பணி பாதுகாப்பு கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.!
பொள்ளாச்சி.அக்.24 கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் சுந்தரபாண்டியனுக்கும்,14.வது வார்டு உறுப்பினர் தன்ராஜுக்கும் சான்றிதழ்கள் பெறுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிவடைந்தது.இதனையடுத்து வட்டாட்சியர் கொடுத்த புகாரின்பேரில் தன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து தன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.இதே போல்,தன்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் வட்டாட்சியர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் வட்டாட்சியர் சுந்தரபாண்டியன் தாக்கப்பட்டதைக் கணடடித்தும்,அரசு ஊழியர்களான தங்களுக்கு பணியின்போது தக்க பாதுகாப்பு தேவை என்று வலியுறுத்தியும், வால்பாறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணை வட்டாட்சியர் நேரு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர் சங்கம்,தபால்துறை ஊழியர்கள் சங்கம்,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
அரசுஊழியர்களாக உள்ளவர்களுக்கு பணியின் போது தக்கபாதுகாப்பு வழங்கவும், அரசியல்வாதிகளால் தங்கள் பணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையிலும்,தமிழகஅரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டதோடு,கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டது.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago