பொள்ளாச்சி.ஆக.23. கோவைமாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள கேரளசமாஜம் சார்பில், கேரளாவின் பாரம்பரிய முறைப்படி ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு அத்தப்பூக்கோலமிட்டு பெண்கள் ஆடிப்பாடியும் திருவிழாவைக் கொண்டாடியது அனைவரையும் கவர்ந்தது.
கோவைமாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன்சுற்றுப்புறங்களில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலையாள மொழிபேசும் கேரளத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
இந்ந்pலையில்,கேரளாவில் இன்று முதல் பத்துநாட்களுக்கு,மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகையன்று தங்கள் சொந்த ஊரான கேரளத்திற்கு சென்று இவ்விழாவைக் கொண்டாட முடியாதவர்களுக்கென,பொள்ளாச்சியிலுள்ள கேரளசமாஜம் சார்பில்,அதன் தலைவர் சோமன் மாத்யூ தலைமையில் ஓணம் திருவிழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதனையடுத்து இன்று காலையில் கேரளசமாஜத்தில் குவிந்த கேரளமக்கள்,சமாஜத்தின்முன்பும்,தங்கள் வீடுகளிலும் பலவண்ணப்பூக்களைக் கொண்டு வெகு அழகான கோலங்களை அமைத்தனர்.பின்னர் அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகையை வாழ்த்தி வரவேற்கும் பாடல்களுடன் நடனங்களும் ஆடினர்.இந்நிகழ்ச்சியில் கேரளசமாஜத்தின் செயலாளர் வாசுதேவன்,அலுவலக செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கேரளாவில் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்படுவதுபோலவே, பொள்ளாச்சியிலும் இத்திருவிழா கொண்டாடப்பட்டது அனைவரையும் கவர்ந்தது.
பேட்டி-சோமன் மாத்யூ-தலைவர் கேரளசமாஜம்.
No comments:
Post a Comment