனது குப்பபைத்தொட்டியாகப் பயன்படுத்திவரும் கேரளஅரசுக்கு கண்டணம் தெரிவித்தும், இதுகுறித்து மத்திய மாநிலஅரசுகள் தக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என வலியுறுத்தி கோவைமாவட்டம் பொள்ளாச்சியில் இன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து கோவைமாவட்டம் பொள்ளாச்சி கிணத்துக்கடவு உட்பட தமிகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள எல்லைப்புறக் கிராமங்களில் லாரிகள் மூலம் இறைச்சிக்கழிவுகள்.மருத்துவக் கழிவுகள் வேதிப் பொருட்களின் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டுவந்து கொட்டிச் செல்லும்போக்கு பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது என்றும்,

இதன்மூலம் தமிழகத்தை தனது குப்பைத்தொட்டியாக கேரளஅரசு பயன்படுத்திவருவதாக பெரியார் திராவிடர் கழகம் குற்றம் சாட்டியுள்ளது.

இவ்வாறு கழிவுகளை லாரிகள் மூலம் கேரளாவிலிருந்து கொண்டுவரும்போது அவற்றை தமிழகத்திற்குள் அனுமதிக்கும் சோதனைச்சாவடிகளின் அதிகாரிகள் இங்குள்ள நீர்வளம்,நிலவளம் ஆகியவை மாசுபடுவதற்கு துணைபோகும் அவலநிலையும் தொடர்கிறது என்றும்,

எனவே இப்பிரச்சினையில் மத்திய மாநிலஅரசுகள் தலையிட்டு தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி கோவைமாவட்டம் பொள்ளாச்சியில் இன்று பெரியார்திராவிடர்கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் 100.க்கும் மேற்பட்ட பெரியார் திராவிடர் கழக்த்தொண்டர்கள் மற்றும் ம.தி.மு.க,ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

Tuesday, August 10, 2010

வாசிப்போம்.., சாதிப்போம்..!














வாசிப்போம்... சாதிப்போம்...!
சுசி திருஞானம்


நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்கள், அமைதியான மனம் இவைதான் உன்னதமான வாழ்க்கை என்று வாழ்க்கையின் தத்துவத்தை சாறுபிழிந்து தருகிறார் மகத்தான எழுத்தாளர் மார்க் ட்வெயின். நல்ல நண்பர்களைப் போலவே, இடர்மிகுந்த தருணங்களில் நமக்குத் தோள்கொடுத்து நிற்பவை நல்ல புத்தகங்கள். புத்தகங்கள் இல்லாத வாழ்க்கையை என்னால் வாழவே இயலாது என்று கூறி, புத்தக வாசிப்பை வாழ்க்கைமுறையாகவே பிரகடனப்படுத்தியுள்ளார் பேரறிஞர் தாமஸ் ஜெஃபர்சன்.
காட்டுமிராண்டிகளின் கூடாரமாகக் காட்சி அளித்த சீனாவில் அறிவுப்புரட்சிக்கு வித்திட்டவை, 2000 ஆண்டுகளுக்கு முன் கன்ஃபூசியஸ் எழுதிய புத்தகங்கள். 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்க்கோ போலோ எழுதிய "பயணங்கள்' என்ற மகத்தான புத்தகம், திரைகடல் ஓடி திரவியம் தேடும் வேட்கையை உலகெங்கும் உருவாக்கியது. அந்தப் புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு, நகைகளும் வாசனைத் திரவியங்களும் மிகுந்த இந்தியாவைத் தேடிப் பயணம் புறப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய உலகமான அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக விளங்கிய காந்தியடிகள் தனது வாழ்க்கையையே திருப்பிப்போட்ட புத்தகம் என்று ஜான் ரஸ்கின் எழுதிய "அன்ட்டு திஸ் லாஸ்ட்' புத்தகத்தைக் குறிப்பிடுகிறார். ரஸ்கினின் அந்தப் புத்தகத்தை ஒரு பயணத்தின்போது வாசித்த நான், அதன் தாக்கத்தால் அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை. கடைசி மனிதனும் சிறந்த வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற உயர்ந்த கோட்பாட்டுக்கு ஏற்ப எனது வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போதே நான் உறுதிசெய்துவிட்டேன் என்று அந்த நூல் தனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து பின்னாள்களில் விளக்கினார் காந்தியடிகள்.
நல்ல நண்பர்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருப்பதுபோலவே, நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்வதிலும் நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையைப் பயனுள்ளதாக்க எந்த நூல்கள் உதவும், உங்களுக்குப் பிடித்த துறையில் சிகரங்களைத் தொட எந்த நூல்கள் உதவும், உங்கள் குழந்தைகளின் சிந்தனையைச் செதுக்க எந்த நூல்கள் உதவும் என்பதுபோன்ற கேள்விகளுடன் தேடினால் மிகச்சிறந்த அறிவுப் புதையல்கள் உங்கள் கையில் கிடைக்கும்.
நவீன நிர்வாகக் கலையின் தலைமை குருவாக வர்ணிக்கப்படுபவர் பீட்டர் டிரக்கர். 96 ஆண்டுகள் வாழ்ந்த அவர், தனது 92 வயதுவரை எம்.பி.ஏ. மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் பேராசிரியர் பணியில் இருந்தார். இன்றைக்கும் அதிக அளவில் விற்பனையாகிவரும் 39 புத்தகங்களை எழுதியவர் அவர், பல்வேறு நாடுகளின் வெவ்வேறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு 25 கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கின.
இத்தனை ஆற்றல்மிக்க அந்த மேதை, தனது வெற்றியின் ரகசியமாகக் குறிப்பிட்டது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தைத்தான். ஒவ்வோராண்டும் ஒரு புதிய தலைப்பைத் தேர்வு செய்துகொள்வேன். அது தொடர்பான நூல்களை வாங்கிக் குவிப்பேன். அவற்றை முக்கியத்துவ அடிப்படையில் வரிசைப்படுத்தி, தினம்தோறும் குறைந்தது 4 மணி நேரம் வாசிப்பேன்.அதாவது ஆண்டுக்கு 1500 மணிநேரம் வாசிப்பு. இத்தனை விரிவான வாசிப்பு இருந்தால், ஒரு சராசரி மனிதனும்கூட மேதை ஆகிவிடமுடியும் என்பதுதான் உண்மை.
புத்தகத்தைப் புரட்டிப்பார்த்து, அதைப்பற்றிய ஓர் ஒட்டுமொத்தப் பார்வையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். புத்தகத்தின் தலைப்பு மற்றும் உபதலைப்புகள் தொடர்பாக உங்களுக்கு நீங்களே கேள்விகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்தக் கேள்விகள்தான் வாசிப்புக்கான தூண்டுகோல்கள்.
இப்போது, உங்கள் மனதுக்குள் நீங்கள் உருவாக்கியுள்ள கேள்விகளுக்கு விடைதேடியவாறு புத்தகத்தை வாசியுங்கள். தன்னிச்சையான வாசிப்புக்கும், உங்கள் கேள்விக்கு விடைதேடி நீங்கள் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்வீர்கள். மிக முக்கியமான பகுதிகளை அடிக்கோடிடுவது அல்லது பக்கக்குறிப்பு எழுதிவைப்பது நல்லது. புத்தகத்தில் இடம்பெற்றுள்ளவற்றில் நமக்கு அவசியமான தகவல்களையும் கருத்துகளையும் டைரியிலோ, நோட்டுப் புத்தகத்திலோ எழுதிவைக்க வேண்டும். இதனை ஒரு பழக்கமாக்கிக்கொண்டால், இது பின்னாள்களில் ஓர் அறிவுப் புதையலாக மாறிவிடும்.
அவ்வப்போது வாழ்க்கையில் தேவைப்படும் போதெல்லாம், பதிவுசெய்துகொண்ட கருத்துகளை நினைவுபடுத்தி நடைமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இந்த உத்தியைப் பயன்படுத்தி புத்தகங்களை வாசிக்கக் கற்றுக்கொண்டால், நமது வாசிப்புத் திறன் உயர்வதோடு மட்டுமன்றி, நாம் வாழ்க்கையில் உயர்வதும் நூறு சதம் சாத்தியமாகிவிடும்.
உலகின் அறிவுத் தலைநகரமாகப் போற்றப்படும் இந்திய நாட்டு இளைஞர்களிடமும் புத்தகம் படிக்கும் வேட்கை தூண்டப்பட்டால் வையத் தலைமைகொள்ளும் புதிய தலைமுறை இங்கே உருவாகிவிடும். வாசிப்போம்... சாதிப்போம்...!

மனசாட்சி பேசக்கூடாதா.?

மனசாட்சி பேசக்கூடாதா?

சா.ஜெயப்பிரகாஷ் First Published : 10 Aug 2010

தமிழ்நாட்டிலுள்ள 234 எம்.எல்.ஏ.க்களின் ஓராண்டுச் செலவு (சம்பளம், படிகள், சலுகைகளுக்காக) என்ன தெரியுமா? ரொம்பவும் அதிகம் இல்லை, 12 கோடியே 60 ஆயிரம்தான்.
திருச்சியைச் சேர்ந்த என். மணி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்டுப் பெற்றதால் கிடைத்துள்ள விவரங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. மாத ஊதியம் - 8,000, ஈட்டுப்படி- 7,000, தொகுதிப்படி- 5,000, தொகுப்புப் படி- 2,500, தொலைபேசிப்படி- 5,000, அஞ்சல் செலவுப்படி- 2,500, வாகனப்படி- 20,000. ஆக ஒரு எம்.எல்.ஏ.வுக்கு ஒரு மாதத்துக்கு மொத்தம் 50,000.
இத்துடன், எம்.எல்.ஏ. விடுதியில் சலுகைக் கட்டணமாக நாளொன்றுக்கு 2.50 அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு சலுகைக் கட்டணத்தில் மாதம் ஒன்றுக்கு 250 மட்டுமே. உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருந்துகள் வாங்கியதாக ரசீது கொடுத்தால், அந்தத் தொகை எம்.எல்.ஏ.க்களுக்கு திரும்பக் கிடைக்கும்.
நாளொன்றுக்கு படி 500. முக்கிய அறுவைச் சிகிச்சைகளுக்கு உதவி, பேருந்துகளில் உதவியாளர் ஒருவருடன் இலவசப் பயணம், மேலும் பயணப்படியாக ஓராண்டுக்கு 20,000, இலவச எழுது பொருள்கள் இன்னும் என்னென்னவோ...
தமிழகத்திலுள்ள 234 எம்.எல்.ஏ.க்களுக்கும் சேர்த்து சராசரியாக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் மற்றும் சலுகைகளாக ஒரு மாதத்துக்கு ஒரு கோடியே 50 ஆயிரம் செலவிடப்படுகிறது. ஆண்டுக்கு 12 கோடியே 60 ஆயிரம்.
எப்படி வளர்ந்தது தெரியுமா? கடந்த 1964 மார்ச் 31-ம் தேதி வரை எம்எல்ஏக்களுக்கு சம்பளம் வெறும் |150 மட்டும்தான். வேறெந்தப் படிகளும் கிடையாது. அந்த ஆண்டு சம்பளத்தில் 100 உயர்த்தப்பட்டு, 1971 அக்டோபர் 1-ம் தேதி முதல் ஈட்டுப்படியாக |100 சேர்க்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகுதான் இந்தப் படிப்படியான இமாலய வளர்ச்சி. இப்போதைய "ஈட்டுப்படி' 7,000.
1978 முதல் தொடங்கப்பட்ட "தொலைபேசிப்படி' | 150, இப்போது | 5,000 ஆகியிருக்கிறது. 1991 முதல் தொடங்கப்பட்ட "தொகுதிப்படி' 250, இப்போது 5,000 ஆகியிருக்கிறது. 1993-ல் தொடங்கப்பட்ட "அஞ்சல்படி' 250, இப்போது 2,500 ஆகியிருக்கிறது. 2000-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட "தொகுப்புப் படி' 2,000, இப்போது | 2,500 ஆகியிருக்கிறது. 2007-ல் தொடங்கப்பட்ட "வாகனப்படி' 5,000, இப்போது 20,000 ஆகியிருக்கிறது.
மொத்தத்தில் 1964, மார்ச் 31-ம் தேதி வரை மாதம் |150 வாங்கிக் கொண்டிருந்த எம்.எல்.ஏ.க்கள், 45 ஆண்டுகளில் "எல்லா வளர்ச்சியும்' பெற்று இப்போது தலா 50,000 பெறுகிறார்கள்.
கடந்த 8 ஆண்டுகளில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்தாத எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர்? என்ற கேள்விக்கு "நிதியை முழுமையாகப் பயன்படுத்தாத எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை' என்று பதில் வந்திருக்கிறது. நிதியேதும் நிலுவையில் இருந்தால், மாவட்ட ஆட்சியர்களே நேரடியாகத் தகவல் சொல்லி, கடிதம் கேட்டுப் பெற்றுக் கொண்டு எடுத்துக் கொள்வார்களாக இருக்கும்.
ஆனால், இந்தத் திருநாட்டில்தான் "எக்ஸிகியூட்டிவ்' நிலையில் பணியில் இருப்பவர்களும்கூட 10,000 ஊதியம் என்பதைப் பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். பல்வேறு தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இளம் ஆசிரியர்களுக்கு ஊதியம் இன்னமும் ஆறாயிரம் ரூபாயைத் தாண்டவில்லை.
உலகப் போட்டியில் இந்தியாவுக்குப் பெருமையைத் தேடித் தந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்திக்கு மாதம்தோறும் 5,000தான் ஊதியம். "தாற்காலிகப் பயிற்சியாளர்' என்பது அவரது பதவியின் பெயர். அவரால் உருவாக்கப்பட்டுள்ள வீரர்களின் மதிப்பு? உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸில் பணியாற்றும் மருத்துவத் தொழில்நுட்பப் பணியாளருக்கு மாதம்தோறும் | 6,000.
ஓர் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மற்றொரு வாகனம் மோதி இறந்த திருச்சி செந்தில்குமாருக்கு அரசு உதவி எதுவுமில்லை!
இன்னும்கூர்ந்து கவனித்தால் இந்தப் பட்டியல் நீளும். ஆனால், அதேநேரத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கான சலுகைகள், சென்னையில் வீட்டுமனை... இத்யாதி இத்யாதிகளுடன் இன்னும் பல மடங்கு உயர்ந்து கொண்டே இருக்கும்.
இவர்கள் மக்கள் பிரதிநிதிகள்தான். தொகுதி மக்களை அந்தப் பேரவையில் பிரதிபலிக்கும் பிரதிநிதிகள்தான். இங்கே குறிப்பிட்ட சில பிரச்னைகளையும்கூட அவர்கள் பேரவையில் பிரதிபலித்ததாகத் தெரியவில்லை.
சொந்த வீடில்லாத, எந்தவித சொத்தோ, வருமானமோ இல்லாத மக்கள் பிரதிநிதிகளுக்கு நாம் எவ்வளவு கொடுத்தாலும் தகும். ஆனால், அவர்கள் தங்கள் வேட்பாளர் மனுவிலேயே பதிவு செய்திருப்பதுபோல லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் இருக்கும் உறுப்பினர்களுக்கு, மக்கள் வரிப்பணத்திலிருந்து ஊதியம் கொடுப்பானேன். சேவை மனப்பான்மையுடன் மக்கள் பணியில் அவர்கள் ஈடுபடட்டுமே... இப்படியெல்லாம் நமக்குக் கேட்கத் தோன்றுவதுபோல, அவர்களது மனசாட்சியும் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்

நன்றி..தினமணி நாளிதழ்..10.8.2010

Tuesday, July 20, 2010

கேரளா வனத்துறையினரின் அத்துமீறல்.!

கேரளவனத்துறையினர் கைது செய்யப்பட்டு விடுவிப்பு.!

பொள்ளாச்சி.ஜுலை.20 கேரளமாநிலம் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியிலுள்ள மலைவாழ்மக்கள் குடியிருப்புகளில் இருந்து,கொண்டுவரப்பட்ட தெருநாய்களை,கோவைமாவட்டம் ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் விடுவித்த கேரளவனத்துறையினர்,15 பேர்,கைதுசெய்யப்பட்டு,
பின்னர் மேல்நடவடிக்கைக்காக கேரளவனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.இச்சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளமாநிலத்திலிருந்து கடந்த பல வருடங்களாக மருத்துவக்கழிவுகள், மாடு,கோழி ஆகியவற்றின் இறைச்சிக்கழிவுகள் கொண்டுவரப்பட்டு கோவைமாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகள் உள்ளிட்ட கேரளதமிழகஎல்லைகளில் கொட்டப்பட்;டு வருவது வாடிக்கையாக உள்ளது.
இதனால் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் நிலம் மற்றும் நீராதாரங்கள் மாசுபட்டுவருகின்றன.இது குறித்து பல்வேறு அமைப்புகள் தமிழக கேரளஅரசிடம் முறையிட்டும் இது வரை உரிய நடவடிக்கைகள் இல்லை..,

இந்நிலையில் கேரளமாநிலம் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளிலுள்ள மலைவாழ்மக்கள் குடியிருப்புகளில் வசிக்கும் தெருநாய்கள் கேரளவனப்பகுதியிலுள்ள மான்,முயல் உட்பட சிறுவிலங்குகளை வேட்டையாடுவதாகக் கூறி,அங்கிருந்து 8 நாய்களைப்பிடித்து வந்த கேரளவனத்துறையினர்,அவற்றை ஆனைமலைபுலிகள் காப்பத்திற்குட்பட்ட ஆழியாறு வனப்பகுதியில் விடுவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆனைமலைபுலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு வனக்காப்பாளர்கள் வேட்டைத்தடுப்புக் காவலர்கள்,வாகனஓட்டுனர் உள்ளிட்ட கேரளவனத்துறையினரான 15 பேரை சுற்றிவளைத்துக் கைதுசெய்தனர்.இதனால் இப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
புpன்னர் இதுகுறித்து கேரளவளனத்துறை உயர் அதிகாரிகளுக்கு ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.அப்போது பரபம்பிக்குளம் புலிகள் காப்பக வனக்காப்பாளர் சஞ்சயன்குமார்,பிடித்துவரப்பட்ட தெருநாய்களை கேரள எல்லைப்பகுதியிலுள்ள கிராமங்களில் விடச்சொன்னதாகவும்,ஆனால் நாய்களை கொண்டுவந்த வனத்துறை ஊழியர்கள் குடிபோதையில் தவறுதலாக தமிழக வனப்பகுதியில் விடுவித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

- பொள்ளாச்சி வனச்சரகர் வீரமணியின் ஆடியோ-யூட்யூப்-சன்பொள்ளாச்சியில் உள்ளது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட 15 பேரையும்,துறைரீதியான மேல்நடவடிக்கைக்காக கேரளவனத்துறை அதிகாரிகளிடம்,தமிழகவனத்துறை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.கேரளவனத்துறையினர் ஒட்டுமொத்தமாகக் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவக்கழிவுகளைக் கொட்டி,தமிழகத்தின் நிலம் மற்றும் நீராதாரங்களை மாசு படுத்திவந்த கேரளம்,தற்போது தமிழகவனப்பகுதிகளையும் மாசு படுத்தும் புதிய உத்தியாகவும்,சதியாகவும் தெரிகிறது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

என்ன செய்யப்போகிறது தமிழகஅரசு..?

Friday, July 9, 2010

மருத்துவக்கழிவுகளுடன் வந்த லாரி சிறைபிடிப்பு.!

மருத்துவக்கழிவுகளுடன் வந்த லாரி சிறைபிடிப்பு.!

பொள்ளாச்சி.ஜுலை.9.கேரளமாநிலத்திலிருந்து,மருத்துவக்கழிவுகளுடன் வந்த லாரி ஒன்றை,கோவை மாவட்டம் பொள்ளாச்சியருகே வழிமறித்து சிறை பிடித்த பொதுமக்கள்,சாலைமறியல் மற்மு; ஆர்ப்பாட்டம் நடத்தியதால்,பொள்ளாச்சி-திருச்சூர் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து தடைபட்டது.

கேரளமாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும் கொட்டக்கூடாது என்று,கேரளஅரசால் தடைவிதிக்கப்பட்ட மருத்துவக்கழிவுகளை,கோவைமாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மர்மலாரிகள் மூலமாகக் கொண்டுவந்து இரவோடிரவாக கொட்டிச்செல்வது வாடிக்கையாக உள்ளது.இதனால் விளைநிலங்கள் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் மாசுபடுவதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் வியாழன் அன்று இரவு பொள்ளாச்சியை அடுத்துள்ள ஸ்ரீனிவாசபுரம் அருகே,கடுமையான துர்நாற்றத்துடன் வந்த -கே.எல்.9-வி.4086 என்ற எண்ணுள்ள லாரி ஒன்றை, பொதுமக்கள் மறித்து சிறைபிடித்தனர்.இதனையடுத்து லாரியிலிருந்த ஓட்டுனர் இறங்கி,தப்பி ஓடிவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியின் முன்புறக்கண்ணாடியை உடைத்ததோடு,சக்கரங்களிலிருந்த காற்றையும் பிடுங்கிவிட்டனர். மேலும், பொள்ளாச்சி-திருச்சூர் சாலையிலுள்ள வளந்தாயமரம் சோதனைச்சாவடி வழியாக,மருத்துவக்கழிவுகளுடன் வந்த லாரியை,அதிகாரிகள் அனுமதித்ததாகக் கூறி,கண்டணம் தெரிவித்த பொதுமக்கள்,அவர்கள் மீது அரசு நடவடிக்கை தேவையென்று ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு,சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இம்மறியல் போராட்டத்தின் காரணமாக சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி டி.எஸ்.பி.முத்தழகு மற்றும் போலீசார்,மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம்,இப்பிரச்சினைக்கு தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல்போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும்,மருத்துவக்கழிவுகளைக் கொண்டு வந்த லாரியிலிருந்த கிளீனரான கேரளமாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த சுலைமான்.வயது.20, மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முனியப்பன்-வயது.35 ஆகியோரும் கைது செய்யப்பட்டு,பொள்ளாச்சி நடுவர்நீதிமன்றம் என்.2.ல் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் சிறைக்காவலில் வைக்கப்பட்டனர்.

இதனிடையே மருத்துவக்கழிவுகளை ஏற்றிவந்ததாக சிறைபிடிக்கப்பட்ட லாரியில் இருந்தது உரம் தயாரிப்பதற்காக,மாடுகளின் அரைக்கப்பட்ட எலும்புத்துகள்கள் என்பதும்,இவற்றை கேரளமாநிலம் அங்கமாலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலிருந்து,திண்டுக்கல் மாவட்டத்திற்கு,முறைப்படியான ஆவணங்களுடன் கொண்டு செல்லப்படுவதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து,லாரியின் முன்புறக்கண்ணாடியை உடைத்ததற்காக,பெரியார் திராவிடர்கழகத்தை சேர்ந்த நாகராசன் என்பவரும்,பொள்ளாச்சி மேற்கு காவல்நிலையப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


Wednesday, July 7, 2010

மாட்டுசந்தை வியாபாரிகள் கோரிக்கை.!

பொள்ளாச்சி மாட்டுச்சந்தையை புறக்கணித்த கேரள வியாபாரிகள்.!
பலகோடி வர்த்தகம் பாதிப்பு.!

பொள்ளாச்சி.ஜுலை.7 தமிழகத்திலிருந்து அதிகப்படியான மாடுகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் மாடுகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்படுவதைக் கண்டித்து,கேரள மாட்டுவியாபாரிகள்,கோவைமாவட்டம் பொள்ளாச்சி மாட்டுச்சந்தையை புறக்கணித்து,காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டதால், பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் சுமார் ரூ.4 கோடி ரூபாய் அளவில் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவைமாவட்டம் பொள்ளாச்சியில் செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் கூடும், மாட்டுச்சந்தையிலிருந்து,அடிமாடுகள் மற்றும் கறவைமாடுகள் ஆகியவற்றை,பெரும்பாலும் கேரளமாட்டு வியாபாரிகள் வாங்கி,கேரளப்பகுதிகளுக்கு, லாரிகளில் ஏற்றிச் செல்வது வழக்கம். இந்நிலையில்,மாடுகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிகப்படியான மாடுகளை ஏற்றிச் செல்வதாகக் கூறி,பல்வேறு அமைப்புகள் பிராணிகள் வதை தடுப்புச்சட்டத்தைக் காட்டி,புகார் செய்வதையடுத்து,வழக்குப்பதிவு செய்யும் பொள்ளாச்சி போலீசார், லாரிகள் மற்றும் மாடுகளைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து நடைபெற்றுவரும் இவ்வாறான வழக்குகளில்,அபராதத்தொகை செலுத்தப்பட்டு லாரிகளை திரும்பப் பெற முடிந்தாலும்,பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை கோசாலையிலிருந்து திரும்பப் பெறமுடியாததால்,பல லட்ச ரூபாய் அளவில் தங்களுக்கு நட்டம் ஏறபட்டுவருவதாக கேரளமாட்டு வியாபாரிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

இதனையடுத்து இப்பிரச்சினையில் தலையிட்டு தமிழக கேரளஅரசுகள் தக்க தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தி,கடந்த 1.7.10- முதல் பொள்ளாச்சி மாட்டுச்சந்தையை புறக்கணிக்கும் போராட்டத்தில் கேரள கால்நடை வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.மேலும்,அதிகப்படியான மாடுகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கும் வகையில் தமிழகஅரசுடன்,கேரளஅரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தி,இன்று- ஜுலை.7.-கேரள சட்டமன்றத்திற்கு ஊர்வலமாகச் சென்று மனு கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து,பொள்ளாச்சி மாட்டுச்சந்தைக்கு கேரளவியாபாரிகள் வராதநிலையில் மாட்டுச்சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது.இந்நிலை தொடர்ந்தால் பொள்ளாச்சி மாட்டுச்சந்தை மூலம் நேரடியாகவும்,மறைமுகமாகவும் பயன்பெற்றுவரும் விவசாயிகள்,லாரி ஓட்டுனர்கள்,தரகர்கள் உட்பட பலஆயிரம்பேர் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

எனவே,பொள்ளாச்சி மாட்டுச்சந்தையை நம்பியுள்ள அனைவரும் பயன்பெறும் வகையில்,20.க்கும் மேற்பட்ட மாடுகளை லாரிகளில் ஏற்றிச்செல்லும் வகையில்,உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க தமிழக,கேரள அரசுகள் முன்வரவேண்டும் என்று தமிழ்நாடு மாட்டுவியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Sunday, July 4, 2010

சாதிவாரியான கணக்கெடுப்பு தேவை ..!-கி.வீரமணி

சாதிவாரியான கணக்கெடுப்பே தேவை-கி.வீரமணி

பொள்ளாச்சி.ஜுலை.4 – தாழ்த்தப்படடவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு அமலில் இருக்கும்போது,அதற்கு அடிப்படையான சாதிவாரியான கணக்கெடுப்பையே மத்தியஅரசு எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஒத்த கருத்துள்ள அனைவரையும் இணைத்து போராட்டங்கள் நடத்தவும்,மாநாடு நடத்தவும் திராசவிடர் கழகம் ஆயத்தமாக உள்ளது என திராவிடர் கழகத்தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.

கோவைமாவட்டம் பொள்ளாச்சியில் திராவிடர்கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிமுகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திராவிடர் கழகத்தலைவர் வீரமணி,வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவித்தபின்பும்கூட,சாதிவாரியான கணக்கெடுப்பிற்கு பல அமைச்சர்களும்,கட்சித்தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

தூழ்த்தப்பட்டவர்கள்,மலைசவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு,இடஒதுக்கீடு அமலில் இருக்கும்போது,அதற்கு அடிப்படையாக உள்ள சாதிவாரியான கணக்கெடுப்பையே மத்தியஅரசு எடுக்கவேண்டும் என்று தமிழகமுதல்வர் உட்பட பலர் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே,சாதிவாரியான கணக்கெடுப்பை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளிலும் உள்ள,ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்து போராட்டங்கள் நடத்தவும், டெல்லியில் மாநாடு நடத்தவும்திராவிடர் கழகம் தயாராக உள்ளது என்று திரு.கி.வீரமணி தெரிவித்தார்;.

பேட்டி-வீரமணி-திராவிடர் கழகம். பார்க்க -youtube-sunpollachi

Monday, June 28, 2010

கல்வி கட்டணக் கொள்ளை. காங்கிரஸ் புகார்.!

அதிக கல்விக்கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை.!
காங்கிரஸ்கட்சி கோரிக்கை.!

பொள்ளாச்சி.ஜுன்.28 கோவைமாவட்டம் பொள்ளாச்சியில்,அரசு அறிவித்த கட்டணத்தைவிட,அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் மீது,தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று,கோவைதெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் பொள்ளாச்சி சார்ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தனியார் பள்ளிகளுக்கு 2010-2011.ஆம் கல்வியாண்டிற்கான கல்விக்கட்டணத்தை தமிழகஅரசு நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.இதனைத் தவிர,வேறு எந்தக்கட்டணத்தையும் தனியார் பள்ளிகள் மாணவ,மாணவிகளிடமிருந்து வச+லிக்கக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தும், கோவைமாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட சில தனியார் பள்ளிகள் மாணவர்களிடமிருந்து,அதிக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். இதனால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால்,இதனை வெளியில் தெரியப்படுத்தினால்,தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதால்,பெற்றோர்கள் புகார் தர முன்வருவதில்லை.ஆகவே,தமிழக அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதோடு,தனியார் பள்ளிகளில் சோதனைகள் நடத்தி அதிகமான அளவில் வசூல் செய்த கட்டணங்களை பறிமுதல் செய்து பெற்றோர்களிடம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும்,மாவட்டக் கல்வி அலுவலகத்திலும் தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமையில்,மாவட்டத் துணைத்தலைவர் கன்னிமுத்து,பழனி செவ்வேல்,உட்பட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் தமிழகஅரசு இப்பிரச்சினையில் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால்,காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Sunday, June 20, 2010

பொள்ளாச்சியில் திருவள்ளுவர் சிலை..!

செம்மொழி மாநாட்டை முன்னிட்டு
ரூ.1 கோடி செலவில் திருவள்ளுவர் சிலை.!


பொள்ளாச்சி.ஜுன்.20 கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கேரள எல்லையான கோபாலபுரத்தில்,நெடுஞ்சாலைத்துறை சார்பில்,சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில்,திருவள்ளுவர் சிலை மற்றும் அறிவுச்சுடர் சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மாநாட்டிற்கு முன்பாக திறக்கப்படவுள்ள இச்சிலையமைப்பு பணிகளை,நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக எல்லைகளில் உள்ள நெடுஞ்சாலைகளில்,பிறமாநில மக்களை வரவேற்கும் விதமாக,முகப்புத்தூண்கள் அமைப்பதை,தமிழக நெடுஞ் சாலைத்துறை வழக்கமாகக் கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக,கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள,கேரள எல்லையான கோபாலபுரத்தில் முகப்புத்தூண்களை அமைக்க முடிவு செய்தது.இந்நிலையில் கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டின் நினைவாக இப்பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலையி;ன் நடுவே திருவள்ளுவர் சிலையும்,சாலையின் இருபுறமும் அறிவுச்சுடர் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு,அதற்கான பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.

கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைப் போலவே,அமைக்கப்பட்டு வரும் இத்திருவள்ளுவர் சிலை அமைப்புப் பணிகள் கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாடு துவக்கத்திற்கு முன்பாகவே திறப்புவிழா செய்யப்படும் வகையில்,பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும்,இச்சிலையமைப்புப் பணிக்காக,சாலைகள் அகலப்படுத்தப்பட்டு,நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும்,நடைபாதையோரப் பூங்காக்கள்,செயற்கை நீரூற்றுக்கள்,அலங்கார வண்ணவிளக்குகளும் அமைக்கப்பட்டுவருகின்றன.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இப்பணிகளை துரிதமாக முடிக்கும் வகையில் செயல்பட்டுவருகின்றனர்.
இதனையடுத்து,தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன்,இப்பணிகளைப் பார்வையிட்டு,ஆய்வு செய்ததோடு,சில திருத்தங்களையும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மேலும் வரும் 22.ஆம் தேதி,இச்சிலையமைப்புப் பணிகள் முற்றிலுமாக முடிக்கப்பட்டு,திறப்புவிழா செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், கேரள மாநிலத்து மக்களை வரவேற்கும் விதமாகவும்,திருவள்ளுவரின் புகழை மேலும் எடுத்துக்கூறும் வகையிலும் இச்சிலை அமையும் எனறும் அவர் தெரிவித்தார்.

Monday, June 14, 2010

தந்தங்கள் பறிமுதல்.! இருவர் கைது.!

20 கிலோ எடைகொண்ட 2 தந்தங்கள் பறிமுதல்.!
இருவர் கைது.! 4 பேருக்கு வலை வீச்சு.!

பொள்ளாச்சி.ஜுன்.13 கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர்-மலையாண்டிப்பட்டணத்தில்,யானைத்தந்தங்கள் இரண்டை, வனத்துறையினர் கைப்பற்றினர்.இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் தலைமறைவான 4 பேர் தீவிரமாகத் தேடப்பட்டு வருகின்றனர்.

கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் மலையாண்டிப்பட்டணத்தில் உள்ள இருசக்கர வாகனப்பழுது பார்க்கும் பட்டறை ஒன்றின் உரிமையாளரான முகமதுபாரி என்பவர் இரண்டு யானைத்தந்தங்களை விற்பனை செய்ய முயல்வதாக பொள்ளாச்சி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து,ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் தியாகராஜன் தலைமையில் பொள்ளாச்சி வனச்சரகர் வீரமணி உட்பட வனத்துறையினர் சம்பவ இடத்தில் இன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.இச்சோதனையில்,மொத்தம் சுமார் இருபது கிலோ எடை கொண்ட இரண்டு யானைத்தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைக் கைப்பற்றிய வனத்துறையினர்,பட்டறை உரிமையாளரான முகமது பாரி மற்றும்,தந்தங்களை விலைக்கு வாங்கிச் செல்ல வந்த தேனிமாவட்டம் சிலையாம்பட்டியைச் சேர்ந்த சந்தானம் ஆகியோரை உடனடியாகக் கைது செய்தனர். இருசக்கர வாகனப்பழுது பார்க்கும் பட்டறையிலிருந்து தந்தங்கள் கைப்பற்றப்பட்டதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வனத்துறை அதிகாரிகள்,இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் நான்குபேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


Sunday, June 13, 2010

















உள்ளே தொட்டால் உசுரு இனிக்கும்
தெள்ளுதமிழ் எங்கள் தமிழ்மொழி..!
என்றென்றும் செம்மொழி- எனும்
ஏற்றம்பெறும் மொழி-என்று
அறைகூவிடும் செம்மொழி மாநாடு..!

தமிழ்இனம் தனிஇனம்- எனும்
தாரகமந்திரத்தை…

தரணிக்கு உரைத்திடும் மாநாடே
தமிழ்ச் செம்மொழி மாநாடு..!

கோவை எனும் பாவை
தமிழ்க்கோவையால் மலர்ந்திடும் மாநாடு
ஆலைகளின் நகரம்-இனி
தமிழ்சோலைகளின் நகரமாம்,

முத்தமிழ் கலைஞராம்..,
மூத்த தமிழ்அறிஞராம்
எங்கள் தமிழன்னை தரணிக்கு அளித்திட்ட
அருந்தமிழ்க் கொடையாம்..!

செந்தமிழை கனியாக்கி,
தன்னை கிளியாக்கி
தமிழ்ச்சுவை பருகியவர் மட்டுமல்ல..,

தமிழர்தம் வாழ்வுதனை
தலைநிமிரச்செய்தவர்..!

தலைதரத் துணிந்தான் தம்பிக்கு
குமணவள்ளல்-உடன்பிறப்பான
தமிழ்இனம் வாழ-தன்னையே தந்தான்
கருணைவள்ளல்..!

வண்டமிழ்வானின் தலையுச்சிதனை
முகர்ந்தவர்-அதனால் நல்லோரின்
எண்ணங்களையும் கவர்ந்தவர்..!
என-வாழும் தமிழொன்று,நாளும்
வளரும் தமிழுக்காய் நடத்தும்
தமிழ்செம்மொழி மாநாட்டில்..,

செம்மொழியெனும் மான் ஆட..,
கனிமொழியெனும் குயில்பாட
குறளமுதம் தந்தவரை..
தமிழ்க்குரல் அமுதால் வாழ்த்த வந்தோம்

வீழ்வது நாமானாலும்
வாழ்வது தமிழாகட்டும்
உடல்மண்ணுக்கு.. உயிர்தமிழுக்கு..!

வாழ்க உலகத் தமிழ்செம்மொழி மாநாடு.!

--நன்றி வணக்கம்.!
-கவிஞர்.முத்தமிழ் செல்வி.-கோவை


Tuesday, June 8, 2010

செம்மொழி மாநாடு பெயரில் மோசடி.!

செம்மொழி மாநாட்டின்பேரில்,
இலவசபட்டா மோசடி.!...,8 பேர் கைது.!

பொள்ளாச்சி.ஜுன்.8 செம்மொழி மாநாட்டை முன்னிட்டு,ஒருலட்சம் பேருக்கு இலவசவீட்டுமனைப்பட்டா வழங்கவுள்ளதாகவும்,இதேபோல் வால்பாறை பகுதியில் வசிப்பவர்களுக்கும் இலவசபட்டா வழங்க உள்ளதாகக் கூறி,அதற்காக கட்டணம் வசூலித்த எட்டுபேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம்,இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவைமாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு,நேற்று வால்பாறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 500 பேர்,இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு ஒன்றாக மனுக் கொடுத்தனர்.இவ்வாறு கொடுக்கப்பட்ட மனுக்கள் ஒரேமாதிரியாக அச்சடிக்கப்பட்டிருந்ததைக்கண்ட மாவட்ட ஆட்சியர் உமாநாத்,இம்மனுக்கள் குறித்து சந்தேகம் அடைந்தார்.

இதனையடுத்து வால்பாறை வட்டாட்சியர் சந்திரனிடம் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.இது குறித்து மனுக்கள் அளித்த பொதுமக்களிடம்,நேற்றுமாலை சந்திரன் விசாரணை மேற்கொண்டதில்,நடைபெறவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி ஒருலட்சம்பேருக்கு,தமிழகஅரசு இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் அளிக்கவுள்ளதாகவும்,இத்திட்டத்தின்கீழ் வால்பாறை பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் வீட்டுமனை அளிக்கப்படவுள்ளதாகவும்,வால்பாறை நகராட்சி,ஏழாவது வார்டு உறுப்பினர் காளிமுத்து உட்பட சிலரைக்கொண்ட கும்பல் ஒன்று,இதற்கு கட்டணமாக தலா ரூ.100 முதல்,ரூ.500 வரை,1960 பேரிடம் வசூல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அரசால் அறிவிக்கப்படாத திட்டத்தின் பெயரைக்கூறி,பல லட்சரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளதை அறிந்த வட்டாட்சியர் சந்திரன் இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வால்பாறை காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து,தமிழகஅரசின் உத்தரவுப்படி,வழக்குப் பதிவு செய்த வால்பாறை போலீசார்,வால்பாறை நகராட்சி உறுப்பினர்,காளிமுத்து,சத்துணவு அமைப்பாளராகவுள்ள ஸ்டீபன்,குரங்குமுடி பகுதியைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் அன்பழகன்,செல்வம்,ஸ்டான்மோர் பகுதியைச் சேர்ந்த இருதயராஜ்
ராஜேந்திரன்,இஞ்சிப்பாறையைச் சேர்ந்த துரைப்பாண்டி,இராமர் ஆகிய எட்டுபேரையும் இரவோடு இரவாக கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்படாத,இலவச பட்டாகோரும் ஏராளமான விண்ணப்பங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பேட்டி-மாடசாமி-வால்பாறை டி.எஸ்.பி.

இம்மோசடியில் ஈடுபட்டுள்ள தமிழ்செல்வி மற்றும் மும்மூர்த்தி ஆகியோரும் வால்பாறை போலீசாரால் தேடப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,ருகெவை மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர்.

செம்மொழி மாநாட்டின் பெயரால் நடைபெற்ற இச்சம்பவம்,இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற தனிநபர்கள் அரசின் நலத்திட்டங்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி,பொதுமக்களை அணுகும்போது,பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும்,திட்டங்கள் குறித்து அரசுத்துறை அதிகாரிகளிடம் விசாரித்து உண்மையை அறிந்து கொள்ளவேண்டும் என்றும் வால்பாறை வட்டாட்சியர் சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
பேட்டி-சந்திரன்-வட்டாட்சியர்.



Monday, April 12, 2010

லஞ்சம் பெற்ற கிராம் நிர்வாக அலுவலர் கைது.!


பொள்ளாச்சி.ஏப்.12.கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள காட்டம்பட்டி பகுதி விவசாயி ஒருவருக்கு சான்றிதழ்கள் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராமநிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புப் போலீசார் பொறிவைத்துப் பிடித்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள காட்டம்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார்.இவர் தனது தோட்டத்தில் அமைத்திருந்த சொட்டுநீர்ப் பாசனத்திற்கான மானியத்தை தமிழகஅரசிடமிருந்து பெறுவதற்காக முயற்சித்து வந்தார்.இதற்கான சிட்டா,அடங்கல் உள்ளிட்ட சில சான்றிதழ்களைப் பெறுவதற்காக அப்பகுதி கிராமநிர்வாக அலுவலரான காளிமுத்துவிடம் சென்று கேட்டபோது, அச்சான்றிதழ்களை வழங்குவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சமாகத் தரவேண்டும் என காளிமுத்து வற்புறுத்தியுள்ளார்.

இதனால் அதிருப்தியுற்ற சிவக்குமார் கோவை லஞ்சஒழிப்புப் போலீசாரிடம் புகார் செய்தார்.இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சண்முகப்ரியா தலைமையில் காட்டம்பட்டி கிராமநிர்வாக அலுவலகத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்,அருகாமையில் மறைந்திருந்து,சிவக்குமாரிடம்,காளிமுத்து ரசாயனம் தடவப்பட்ட ரூ.2.ஆயிரம் ரொக்கப்பணத்தை லஞ்சமாகப் பெற்றபோது, கையும் களவுமாகப் பிடித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கிராமநிர்வாக அலுவலரைக் கைது செய்துள்ளனர்.இதனாதல் அப்பகுதியில் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Wednesday, March 17, 2010

குண்டம் திருவிழா..!

மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா.!

பொள்ளாச்சி.மார்ச்.17 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஜமீன்ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 100.க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செய்தனர்

கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஜமீன்ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 2.ஆம் தேதி சக்திகும்ப ஸ்தாபனத்துடன் துவங்கியது.இதனையடுத்து பூவோடு வைத்தல்,தீர்த்தம் கொண்டுவருதல்,உட்பட பல்வேறு சிறப்புபூஜைகளும்,அபிஷேக ஆராதனைகளும் தொடர்ந்து நடைபெற்றுவந்தன.

இதனையடுத்து விழாவின் சிறப்புஅம்சமான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இதனை முன்னிட்டு நேற்று இரவு முதல் வளர்க்கப்பட்ட குண்டத்திற்கு,இன்று காலை சிறப்புபூஜைகள் செய்யப்பட்டதையடுத்து,குண்டத்தில் இறங்குவதாக வேண்டுதல் செய்திருந்த 100.க்கும் மேற்பட்ட பக்தர்கள்,மாகாளியம்மன் குறித்த சரணகோஷத்துடன்,வரிசையாக குண்டத்திலிறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் ஊத்துக்குளி முன்னாள் பேரூராட்சித்தலைவர் யு.கே.கிருஷ்ணசாமி,கோவிலின் பரம்பரை அறங்காவலர் மற்றும் நிர்வாகிகள் உட்பட,ஊத்துக்குளி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.மேலும்,இப்பகுதிக்கு சுற்றுலாப்பயணிகளாக வந்திருந்த அயல்நாட்டவர் சிலரும் பார்வையாளர்களாக இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையப் போலீசார் பாதுகாப்புபணிகளை மேற்கொண்டனர்.

Tuesday, March 16, 2010

ஆனைமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டது.!

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு
சுற்றுலாப் பயணிகள் செல்லத்தடை.!

பொள்ளாச்சி.மார்ச்.16 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்கு,சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு,மார்ச்.16 முதல் ஏப்ரல் 15.வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.கோடை காலம் துவங்கியதை முன்னிட்டு,வனப்பகுதிகளில் காட்டுத் தீ பரவாமலிருக்கவும்,விலங்குகளுக்கு இடையூறின்றி இருக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம்.இச்சரணாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான யானைகள், மான்கள்,காட்டெருமைகள்,குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் அரியவகை மரங்களும் உள்ளன.இவற்றைப்பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வருவதுண்டு.
தற்போது கோடைகாலம் முன்னதாகவே தொடங்கியதையடுத்து, சரணாலயப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.மேலும் குரங்கு அருவி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளிலும் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில் வனத்தின் அடர்ந்த பகுதிகளிலுள்ள விலங்குகள் நீர் மற்றும் உணவைத்தேடி பல்வேறு இடங்களுக்கும்,இடப்பெயர்ச்சியை மேற்கொள்ளும் என்பதால்,இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளால் விலங்குகளுக்கு இடையூறு ஏற்படாமலிருக்கவும்,
வறட்சியின் காரணமாக,வனப்பகுதிகளிலுள்ள மரங்கள் மற்றும் செடி,கொடிகள் தனது பசுமையை இழந்து காய்ந்து,எளிதில் தீப்பிடிக்கும் வகையில் உள்ளதால்,இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளால் காட்டுத்தீ ஏற்படும் அபாயத்தை தவிர்க்கும் வகையிலும்,மார்ச்.16.ஆம் தேதி முதல்,ஏப்ரல.15 வரை,ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சரணாலயம் திறப்பதற்கான மறுதேதி குறித்து தமிழகஅரசின் உத்தரவு வரும்வரை,இத்தடை நீடிக்கும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Saturday, March 13, 2010

காதை மூட முடியுமா.? முடியுமே..

வால்பாறையில் வித்தியாசமான திறமையைக் கொண்ட சிறுவன்.!

பொள்ளாச்சி.மார்ச்.13 கோவை மாவட்டம் வால்பாறையில் வித்தியாசமான திறமயுடைய பள்ளிச்சிறுவன்,ஒருவன்,சக மாணவர்களையும்,அப்பகுதி பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறான்.

ஏதேனும் காரணத்திற்காக,நம்மை நோக்கி வாயை மூடிக்கொள் என்றால்,உதடுகளை இறுக்கியோ,அல்லது கைகளாலோ நமது வாயை மூடிக்கொள்வோம்.இதை மட்டுமே சாதாரணமாக அனைவரும் செய்யமுடியும். ஆனால் இதேபோல காதுகளை மூடிக்கொள்ளச் சொன்னால் என்னசெய்வது..?

அதனையும் செய்ய முடியும் என்றால் ஆச்சரியம்தானே..?

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள ஈட்டியார் எஸ்டேட் தொழிலாளியான கிருஷ்ணனின் மகன் பிரேம்குமார்.இவன் இங்குள்ள பள்ளியில் 4.ஆம் வகுப்பு படித்துவருகிறான். சாதாரணமாக மற்ற குழந்தைகளைப்போல இவனது உடல் உறுப்புகள் இருந்தாலும்,இவனது காதுகள் மட்டும் வழக்கத்தைவிட சற்று பெரிதாக உள்ளது.

இதனை இவன் பயன்படுத்தும் விதம்தான் மற்றவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. இவனுடைய காதுகளை இவன் விரும்பும்போது,செவியின் துவாரத்தை அடைக்கும்படியாக மூடிவைத்துக்கொள்ள முடிகிறது.இதனால், தான் படிக்கும்போதோ,தேவையில்லாத சப்தத்தை கேட்கவிரும்பாதபோதோ தனது காதுகளை அவன் மூடி வைத்துக்கொள்கிறான்.

எவ்வித சப்தமும் கேட்காத வகையில் கிருஷ்ணனின் காதுகளைப் பயன்படுத்த முடிவது சக மாணவர்களையும்,அப்பகுதி பொதுமக்களையும் ஆச்சரியப்படுத்திவருகிறது.

தொலைக்காட்சிகளில் வரும் பல்வேறு சாதனை நிகழ்ச்சிகளைப் பார்த்த தனக்கு,ஏதேனும் வித்தியாசமாக செய்யவேண்டும் என்று தோன்றியதாகவும்,அதற்கு வசதியாக தனது காதுகள் பயன்பட்டது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் கிருஷ்ணன் கூறுகிறான். பேட்டி-கிருஷ்ணன்

சிறுவனின் ஆர்வத்திற்கு உதவும் வகையில் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவருவதாகவும் அவனது ஆசிரியைகளும் கூறுகின்றனர்.பேட்டி-ஆசிரியை

Friday, March 5, 2010

பா.ம.க.விற்கு எதிராக மா.கம்யுனிஸ்ட் ஆர்ப்பாட்டம்.!







பொள்ளாச்சி.மார்ச்.5 மறைந்த மா.கம்யூ.தலைவர் டபிள்யூ.ஆர் வரதராஜனின் இறப்பு குறித்து சர்ச்சைக்கிடமான வகையில் செய்தி ஒளிபரப்பியது தொடர்பாகவும், சென்னையிலுள்ள மா.கம்யூ அலுவலகம் பாட்டாளி மக்கள் கட்சியினரால் தாக்கப்பட்டதற்கு கண்டணம் தெரிவித்தும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மா.கம்யூ.தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.ஆர் வரதராஜன் மரணமடைந்தார்.அவருடைய இறப்பின் காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. விசாரணை இன்னும் முழுமையடையாத நிலையில் அவருடைய இறப்பு குறித்து சர்ச்சைக்கிடமான வகையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று,நேற்;று செய்தி ஒளிபரப்பியது.மேலும் சென்னையிலுள்ள மா.கம்யூ அலுவலகம் பா...வினரால் தாக்கப்பட்டது.
இதனால் கடும் அதிருப்தியுற்ற மா.கம்யூ.தொண்டர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகம் முன்பாக,பா...விற்கு கண்டணம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி தாலுக்கா மா.கம்யூ.செயலாளர் கே.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு பா...விற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
திடீரென்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவஇடத்திற்கு வந்த போலீசார்,அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போராட்டக்குழுவினரைக் கைது செய்தனர்.





பொள்ளாச்சி.மார்ச்.5 பெட்ரோல்,டீசல் விலைஉயர்வு,ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி அகிலஇந்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து போராட்டக்குழுவினர் பெண்கள் உட்பட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல்,டீசல் விலைஉயர்வு பொதுவிநியோகத்திட்டத்திலுள்ள முறைகேடுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றும்,ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்யவேண்டும் லாபம் ஈட்டும் பொதுத்துறை பங்குகளை விற்கக் கூடாது,தொழிலாளர் நலச்சட்டங்களை கறாராக அமல்படுத்த வேண்டும் என்றும் அத்தியாவசியப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடைவிதிக்கவேண்டும் என்பதுட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல்போராட்;டங்கள் நடைபெற்றன.
சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஹெச்.எம்.எஸ், பி.எம்.எஸ் மற்றும் ஐ.என்.டி.யு.சி ஆகிய தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சங்கங்களின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உட்பட 200.பேர் கலந்து கொண்டனர்.

பின்னர் பொள்ளாச்சி காந்திசிலை அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்குழுவினரை போலீசார் கைது செய்தனர்.இதனால் கோவை சாலையில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து தடைபட்டது.

Thursday, February 25, 2010

பொள்ளாச்சி ஆழியாறு பார்வை மாடம்..!

சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்த பார்வைமாடம்.!

பொள்ளாச்சி.பிப்.25 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு அருகே,ஆனைமலை புலிகள் காப்பகத்தால் அமைக்கப்பட்டுள்ள வனஉயிரின விளக்கமையமும்,பார்வை மாடமும் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.வனம் மற்றும் வனஉயிரினங்களைக் குறித்து தாங்கள் அறிந்து கொள்ள இம்மையம் பெரிதும் உதவுவதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு சோதனைச்சாவடி அருகே அமைந்துள்ளது வனஉயிரின விளக்கமையம்.சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் ஆனைமலை புலிகள் காப்பகத்தால் அமைக்கப்பட்டுள்ள இம்மையத்தில்,இச்சரணாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மலைவாழ்மக்கள்,வனஉயிரினங்கள் மற்றும் வனத்தில் உள்ள தாவரவகைகள்,பூக்கள்,நீர்வாழ் விலங்கினங்கள் ஆகியவற்றைக்குறித்து விளக்கப்படங்களும்,மாதிரிச் செடிகொடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இளைப்பாறும் வசதிக்கான இருக்கைகளுடன் ஒரு பூங்காவைப் போன்ற அழகுடனும் அமைந்துள்ள இம்மையத்தின் சிறப்பம்சங்களுள் ஒன்றாக,இங்கு அமைக்கப்பட்டுள்ள பார்வைமாடம் விளங்குகிறது.பாதுகாப்பான படிக்கட்டுகளுடன் அமைந்துள்ள இக்போபுரத்தின் மீதிருந்து,ஆழியாறு அணையின் தோற்றம்,கிராஸ்ஹில்ஸ் எனப்படும் புல்மலை,வனத்தின் பசுமை,பல்வேறு வண்ணங்களில் அழகு காட்டும் மரங்கள் மற்றும் பறவைகள் என இயற்கை அழகை ரசிக்கமுடிவதால்,இக்கோபுரத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
மேலும்,இம்மாடத்தின் மீது நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.இம்மையத்தை சுற்றிப்பார்ப்பதன் மூலம் ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியின் தன்மையை அறிந்து கொள்ளமுடிவதாகவும்,அது தங்களுக்கு ஒரு படிப்பனையாகவும் உள்ளது என சுற்றுலாப்பயணிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும்,விடுமறைநாட்களில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவர்களும் இங்குவந்து இம்மையத்தை ஆவலுடன் சுற்றிப்பார்த்துவிட்டு செல்வதாகவும் வனத்துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.


பி.ஏ.பி.காண்டூர் கால்வாய் சீரமைக்க கோரிக்கை.. !


பொள்ளாச்சி.பிப்.25 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள பி.ஏ.பி. எனப்படும்,பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்திற்குட்பட்ட காண்டூர் கால்வாயில் ஏற்படும் நீர் சேதாரத்தை தடுக்கும் வகையில்,இக்கால்வாயை முற்றிலுமாகப் புதுப்பித்துதரவேண்டும் என்று,விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி,உடுமலை மற்றும் திருப்பூர்,ஈரோடு,கரூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள சுமார் 4.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள்,பி.ஏ.பி.திட்டத்தின்கீழ்,உடுமலை திருமூர்த்தி அணைவழியாக பாசனவசதிபெற்றுவருகின்றன.
இந்நிலையில்,இப்பாசனத்திட்டத்திற்கு அடிப்படையாக பரம்பிக்குளத்திலிருந்து கொண்டுவரப்படும் நீர்,சர்க்கார்பதி மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து 49.3 கி.மீ தூரத்திற்கு உடுமலை திருமூர்த்தி அணைவரையுள்ள காண்டூர் கால்வாய் வழியே செல்கிறது.
மேற்கு தொடர்ச்சிமலையின் அடர்ந்த வனப்பகுதிகளின் நடுவே அமைந்துள்ள இக்கால்வாயின் இருபுறமும் அடர்ந்து வளர்ந்த மரங்களின் வேர்கள் துளைப்பதாலும்,அவ்வப்போது ஏற்படும் சிறுஅளவிலான நிலச்சரிவுகளின் காரணமாகவும், கால்வாயின் பெரும்பகுதி கடுமையான சேதத்திற்குள்ளாவதும், அதனை பொதுப்பணித்துறையினர் சீரமைப்பதும் வாடிக்கையாக உள்ளது.

இவ்வாறு சேதமுற்ற பகுதிகளால் சர்க்கார்பதியிலிருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்பட்டால்,திருமூர்த்தி அணைக்கு 700 முதல் 750 கனஅடிநீர் மட்டுமே சென்று சேர்கிறது.
எனவே இக்கால்வாயினை வலுவான நிலையில் பொதுப்பணித்துறையின் மத்pப்பீட்டின்படி,ரூ.125 கோடி செலவில் முழுமையாக புதுப்பித்துதர வேண்டும் என பி.ஏ.பி.விவசாயிகள் சார்பில்,திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக்குழுத் தலைவர் மெடிக்கல் பரமசிவம் கோரிக்கை விடுத்துள்ளார்.


Wednesday, February 17, 2010

நீதி வேண்டும்..,இளம்பெண் அனிதா புகார்..!

ஏமாற்றிவிட்ட காதலனை,திருமணம் முடித்துவைக்கக்
கோரி,சார்ஆட்சியரிடம் மனு.!

பொள்ளாச்சி.பிப்.17. நான்கு வருடமாகக் காதலித்துவிட்டு,தன்னை ஏமாற்றிவிட்ட காதலனை தனக்கு திருமணம் முடித்துவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி,சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு தன்பெற்றோருடன் வந்து, இளம்பெண் ஒருவர் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள பொன்மலையூர் பகுதியைச் சேர்ந்த வாசுவின் மகள் அனிதா.இவர் அதே பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் என்பவரை கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்துவந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு,தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறி,அனிதாவை தனிமையில் வரவழைத்து,அனிதாவை மிரட்டி தகாதஉறவு வைத்துக் கொண்ட சசிக்குமார்,பின்னர் அவரைத் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இதனை அடுத்து பொள்ளாச்சி அனைத்துமகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த அனிதா,புகார் கொடுத்து பலதினங்களாகியும்,மகளிர் காவல் நிலையப் போலீசார் உரியநடவடிக்கை எடுக்கவில்லையென்றும்,ஒருதலைப்பட்சமாக விசாரணை மேற்கொண்டு சசிக்குமார் மீத எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்துவதாகவும்,மகளிர் காவல்நிலையப் போலீசார் மீது குற்றம்சாட்டிய அனிதா,இன்று-17.2.10-மாலை- பொள்ளாச்சி சார்ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்து,புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் மகளிர் காவல்நிலையப் போலீசார் மீது தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்,தன்னை ஏமாற்றிய காதலனை தனக்கு திருமணம் செய்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அனிதா தெரிவித்திருந்தார்.
தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் வந்து இளம்பெண் ஒருவர், தன்னைக்காதலித்து ஏமாற்றிய காதலனை தனக்கு மணம்முடித்து வைக்கவேண்டும் என்று கோரி மனுஅளித்த சம்பவம்,இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, February 6, 2010

நடிகர் ஜெயராம் மன்னிப்பு கேட்க வேண்டும்.!


நடிகர் ஜெயராம் பகிரங்க மன்னிப்புகோர வேண்டும்.
ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்.!

பொள்ளாச்சி.பிப்.6 நடிகர் ஜெயராம் கேரளாவில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது,தமிழ்ப் பெண்களைக் குறித்து,தரக்குறைவாகப் பேசியதைக் கண்டித்தும்,இதற்காக அவர் பகிரங்கமாக தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி,கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆதித் தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிரபல மலையாளம் மற்றும் தமிழ்நடிகரான ஜெயராம் கேரளாவில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.அப்போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜெயராம்,தமிழ்ப் பெண்களைக் குறித்து தரக்குறைவாக பேசினார்.இது ஒளிபரப்பும் ஆனது.
இதனைத் தொலைக்காட்சியில் கண்டபோது,தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும்,ஜெயராமுக்கு எதிராக கண்டணங்கள் தெரிவிக்கப்பட்டன.
இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று ஆதித்தமிழர் பேரவை அமைப்பின் சார்பில்,அதன் மாவட்ட நிர்வாகியான தி.செ.கோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்ப்பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசிய நடிகர் ஜெயராம் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்,அதுவரை வணிக நிறுவனங்கள் அவரை விளம்பரத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
பொள்ளாச்சி கடைவீதியிலுள்ள பிரபல வணிகநிறுவனம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால்,அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி கிழக்கு போலீசார், அனுமதியின்றி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால்,போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டபோது,இருதரப்பிற்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் நடைபெற்றது.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.பின்னர் அவர்களைப் போலீசார் கைது செய்தனர்.


Friday, February 5, 2010

பொள்ளாச்சி.பிப்.5 கோவை மாவட்டம் பொள்ளாச்சி.பி.ஏ.கல்லூரி மாணவியர் மற்றும் மாணவர்கள்,பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு இரத்ததானம் செய்தனர்.ரத்ததானம் செய்ய முன்வந்த மாணவிகளுக்கு,கல்லூரித்தலைவர் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள புளியம்பட்டி பி.ஏ.கல்லூரி மாணவிகள்,பொள்ளாச்சி அரசுமருத்துவமனைக்கு,இரத்ததானம் அளிக்க விருப்பம் தெரிவித்ததையடுத்து,அரசு மருத்துவமனையின் நம்பிக்கை மையம் மற்றும் சிவா பாராமெடிக்கல் கல்லூரி ஆகியவை இணைந்து இன்று ரத்ததான முகாம் ஏற்பாடு செய்தனர்.
இம்முகாம் துவக்கவிழாவின்போது,பி.ஏ.கல்லூரியின் தலைவர் அப்புக்குட்டி,முதலில் இரத்ததானம் செய்து துவக்கிவைத்தார்.இதனையடுத்து 30.க்கும் மேற்பட்ட மாணவிகள்,தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டதையடுத்து,தங்கள் இரத்தத்தை தானமாக வழங்கினர்.
புpன்னர்,மாணவர்களும் தொடர்ந்து ரத்ததானம் செய்தனர். இம்முகாமில் பங்கு கொண்ட அரசுமருத்துவர்கள் காஜாமைதீன்,மணிகண்டன் ஆகியோர் மாணவ,மாணவியரிடம் பரிசோதனை மேற்கொண்டனர்.மேலும் 200.க்கும் மேற்பட்டோருக்கு இரத்தத்தின் மாதிரிவகைகளும் கண்டறியப்பட்டதுடன்,மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இம்முகாமின் முடிவில் மொத்தம் 75 யூனிட் இரத்தம் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி நகருக்கு முன்மாதிரியாக,இரத்ததானம் அளிக்க முன்வந்த கல்லூரிமாணவியர் மற்றும் மாணவர்களுக்கு அக்கல்லூரியின் தலைவர் அப்புக்குட்டி மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

Sunday, January 31, 2010

just re..laaax.- மேக்கப் போட்டபின் சில உருவங்கள்..!
















































மத்திய அரசே,இது நியாயமா.? துருவனின் குமுறல்..!

ஆபரேஷன் கிரீன் ஹன்ட்”--"OPERATION GREEN HUNT" என்றால் என்னவென்று தெரியுமா..?.நக்சல்பாரி இயக்கத்தையம்,மாவோயிஸ்ட் கட்சியையும் நசுக்கி ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு அறிவித்துள்ள உள்நாட்டுப்போரின் பெயர்தான் இது.
ஜார்கண்ட்,சட்டீஸ்கர்,ஒரிஸ்ஸா, மற்றும் மகாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பரவியிருக்கும் தண்டகாருண்யா காடுகளிலிருந்து மாவோயிஸ்ட கொரில்லாக்களை ஒழித்துக்கட்டுவதே,இந்த தாக்குதலின் நோக்கம் என்று,மத்திய உள்துறை அமைச்சரான “மாண்புமிகு” ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.

மேலோட்டமாகப் பார்த்தால்,அதில் என்ன தவறு.?,என்றுதான் உங்களுக்கு கேட்கத்தோன்றும். ஆனால் இதன் பின்னனியில் உள்ள குமட்டும் அரசியலும்,அதன் கோர நோக்கமும் நீங்கள் ஒரு இந்கியக்குடிமகன் என்பதால் அறிந்து கொள்ளத்தான் வேண்டும்.தொடர்ந்து படியுங்கள்.

அடர்ந்த காடுகளை அழித்து இராணுவத் தலைமையகமும், விமானப் படைத்தளமும் அங்கே விரைந்து உருவாக்கப்படுகின்றன.சிப்பாய்களுக்கு கொரில்லா எதிர்ப்பு இராணுவப்பயிற்சி அளிக்கப்படுகிறது.சி.ஆர்.பி.எஃப்,கோப்ரா,சி.60,கிரேஹவுண்ட்ஸ்,இந்திய-திபெத் எல்லைப்படை,நக்ஸலைட் எதிர்ப்பு அதிரடிப்படை என விதவிதமான அரை இராணுவப்படைகளைச் சேர்ந்த ஒரு லட்சம் சிப்பாய்கள் குவிக்கப்பட்டு தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படுகிறது.இந்திய இராணுவ ஹெலிகாப்டர்களும்,அமெரிக்க இராணுவ செயற்கை;கோள்களும் விண்ணிலிருந்து காடுகளை வேவு பார்க்கின்றன.இந்திய இராணுவஅதிகாரிகள் போரை வழிநடத்துகிறார்கள்.சொந்த நாட்டின் மக்களுக்கு எதிராக இந்த மண்ணின் பூர்வீகக் குடிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும்,இந்தப் போருக்கு மத்தியஅரசு ஒதுக்கியிருக்கும் நிதி ரூ.7300 கோடி…,
மாவோயிஸ்ட்டுகளை
ஒழிப்பதற்காக ஏற்கனவே சட்டீஸ்கர் அரசு உருவாக்கியிருக்கும் சல்வாஜுடும் என்ற கூலிப்படை,கடந்த நான்கு ஆண்டுகளில் 700 கிராமங்களை எரித்து,மூன்று லட்சம் பழங்குடி மக்களை விரட்டியிருக்கிறது.ஐம்பதாயிரம் பழங்குடி மக்கள் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
தற்போது ஆபரேஷன் கிரீன் ஹன்
ட்”டின் விளைவாக மேலும் பலஆயிரம் பழங்குடிமக்கள் காடுகளைத்துறந்து ஓடுகிறார்கள்.
“இலங்கை ராணு
வத்தின் இறுதிப்போர்தான் எங்களுக்கு வழிகாட்டி” என்று வக்கிரமாகப் பிரகடனம் செய்திருக்கிறார் சட்டீஸ்கார் மாநில டி.ஜி.பி.விஸ்வரஞ்சன்.

இந்தப் போர்வெறிக்குள் புதைந்திருக்கும் ரகசியம் இதுதான்.தண்டகாரண்யாவின் காடுகளிலும்,மலைகளிலும் அற்புதமான அரிய கனிமவளங்கள்,புதைந்து கிடக்கின்றன.உயர்தரமான இரும்புத்தாது,செம்பு தங்கம்,வைரம்,அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்சைட்,சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான சுண்ணாம்புக்கற்கள்,நிலக்கரி,பளிங்கு கிரானைட்,சிலிக்கா,குவார்ட்சைட் போன்ற 28 வகையான கனிமவளங்களும்,காட்டுவளங்களும்,நீர்வளமும் நிறைந்திருக்கின்றன.
பன்னாட்டு கம்பெனிகளும் இந்தியத் தரகு முதலாளிகளும் இஷ்டம்போல இந்தப்புதையலை அள்ளிச்செல்லமுடியாமல் குறுக்கே நிற்கிறார்கள் மாவோயிஸ்ட் கொரில்லாக்கள்.சிதம்ரத்தின் கொலை வெறிக்கு காரணம் இதுதான்;..!
ஆம்,தண்டகாரண்யாவின் காடுகள் மலைகள்,ஆறுகள் அனைத்தையும் அம்மண்ணின் மைந்தர்களான ப
ழங்குடி மக்களுக்கு தெரியாமலேயே அறுத்துக் கூறுகட்டி விற்றுவிட்டது இந்தியஅரசு.
ஸ்டெரிலைட் கம்பெனியின் தாய் நிறுவனமான வேதாந்தா என்ற பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனத்திற்கு ஒரிஸ்ஸா அரசு 40 கிலோமீட்டர் நீளமுள்ள நியாம்கிரி மலையை தா
ரை வார்த்திருக்கிறது.இந்த மலையிலுள்ள பாக்சைட் தாதுவின் இன்றைய மதிப்பு 200 லட்சம் கோடி ரூபாய்.இதற்கு அரசாங்கம் பெறவிருக்கும் ராயல்டியோ வெறும் 7 சதவீதம் மட்டுமே. இந்தியாவின் மொத்த நிலக்கரி இருப்பில் 16 சதமும், இரும்புத் தாதுவில் 20 சதமும்,சட்டீஸ்கர் மாநிலத்தில் புதைந்திருக்கின்றன. இவற்றை டாடா,ஜிண்டால்,போன்றவர்களுக்கு கிரையம் எழுதித்தந்து விட்டது அம்மாநிலஅரசு.
இரும்புத்தா
துவின் இன்றைய உலகச்சந்தை விலை ஒருடன்னுக்கு 210 டாலர்.இது இந்திய மதிப்பில் சுமார் 10 ஆயிரம்ரூபாய்.ஆனால் இம்முதலாளிகள் அரசுக்கு, தரவிருக்கும் விலை டன்னுக்கு 27 ரூபாய் மட்டுமே.இதைப்போல ஒன்றிரண்டு அல்ல,நூற்றுக்கணக்காண ஒப்பந்தங்கள்..!
பழங்குடி ம
க்களின் கிராமங்களும் விட்டுவைக்கப்படவில்லை.அவர்களுக்கே தெரியாமல் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டிருக்pன்றன.
சுpன்னஞ்சிறு ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும்,ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் நிலம் இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாறிவிட்டது.இங்கிருந்து மட்டும் பத்துலட்சம் பழங்குடி மக்களும்,
விவசாயிகளும் வெளியேற்றப்பட இருக்கிறார்கள்.டாடா,பிர்லா,ஜிண்டால்,எஸ்ஸார்,மிட்டல் போன்ற தரகு முதலாளிகளும்,வேதாந்தா போஸ்கோ,ஹோல்சிம்,லபார்க்,ரியோடின்ட்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் தண்டகாரண்யா காடுகளின் மீது பிணந்தின்னிகளைப் போல வட்டமிடுகிறார்கள்.

பழங்குடி மக்களோ வெளியேற மறுக்கிறார்கள். போஸ்கோ,டாடா, வேதாந்
தா,மிட்டல்,ஸ்டெரிலைட்,ரிலையன்ஸ்,ஜிண்டால் என ஒவ்வொரு நிறுவனத்திற்கும் எதிராகவும்,ஆங்காங்கே உள்ள மக்கள் போராடுகிறார்கள்.அலுமினிய உருக்காலையை வேதாந்தா நிறுவனம் கட்டி முடித்துவிட்டது. ஆனால் பாக்சைட் மலையை நெருங்க முடியவில்லை.கோபால்பூரில் டாடாவின் இரும்பாலை தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது..ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கம்தோண்டி தங்கமும்,பிளாட்டினமும் எடுக்கவந்த ஜிண்டால் நிறுவனம் அங்கே நுழையவே முடியவில்லை.இவையெல்லாம் மாவோயிஸ்ட் ஆயுதக்குழுக்கள் நடத்திய தாக்குதல்கள் அல்ல.தங்கள் மண்ணைப் பறிக்கும் மறுகாலனியாக்கத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள மக்களின் போராட்டங்கள். எனவே மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் போர் உண்மையில் மக்களுக்கு எதிரான போர்.

நமது நாட்டில் இயற்கைவளங்கள் நிறைந்துள்ள பகுதிகளில்,இடதுசாரி தீவிரவாதம் தொடர்ந்து வளருமானால்,அது முதலீட்டுச் சூழலை பெரிதும் பாதிக்கும் என்று இந்தப்போருக்கான காரணத்தை பாராளுமன்றத்தில் பச்சையாகப் பேசியிருக்கிறார் மன்மோகன் சிங்.
டாடா,அம்பானி,மிட்டல் போன்ற தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளையை பாதிக்கும் விதத்தில் யார் போராடினாலும்,அவர்களுக்கு எதிராக அரசு போர் தொடுக்கும் என்பதே மன்மோகன் சிங் கூறும்செய்தி.
இந்தப்போர் மாவோயிஸ்ட்டுகளு
க்கு எதிரான போர் மடடுமல்ல,இது மக்களுக்கு எதிரான போர்.
காடு என்பது பழங்குடி மக்களின் உரிமை.கனிமவளங்களை
கைப்பற்றுவதற்காக அவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது.கடல் மீனவர்களின் உரிமை.பன்னாட்டு மீன்பிடிக் கம்பெனிகள்,மீன்வளத்தை அள்ளுவதற்காக மீனவர்களுக்கு கடலில் எல்லைக் கோடுகள் போடுகிறது.மீறினால் காட்டுவேட்டை போல,கடல்வேட்டை ஒன்றை இந்த அரசு அறிவிக்கும்.

வுpதை என்பது விவசாயிகளின் மரபுரிமை.ஆனால் அதனை பன்னாட்டு முதலாளிகளின் சொத்தாக மாற்றிவிட்டது அரசு.இனி நமது விதைகளின் மீது விவசாயிகள் உரிமைகோரினால் போலீஸ் அவர்கள் மீது வழக்கு தொடுக்கும்.மீறினால் போரும் தொடுக்கும்.

பழங்குடிகள் விவசாயிகள்,மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மடடுமல்ல. பரந்து பட்ட மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன.
தென்கொரிய போஸ்கோ நிறுவனத்திற்கு உகந்த முதலீட்டுச் சூழலை உருவாக்குவதற்காகத்தான் ஒரிஸ்ஸாவின் பழங்குடி மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.அதே தென்கொரிய ஹ{ண்டாயின் முதலீட்டுச்சூழலைப் பாதுகாக்கத்தான் தொழிற்சங்கம் அமைத்த தொழிலாளர்கள் சென்னையில் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள்.பன்னாட்டு முதலாளிகளின் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கத்தான் குறைந்த பட்ச ஊதியம் முதல் பணிநிரந்தரம் வரையிலான எல்லா உரிமைகளும் தொழிலாளிகளிடமிருந்து பறிக்கப்படுகின்றன.
கல்வி வியாபாரிகளின் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கித்தருவதற்காக அரசுப்பள்ளிகள்,கல்லூரிகளும், மருத்துவ வியாபாரிகளின் முதலீட்டுச்சூழலுக்காக அரசின் இலவச மருத்துவமனைகளும் அழிக்கப்பட்டு மக்கள் அந்த முதலாளிகளை நோக்கித் துரத்தப்படுகிறார்கள்.

இந்தப் போர்க்களம் தண்டகாரண்யாக் காடுகளைத்தாண்டி,நாடு முழுவதும் வியாபித்திருக்pறது.போரின் வடிவங்கள் மட்டுமே இடத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன.ஆனால் போரின் நோக்கம் நமது நாட்டையே பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் அடிமையாக்குகின்ற மறு காலனியாக்கமாக மாறிவருகின்றது.

இந்தமறுகாலனியாக்க் கொள்கைகள் அனைத்திலும் எல்லா ஓட்டுக்கட்சிகளும்,கருத்து வேறுபாடின்றி ஓரணியில் நிற்கின்றன.கொள்ளையின் ஆதாயங்களை பங்கு போட்டுக் கொள்வதில் மட்டும் அவை தமக்குள் மோதிக் கொள்கின்றன.

1994.ல் “காட்” ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளிலிருந்து,மத்தியிலும்,மாநிலங்களிலும், வௌ;வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்திருந்தாலும்,தனியார்மைய, தாராளமயக் கொள்கையிலிருந்து மட்டும் எந்த அரசும் வழுவியதில்லை என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பன்னாட்டுமுதலாளிகள் கூட்டத்தில் பெருமையுடன் அறிவித்தார் மன்மோகன்சிங்.
ஆம்..மறுகாலனியாக்கக் கொள்கைகளை பயன்படுத்திக் கொண்டு சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களெல்லாம் முதலாளிகளாயிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டுகளாக,காண்ட்ராக்டர்களாக,பங்குதாரர்களாக அவர்கள் மாறியிருக்கிறார்கள். கோடீஸ்வரர்களின் மன்றமாக இருக்கிறது நாடாளுமன்றம்.அரசுஅதிகாரமும்,நீதியும்கூட பன்னாட்டு முதலாளிகளின் அடியாட்களாகவே மாறிவிட்டன.

சீரழிந்து நாறிக்கிடக்கும் இந்த அரசியலுக்கு வெளியே மக்கள் நலனுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக,தன்னலனைத் துறந்தவர்களாக,லஞ்சத்தால் விலைக்கு வாங்க முடியாதவர்களாக பட்டங்கள்,பதவிகளுக்காக பல்லிளிக்காதவர்களாக,இழப்புக்கும்,தியாகத்துக்கும் அஞ்சாதவர்களாக நாடெங்கும் அரசியல் களத்தில் நிற்பவர்கள் நக்சல் பாரி புரடசியாளர்கள் மட்டும்தான் என்று பழங்குடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளனர் மாவோயிஸ்ட்டுகளும்,நக்சல்பாரிகளும்.எனவேதான் ஓட்டுக்கட்சிகள் மீது மக்கள் மென்மேலும் நம்பிக்கை இழந்துவரும் சூழலில் மறுகாலனியாக்க தாக்குதல்களின் தீவிரம்,மக்களை நக்சல்பாரி புரட்சியாளர்களை நோக்கி நகர்த்துகிறது.
எனவேதான் நம்நாடு எதிர் கொள்ளும் மிகப் பெரிய உள்நாட்டுபாதுகாப்பு அபாயம் என்று நக்சல்பாரி இயக்கத்தைக் காட்டி எச்சரிக்கிறார் மன்மோகன் சிங். அத்வானி முதல்,புத்ததேவ் வரை அதனை வழிமொழிகிறார்கள்.தங்களுடைய எதிரிகள் யார்.? என்பதை ஆளும் வர்க்கங்கள் தெளிவாக அடையாளம் கண்டு அறிவித்துள்ளன.
அதே நேரத்தில் நமது நண்பர்கள் யார்.? என்பதை மக்கள் புரிந்து கொண்டு விடாமல் ஓட்டுக்கு லஞ்சம்.இலவசத்திட்டங்கள் போன்ற ஆயுதங்களால் அவர்களைத்தாக்கி ஓட்டுவேட்டையும் நடத்துகின்றனர். இந்த ஓட்டுவேட்டைக்கு மசியாமல் நக்சல்பாரிகளின் தலைமையை மக்கள் நாடினால்,உடனே காட்டுவேட்டை தொடங்குகிறது.
மாவோயிஸ்ட்டுகள் ஆயுதப்போராட்டம் நடத்துவதால்தான்,அவர்களை ஒடுக்கவேண்டியிருப்பதாக, ப.சிதம்பரமும்,மன்மோகன்சிங்கும் கூறிவருவது கடைந்தெடுத்த பொய்.அடுக்கடுக்காய் தொடங்கப்படும் மறுகாலனியாக்கத் தாக்குதல்களால் வாழ்க்கை பறிக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு,எதிர்த்துக் கேட்டால் ஒடுக்கப்பட்டு கிடிக்கப்பட்ட வெடிமருந்தாக வெடிக்கக் காத்திருக்கிறார்கள் மக்கள்.இதை அரசு அறிந்தே இருக்கிறது.இந்த வெடியின் திரியும் அதனைப்பற்ற வைக்கும் பொறியும்,நக்சல்பாரிகள்தான் என்ற உண்மையும் அரசுக்கு தெரிந்தே இருக்கிறது. எனவேதான் திரியைக்கிள்ளுவதில் கவனம் செலுத்துகிறது.
மறுகாலனியாக்க எதிர்ப்பின் கூர்முனையாகஇருக்கும் நக்சல்பாரி இயக்கத்தை முறியடிக்க முயல்கிறது. “ஆப்ரேஷன் கிரீன்ஹன்ட்” என்ற நக்சல்வேட்டையின் நோக்கம் இதுதான்.