pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Sunday, August 29, 2010

வால்பாறையில் மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்.!

வால்பாறையில் தடையை மீறி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

வனச்சட்டத்தை அமலாக்க வலியுறுத்தியும் மலை வாழ் மக்கள் சங்கத் தலை வர்கள் மீது பொய் வழக்குப் போட்டதைக் கண்டித்தும் வால்பாறையில் காவல் துறையின் தடையை மீறி மலைவாழ் மக்கள் சங்கத் தின் சார்பில் எழுச்சிமிகு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

சனிக்கிழமை ஸ்டான் மோர் சந்திப்பில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத் துக்கு உடுமலை முதல் பல் வேறு மலை செட்டில் மென்டுகளில் வசிக்கக் கூடிய மலைமக்கள்இ பெண் கள்இ இளைஞர்கள்இ முதி யோர் என நூற்றுக்கணக்கானோர் பேர் திரண்டு வந்தி ருந்தனர். இதில் கோவை மாவட்ட மலைவாழ் மக்கள் சங்கச் செயலாளர் வி. சந்திரசேகர் தலைமை வகித் தார். இதில் மலைவாழ் மக் கள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம்இ விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.ஆர்.மது சூதனன்இ திருப்பூர் மாவட் டத் தலைவர் பி.மோகன்இ மாவட்டத் துணைத் தலை வர் ஏ.ராஜகோபால்இ மலை வாழ் மக்கள் சங்கத் தலை வர் கோ.செல்வம் ஆகி யோர் கண்டன உரையாற் றினர்.

வனத்துறையின் ஊழல்இ அராஜக அட்டூழியத்தை அம்பலப்படுத்தியதற்காக மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர்கள் செல்வம்இ தவசி ஆகியோர் மீது வஞ்சம் தீர்க்கும் நோக்கத்தில் பொய் வழக்குப் பதிவு செய்த வால் பாறை காவல் துறையைக் கண்டித்து தலைவர்கள் உரையாற்றினர்.

வால்பாறை சிஐடியு பொதுச் செயலாளர் ஏ.டி. கே.தனபாண்டியன்இ மலை வாழ் மக்கள் சங்கச் செயலாளர் அருள்தாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முன்னதாக இந்த ஆர்ப் பாட்டத்துக்கு அனுமதி மறுத்திருப்பதாக வால் பாறை டி.எஸ்.பி. மாடசாமி வெள்ளிக்கிழமை இரவு கடிதம் கொடுத்ததுடன்இ சங்கத் தலைவர்களுக்கு மிரட்டல் விடுத்தார். அதை யும் மீறி திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. எனினும் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற் பாடு செய்திருந்த ஒலி பெருக்கி வாகனத்தையும்இ கருவிகளையும் காவல் துறை யினர் பறித்துக் கொண்டு அராஜகமாக நடந்து கொண் டனர். இதைத் தலைவர்கள் வன்மையாகக் கண்டித்தனர். பொய் வழக்குகளை ஒரு மாத காலத்திற்குள் வாபஸ் வாங்காவிட்டால்இ மலை மக்கள் மீது காவல் துறைஇ வனத்துறையின் அடக்கு முறை தொடர்ந்தால் அடுத்த மாதம் பொள்ளாச்சி கோட் டாட்சியர் அலுவலகம் முன் பாக ஆயிரக்கணக்கான மலை மக்களைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று மாநி லத்தலைவர் பெ.சண்முகம் அறிவித்தார்.

இதில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன்இ வால்பாறை சிஐடியு தலைவர் எம்.மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். சங்கச் செயலாளர் என். மணி நன்றி கூறினார்.

காவல் துறையின் தடை யை மீறி வால்பாறை நகரின் முக்கிய வீதியில் முழக்கங் களை எழுப்பியபடி மலை மக்கள் கையில் செங்கொடி ஏந்தி கம்பீரமாக அணி வகுத்துச் சென்றதை வால் பாறை நகர மக்கள் வியப் புடன் பார்த்தனர்.

நன்றி-தீக்கதிர் நாளிதழ்-29.8.10// vedio in toutube sunpollachi


Monday, August 23, 2010

ஓணம் திருவிழா.!









பொள்ளாச்சி.ஆக.23. கோவைமாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள கேரளசமாஜம் சார்பில், கேரளாவின் பாரம்பரிய முறைப்படி ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு அத்தப்பூக்கோலமிட்டு பெண்கள் ஆடிப்பாடியும் திருவிழாவைக் கொண்டாடியது அனைவரையும் கவர்ந்தது.

கோவைமாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன்சுற்றுப்புறங்களில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலையாள மொழிபேசும் கேரளத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
இந்ந்pலையில்,கேரளாவில் இன்று முதல் பத்துநாட்களுக்கு,மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகையன்று தங்கள் சொந்த ஊரான கேரளத்திற்கு சென்று இவ்விழாவைக் கொண்டாட முடியாதவர்களுக்கென,பொள்ளாச்சியிலுள்ள கேரளசமாஜம் சார்பில்,அதன் தலைவர் சோமன் மாத்யூ தலைமையில் ஓணம் திருவிழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதனையடுத்து இன்று காலையில் கேரளசமாஜத்தில் குவிந்த கேரளமக்கள்,சமாஜத்தின்முன்பும்,தங்கள் வீடுகளிலும் பலவண்ணப்பூக்களைக் கொண்டு வெகு அழகான கோலங்களை அமைத்தனர்.பின்னர் அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகையை வாழ்த்தி வரவேற்கும் பாடல்களுடன் நடனங்களும் ஆடினர்.இந்நிகழ்ச்சியில் கேரளசமாஜத்தின் செயலாளர் வாசுதேவன்,அலுவலக செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கேரளாவில் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்படுவதுபோலவே, பொள்ளாச்சியிலும் இத்திருவிழா கொண்டாடப்பட்டது அனைவரையும் கவர்ந்தது.

பேட்டி-சோமன் மாத்யூ-தலைவர் கேரளசமாஜம்.

Friday, August 20, 2010

தியாகராஜர் ஆராதனை இசைவிழா..!


சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பில்,கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்,17.ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று நடைபெற்றது.ஆண்டுதோறும் திருவையாற்றில் நடைபெறும் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழாவினையடுத்து,இவ்விழா பொள்ளாச்சியில் மட்டுமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

சங்கீத மும்மூர்த்திகள் எனக்குறிப்பிடப்படும் ஸ்ரீ தியாகராஜர்,சியாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துசுவாமி தீட்சிதர் ஆகிய மூவருள்,ஸ்ரீ தியாகராஜருக்கு ஆண்டுதோறும் ஆராதனைவிழா நடைபெறுவது வழக்கம்.திருவையாற்றில் மிகச் சிறப்பாக நடைபெறும் இவ்விழாவில் தமிழகம் முழவதுமிருந்து நூற்றுக்கணக்கான இசைக்லைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் இசையால் ஆராதனை செய்வது போல,கோவைமாவட்டம் பொள்ளாச்சியிலும் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பில் இன்று நடைபெற்றவிழாவில்,கோவை மாவட்டம் மட்டுமின்றி,தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுமிருந்து வந்திருந்த ஏராளமான இசைக்கலைஞர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு,நாதஸ்வரம்,தவில்,மற்றும் இசைக்கருவிகளுடன் ஸ்ரீ தியாகராஜருக்கு ஆராதனை செய்தனர்.
ஒருநாள் முழவதும் நடைபெறும் இவ்விழாவில்,ஒவ்வொரு அரைமணிக்கும் ஒரு குழுவாக,இசைக்கலைஞர்கள் ஆராதனை விழாவில் பங்கேற்றுவருகின்றனர்

மேலும்,வளரும் இசைக்கலைஞர்களுக்கு உத்வேகத்தை அளிக்கவும்,இசையின் முக்கியத்துவத்தை விளக்கவும்,அதன் மீதான தொடர் ஈடுபாட்டையும் ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இவ்விழாவில்,25 ஆண்டுகளாக இசைத்துறையில் அனுபவமிக்க மூத்த கலைஞர்களுக்கு நாதப்பிரம்ம பூஷன் என்ற பட்டம் வழங்குவதோடு,இசைக்கலைஞர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் செய்வதாக சங்க நிர்வசாகிகள் தெரிவித்துள்ளனர்.


Saturday, August 14, 2010

தமிழகம் கேரளாவின் குப்பைதொட்டியல்ல..!











பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்.!

பொள்ளாச்சி.ஆக.13 தமிழக எல்லைப்பகுதிகளில் மருத்துவக்கழிவுகள் மற்றும் இறைச்சிக்கழிவுகளை தொடர்ந்து கொட்டி தமிழகத்தை தனது குப்பபைத்தொட்டியாகப் பயன்படுத்திவரும் கேரளஅரசுக்கு கண்டணம் தெரிவித்தும், இதுகுறித்து மத்திய மாநிலஅரசுகள் தக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என வலியுறுத்தி கோவைமாவட்டம் பொள்ளாச்சியில் இன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து கோவைமாவட்டம் பொள்ளாச்சி கிணத்துக்கடவு உட்பட தமிகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள எல்லைப்புறக் கிராமங்களில் லாரிகள் மூலம் இறைச்சிக்கழிவுகள்.மருத்துவக் கழிவுகள் வேதிப் பொருட்களின் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டுவந்து கொட்டிச் செல்லும்போக்கு பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது என்றும்,

இதன்மூலம் தமிழகத்தை தனது குப்பைத்தொட்டியாக கேரளஅரசு பயன்படுத்திவருவதாக பெரியார் திராவிடர் கழகம் குற்றம் சாட்டியுள்ளது.

இவ்வாறு கழிவுகளை லாரிகள் மூலம் கேரளாவிலிருந்து கொண்டுவரும்போது அவற்றை தமிழகத்திற்குள் அனுமதிக்கும் சோதனைச்சாவடிகளின் அதிகாரிகள் இங்குள்ள நீர்வளம்,நிலவளம் ஆகியவை மாசுபடுவதற்கு துணைபோகும் அவலநிலையும் தொடர்கிறது என்றும்,

எனவே இப்பிரச்சினையில் மத்திய மாநிலஅரசுகள் தலையிட்டு தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி கோவைமாவட்டம் பொள்ளாச்சியில் இன்று பெரியார்திராவிடர்கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் 100.க்கும் மேற்பட்ட பெரியார் திராவிடர் கழக்த்தொண்டர்கள் மற்றும் ம.தி.மு.க,ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

Tuesday, August 10, 2010

வாசிப்போம்.., சாதிப்போம்..!














வாசிப்போம்... சாதிப்போம்...!
சுசி திருஞானம்


நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்கள், அமைதியான மனம் இவைதான் உன்னதமான வாழ்க்கை என்று வாழ்க்கையின் தத்துவத்தை சாறுபிழிந்து தருகிறார் மகத்தான எழுத்தாளர் மார்க் ட்வெயின். நல்ல நண்பர்களைப் போலவே, இடர்மிகுந்த தருணங்களில் நமக்குத் தோள்கொடுத்து நிற்பவை நல்ல புத்தகங்கள். புத்தகங்கள் இல்லாத வாழ்க்கையை என்னால் வாழவே இயலாது என்று கூறி, புத்தக வாசிப்பை வாழ்க்கைமுறையாகவே பிரகடனப்படுத்தியுள்ளார் பேரறிஞர் தாமஸ் ஜெஃபர்சன்.
காட்டுமிராண்டிகளின் கூடாரமாகக் காட்சி அளித்த சீனாவில் அறிவுப்புரட்சிக்கு வித்திட்டவை, 2000 ஆண்டுகளுக்கு முன் கன்ஃபூசியஸ் எழுதிய புத்தகங்கள். 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்க்கோ போலோ எழுதிய "பயணங்கள்' என்ற மகத்தான புத்தகம், திரைகடல் ஓடி திரவியம் தேடும் வேட்கையை உலகெங்கும் உருவாக்கியது. அந்தப் புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு, நகைகளும் வாசனைத் திரவியங்களும் மிகுந்த இந்தியாவைத் தேடிப் பயணம் புறப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய உலகமான அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக விளங்கிய காந்தியடிகள் தனது வாழ்க்கையையே திருப்பிப்போட்ட புத்தகம் என்று ஜான் ரஸ்கின் எழுதிய "அன்ட்டு திஸ் லாஸ்ட்' புத்தகத்தைக் குறிப்பிடுகிறார். ரஸ்கினின் அந்தப் புத்தகத்தை ஒரு பயணத்தின்போது வாசித்த நான், அதன் தாக்கத்தால் அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை. கடைசி மனிதனும் சிறந்த வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற உயர்ந்த கோட்பாட்டுக்கு ஏற்ப எனது வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போதே நான் உறுதிசெய்துவிட்டேன் என்று அந்த நூல் தனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து பின்னாள்களில் விளக்கினார் காந்தியடிகள்.
நல்ல நண்பர்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருப்பதுபோலவே, நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்வதிலும் நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையைப் பயனுள்ளதாக்க எந்த நூல்கள் உதவும், உங்களுக்குப் பிடித்த துறையில் சிகரங்களைத் தொட எந்த நூல்கள் உதவும், உங்கள் குழந்தைகளின் சிந்தனையைச் செதுக்க எந்த நூல்கள் உதவும் என்பதுபோன்ற கேள்விகளுடன் தேடினால் மிகச்சிறந்த அறிவுப் புதையல்கள் உங்கள் கையில் கிடைக்கும்.
நவீன நிர்வாகக் கலையின் தலைமை குருவாக வர்ணிக்கப்படுபவர் பீட்டர் டிரக்கர். 96 ஆண்டுகள் வாழ்ந்த அவர், தனது 92 வயதுவரை எம்.பி.ஏ. மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் பேராசிரியர் பணியில் இருந்தார். இன்றைக்கும் அதிக அளவில் விற்பனையாகிவரும் 39 புத்தகங்களை எழுதியவர் அவர், பல்வேறு நாடுகளின் வெவ்வேறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு 25 கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கின.
இத்தனை ஆற்றல்மிக்க அந்த மேதை, தனது வெற்றியின் ரகசியமாகக் குறிப்பிட்டது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தைத்தான். ஒவ்வோராண்டும் ஒரு புதிய தலைப்பைத் தேர்வு செய்துகொள்வேன். அது தொடர்பான நூல்களை வாங்கிக் குவிப்பேன். அவற்றை முக்கியத்துவ அடிப்படையில் வரிசைப்படுத்தி, தினம்தோறும் குறைந்தது 4 மணி நேரம் வாசிப்பேன்.அதாவது ஆண்டுக்கு 1500 மணிநேரம் வாசிப்பு. இத்தனை விரிவான வாசிப்பு இருந்தால், ஒரு சராசரி மனிதனும்கூட மேதை ஆகிவிடமுடியும் என்பதுதான் உண்மை.
புத்தகத்தைப் புரட்டிப்பார்த்து, அதைப்பற்றிய ஓர் ஒட்டுமொத்தப் பார்வையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். புத்தகத்தின் தலைப்பு மற்றும் உபதலைப்புகள் தொடர்பாக உங்களுக்கு நீங்களே கேள்விகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்தக் கேள்விகள்தான் வாசிப்புக்கான தூண்டுகோல்கள்.
இப்போது, உங்கள் மனதுக்குள் நீங்கள் உருவாக்கியுள்ள கேள்விகளுக்கு விடைதேடியவாறு புத்தகத்தை வாசியுங்கள். தன்னிச்சையான வாசிப்புக்கும், உங்கள் கேள்விக்கு விடைதேடி நீங்கள் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்வீர்கள். மிக முக்கியமான பகுதிகளை அடிக்கோடிடுவது அல்லது பக்கக்குறிப்பு எழுதிவைப்பது நல்லது. புத்தகத்தில் இடம்பெற்றுள்ளவற்றில் நமக்கு அவசியமான தகவல்களையும் கருத்துகளையும் டைரியிலோ, நோட்டுப் புத்தகத்திலோ எழுதிவைக்க வேண்டும். இதனை ஒரு பழக்கமாக்கிக்கொண்டால், இது பின்னாள்களில் ஓர் அறிவுப் புதையலாக மாறிவிடும்.
அவ்வப்போது வாழ்க்கையில் தேவைப்படும் போதெல்லாம், பதிவுசெய்துகொண்ட கருத்துகளை நினைவுபடுத்தி நடைமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இந்த உத்தியைப் பயன்படுத்தி புத்தகங்களை வாசிக்கக் கற்றுக்கொண்டால், நமது வாசிப்புத் திறன் உயர்வதோடு மட்டுமன்றி, நாம் வாழ்க்கையில் உயர்வதும் நூறு சதம் சாத்தியமாகிவிடும்.
உலகின் அறிவுத் தலைநகரமாகப் போற்றப்படும் இந்திய நாட்டு இளைஞர்களிடமும் புத்தகம் படிக்கும் வேட்கை தூண்டப்பட்டால் வையத் தலைமைகொள்ளும் புதிய தலைமுறை இங்கே உருவாகிவிடும். வாசிப்போம்... சாதிப்போம்...!

மனசாட்சி பேசக்கூடாதா.?

மனசாட்சி பேசக்கூடாதா?

சா.ஜெயப்பிரகாஷ் First Published : 10 Aug 2010

தமிழ்நாட்டிலுள்ள 234 எம்.எல்.ஏ.க்களின் ஓராண்டுச் செலவு (சம்பளம், படிகள், சலுகைகளுக்காக) என்ன தெரியுமா? ரொம்பவும் அதிகம் இல்லை, 12 கோடியே 60 ஆயிரம்தான்.
திருச்சியைச் சேர்ந்த என். மணி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்டுப் பெற்றதால் கிடைத்துள்ள விவரங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. மாத ஊதியம் - 8,000, ஈட்டுப்படி- 7,000, தொகுதிப்படி- 5,000, தொகுப்புப் படி- 2,500, தொலைபேசிப்படி- 5,000, அஞ்சல் செலவுப்படி- 2,500, வாகனப்படி- 20,000. ஆக ஒரு எம்.எல்.ஏ.வுக்கு ஒரு மாதத்துக்கு மொத்தம் 50,000.
இத்துடன், எம்.எல்.ஏ. விடுதியில் சலுகைக் கட்டணமாக நாளொன்றுக்கு 2.50 அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு சலுகைக் கட்டணத்தில் மாதம் ஒன்றுக்கு 250 மட்டுமே. உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருந்துகள் வாங்கியதாக ரசீது கொடுத்தால், அந்தத் தொகை எம்.எல்.ஏ.க்களுக்கு திரும்பக் கிடைக்கும்.
நாளொன்றுக்கு படி 500. முக்கிய அறுவைச் சிகிச்சைகளுக்கு உதவி, பேருந்துகளில் உதவியாளர் ஒருவருடன் இலவசப் பயணம், மேலும் பயணப்படியாக ஓராண்டுக்கு 20,000, இலவச எழுது பொருள்கள் இன்னும் என்னென்னவோ...
தமிழகத்திலுள்ள 234 எம்.எல்.ஏ.க்களுக்கும் சேர்த்து சராசரியாக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் மற்றும் சலுகைகளாக ஒரு மாதத்துக்கு ஒரு கோடியே 50 ஆயிரம் செலவிடப்படுகிறது. ஆண்டுக்கு 12 கோடியே 60 ஆயிரம்.
எப்படி வளர்ந்தது தெரியுமா? கடந்த 1964 மார்ச் 31-ம் தேதி வரை எம்எல்ஏக்களுக்கு சம்பளம் வெறும் |150 மட்டும்தான். வேறெந்தப் படிகளும் கிடையாது. அந்த ஆண்டு சம்பளத்தில் 100 உயர்த்தப்பட்டு, 1971 அக்டோபர் 1-ம் தேதி முதல் ஈட்டுப்படியாக |100 சேர்க்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகுதான் இந்தப் படிப்படியான இமாலய வளர்ச்சி. இப்போதைய "ஈட்டுப்படி' 7,000.
1978 முதல் தொடங்கப்பட்ட "தொலைபேசிப்படி' | 150, இப்போது | 5,000 ஆகியிருக்கிறது. 1991 முதல் தொடங்கப்பட்ட "தொகுதிப்படி' 250, இப்போது 5,000 ஆகியிருக்கிறது. 1993-ல் தொடங்கப்பட்ட "அஞ்சல்படி' 250, இப்போது 2,500 ஆகியிருக்கிறது. 2000-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட "தொகுப்புப் படி' 2,000, இப்போது | 2,500 ஆகியிருக்கிறது. 2007-ல் தொடங்கப்பட்ட "வாகனப்படி' 5,000, இப்போது 20,000 ஆகியிருக்கிறது.
மொத்தத்தில் 1964, மார்ச் 31-ம் தேதி வரை மாதம் |150 வாங்கிக் கொண்டிருந்த எம்.எல்.ஏ.க்கள், 45 ஆண்டுகளில் "எல்லா வளர்ச்சியும்' பெற்று இப்போது தலா 50,000 பெறுகிறார்கள்.
கடந்த 8 ஆண்டுகளில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்தாத எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர்? என்ற கேள்விக்கு "நிதியை முழுமையாகப் பயன்படுத்தாத எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை' என்று பதில் வந்திருக்கிறது. நிதியேதும் நிலுவையில் இருந்தால், மாவட்ட ஆட்சியர்களே நேரடியாகத் தகவல் சொல்லி, கடிதம் கேட்டுப் பெற்றுக் கொண்டு எடுத்துக் கொள்வார்களாக இருக்கும்.
ஆனால், இந்தத் திருநாட்டில்தான் "எக்ஸிகியூட்டிவ்' நிலையில் பணியில் இருப்பவர்களும்கூட 10,000 ஊதியம் என்பதைப் பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். பல்வேறு தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இளம் ஆசிரியர்களுக்கு ஊதியம் இன்னமும் ஆறாயிரம் ரூபாயைத் தாண்டவில்லை.
உலகப் போட்டியில் இந்தியாவுக்குப் பெருமையைத் தேடித் தந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்திக்கு மாதம்தோறும் 5,000தான் ஊதியம். "தாற்காலிகப் பயிற்சியாளர்' என்பது அவரது பதவியின் பெயர். அவரால் உருவாக்கப்பட்டுள்ள வீரர்களின் மதிப்பு? உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸில் பணியாற்றும் மருத்துவத் தொழில்நுட்பப் பணியாளருக்கு மாதம்தோறும் | 6,000.
ஓர் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மற்றொரு வாகனம் மோதி இறந்த திருச்சி செந்தில்குமாருக்கு அரசு உதவி எதுவுமில்லை!
இன்னும்கூர்ந்து கவனித்தால் இந்தப் பட்டியல் நீளும். ஆனால், அதேநேரத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கான சலுகைகள், சென்னையில் வீட்டுமனை... இத்யாதி இத்யாதிகளுடன் இன்னும் பல மடங்கு உயர்ந்து கொண்டே இருக்கும்.
இவர்கள் மக்கள் பிரதிநிதிகள்தான். தொகுதி மக்களை அந்தப் பேரவையில் பிரதிபலிக்கும் பிரதிநிதிகள்தான். இங்கே குறிப்பிட்ட சில பிரச்னைகளையும்கூட அவர்கள் பேரவையில் பிரதிபலித்ததாகத் தெரியவில்லை.
சொந்த வீடில்லாத, எந்தவித சொத்தோ, வருமானமோ இல்லாத மக்கள் பிரதிநிதிகளுக்கு நாம் எவ்வளவு கொடுத்தாலும் தகும். ஆனால், அவர்கள் தங்கள் வேட்பாளர் மனுவிலேயே பதிவு செய்திருப்பதுபோல லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் இருக்கும் உறுப்பினர்களுக்கு, மக்கள் வரிப்பணத்திலிருந்து ஊதியம் கொடுப்பானேன். சேவை மனப்பான்மையுடன் மக்கள் பணியில் அவர்கள் ஈடுபடட்டுமே... இப்படியெல்லாம் நமக்குக் கேட்கத் தோன்றுவதுபோல, அவர்களது மனசாட்சியும் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்

நன்றி..தினமணி நாளிதழ்..10.8.2010