வால்பாறையில் தடையை மீறி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
வனச்சட்டத்தை அமலாக்க வலியுறுத்தியும் மலை வாழ் மக்கள் சங்கத் தலை வர்கள் மீது பொய் வழக்குப் போட்டதைக் கண்டித்தும் வால்பாறையில் காவல் துறையின் தடையை மீறி மலைவாழ் மக்கள் சங்கத் தின் சார்பில் எழுச்சிமிகு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
சனிக்கிழமை ஸ்டான் மோர் சந்திப்பில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத் துக்கு உடுமலை முதல் பல் வேறு மலை செட்டில் மென்டுகளில் வசிக்கக் கூடிய மலைமக்கள்இ பெண் கள்இ இளைஞர்கள்இ முதி யோர் என நூற்றுக்கணக்கானோர் பேர் திரண்டு வந்தி ருந்தனர். இதில் கோவை மாவட்ட மலைவாழ் மக்கள் சங்கச் செயலாளர் வி. சந்திரசேகர் தலைமை வகித் தார். இதில் மலைவாழ் மக் கள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம்இ விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.ஆர்.மது சூதனன்இ திருப்பூர் மாவட் டத் தலைவர் பி.மோகன்இ மாவட்டத் துணைத் தலை வர் ஏ.ராஜகோபால்இ மலை வாழ் மக்கள் சங்கத் தலை வர் கோ.செல்வம் ஆகி யோர் கண்டன உரையாற் றினர்.
வனத்துறையின் ஊழல்இ அராஜக அட்டூழியத்தை அம்பலப்படுத்தியதற்காக மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர்கள் செல்வம்இ தவசி ஆகியோர் மீது வஞ்சம் தீர்க்கும் நோக்கத்தில் பொய் வழக்குப் பதிவு செய்த வால் பாறை காவல் துறையைக் கண்டித்து தலைவர்கள் உரையாற்றினர்.
வால்பாறை சிஐடியு பொதுச் செயலாளர் ஏ.டி. கே.தனபாண்டியன்இ மலை வாழ் மக்கள் சங்கச் செயலாளர் அருள்தாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக இந்த ஆர்ப் பாட்டத்துக்கு அனுமதி மறுத்திருப்பதாக வால் பாறை டி.எஸ்.பி. மாடசாமி வெள்ளிக்கிழமை இரவு கடிதம் கொடுத்ததுடன்இ சங்கத் தலைவர்களுக்கு மிரட்டல் விடுத்தார். அதை யும் மீறி திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. எனினும் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற் பாடு செய்திருந்த ஒலி பெருக்கி வாகனத்தையும்இ கருவிகளையும் காவல் துறை யினர் பறித்துக் கொண்டு அராஜகமாக நடந்து கொண் டனர். இதைத் தலைவர்கள் வன்மையாகக் கண்டித்தனர். பொய் வழக்குகளை ஒரு மாத காலத்திற்குள் வாபஸ் வாங்காவிட்டால்இ மலை மக்கள் மீது காவல் துறைஇ வனத்துறையின் அடக்கு முறை தொடர்ந்தால் அடுத்த மாதம் பொள்ளாச்சி கோட் டாட்சியர் அலுவலகம் முன் பாக ஆயிரக்கணக்கான மலை மக்களைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று மாநி லத்தலைவர் பெ.சண்முகம் அறிவித்தார்.
இதில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன்இ வால்பாறை சிஐடியு தலைவர் எம்.மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். சங்கச் செயலாளர் என். மணி நன்றி கூறினார்.
காவல் துறையின் தடை யை மீறி வால்பாறை நகரின் முக்கிய வீதியில் முழக்கங் களை எழுப்பியபடி மலை மக்கள் கையில் செங்கொடி ஏந்தி கம்பீரமாக அணி வகுத்துச் சென்றதை வால் பாறை நகர மக்கள் வியப் புடன் பார்த்தனர்.
நன்றி-தீக்கதிர் நாளிதழ்-29.8.10// vedio in toutube sunpollachi
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
