pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Wednesday, March 17, 2010

குண்டம் திருவிழா..!

மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா.!

பொள்ளாச்சி.மார்ச்.17 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஜமீன்ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 100.க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செய்தனர்

கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஜமீன்ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 2.ஆம் தேதி சக்திகும்ப ஸ்தாபனத்துடன் துவங்கியது.இதனையடுத்து பூவோடு வைத்தல்,தீர்த்தம் கொண்டுவருதல்,உட்பட பல்வேறு சிறப்புபூஜைகளும்,அபிஷேக ஆராதனைகளும் தொடர்ந்து நடைபெற்றுவந்தன.

இதனையடுத்து விழாவின் சிறப்புஅம்சமான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இதனை முன்னிட்டு நேற்று இரவு முதல் வளர்க்கப்பட்ட குண்டத்திற்கு,இன்று காலை சிறப்புபூஜைகள் செய்யப்பட்டதையடுத்து,குண்டத்தில் இறங்குவதாக வேண்டுதல் செய்திருந்த 100.க்கும் மேற்பட்ட பக்தர்கள்,மாகாளியம்மன் குறித்த சரணகோஷத்துடன்,வரிசையாக குண்டத்திலிறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் ஊத்துக்குளி முன்னாள் பேரூராட்சித்தலைவர் யு.கே.கிருஷ்ணசாமி,கோவிலின் பரம்பரை அறங்காவலர் மற்றும் நிர்வாகிகள் உட்பட,ஊத்துக்குளி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.மேலும்,இப்பகுதிக்கு சுற்றுலாப்பயணிகளாக வந்திருந்த அயல்நாட்டவர் சிலரும் பார்வையாளர்களாக இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையப் போலீசார் பாதுகாப்புபணிகளை மேற்கொண்டனர்.

Tuesday, March 16, 2010

ஆனைமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டது.!

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு
சுற்றுலாப் பயணிகள் செல்லத்தடை.!

பொள்ளாச்சி.மார்ச்.16 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்கு,சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு,மார்ச்.16 முதல் ஏப்ரல் 15.வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.கோடை காலம் துவங்கியதை முன்னிட்டு,வனப்பகுதிகளில் காட்டுத் தீ பரவாமலிருக்கவும்,விலங்குகளுக்கு இடையூறின்றி இருக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம்.இச்சரணாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான யானைகள், மான்கள்,காட்டெருமைகள்,குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் அரியவகை மரங்களும் உள்ளன.இவற்றைப்பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வருவதுண்டு.
தற்போது கோடைகாலம் முன்னதாகவே தொடங்கியதையடுத்து, சரணாலயப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.மேலும் குரங்கு அருவி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளிலும் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில் வனத்தின் அடர்ந்த பகுதிகளிலுள்ள விலங்குகள் நீர் மற்றும் உணவைத்தேடி பல்வேறு இடங்களுக்கும்,இடப்பெயர்ச்சியை மேற்கொள்ளும் என்பதால்,இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளால் விலங்குகளுக்கு இடையூறு ஏற்படாமலிருக்கவும்,
வறட்சியின் காரணமாக,வனப்பகுதிகளிலுள்ள மரங்கள் மற்றும் செடி,கொடிகள் தனது பசுமையை இழந்து காய்ந்து,எளிதில் தீப்பிடிக்கும் வகையில் உள்ளதால்,இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளால் காட்டுத்தீ ஏற்படும் அபாயத்தை தவிர்க்கும் வகையிலும்,மார்ச்.16.ஆம் தேதி முதல்,ஏப்ரல.15 வரை,ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சரணாலயம் திறப்பதற்கான மறுதேதி குறித்து தமிழகஅரசின் உத்தரவு வரும்வரை,இத்தடை நீடிக்கும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Saturday, March 13, 2010

காதை மூட முடியுமா.? முடியுமே..

வால்பாறையில் வித்தியாசமான திறமையைக் கொண்ட சிறுவன்.!

பொள்ளாச்சி.மார்ச்.13 கோவை மாவட்டம் வால்பாறையில் வித்தியாசமான திறமயுடைய பள்ளிச்சிறுவன்,ஒருவன்,சக மாணவர்களையும்,அப்பகுதி பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறான்.

ஏதேனும் காரணத்திற்காக,நம்மை நோக்கி வாயை மூடிக்கொள் என்றால்,உதடுகளை இறுக்கியோ,அல்லது கைகளாலோ நமது வாயை மூடிக்கொள்வோம்.இதை மட்டுமே சாதாரணமாக அனைவரும் செய்யமுடியும். ஆனால் இதேபோல காதுகளை மூடிக்கொள்ளச் சொன்னால் என்னசெய்வது..?

அதனையும் செய்ய முடியும் என்றால் ஆச்சரியம்தானே..?

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள ஈட்டியார் எஸ்டேட் தொழிலாளியான கிருஷ்ணனின் மகன் பிரேம்குமார்.இவன் இங்குள்ள பள்ளியில் 4.ஆம் வகுப்பு படித்துவருகிறான். சாதாரணமாக மற்ற குழந்தைகளைப்போல இவனது உடல் உறுப்புகள் இருந்தாலும்,இவனது காதுகள் மட்டும் வழக்கத்தைவிட சற்று பெரிதாக உள்ளது.

இதனை இவன் பயன்படுத்தும் விதம்தான் மற்றவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. இவனுடைய காதுகளை இவன் விரும்பும்போது,செவியின் துவாரத்தை அடைக்கும்படியாக மூடிவைத்துக்கொள்ள முடிகிறது.இதனால், தான் படிக்கும்போதோ,தேவையில்லாத சப்தத்தை கேட்கவிரும்பாதபோதோ தனது காதுகளை அவன் மூடி வைத்துக்கொள்கிறான்.

எவ்வித சப்தமும் கேட்காத வகையில் கிருஷ்ணனின் காதுகளைப் பயன்படுத்த முடிவது சக மாணவர்களையும்,அப்பகுதி பொதுமக்களையும் ஆச்சரியப்படுத்திவருகிறது.

தொலைக்காட்சிகளில் வரும் பல்வேறு சாதனை நிகழ்ச்சிகளைப் பார்த்த தனக்கு,ஏதேனும் வித்தியாசமாக செய்யவேண்டும் என்று தோன்றியதாகவும்,அதற்கு வசதியாக தனது காதுகள் பயன்பட்டது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் கிருஷ்ணன் கூறுகிறான். பேட்டி-கிருஷ்ணன்

சிறுவனின் ஆர்வத்திற்கு உதவும் வகையில் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவருவதாகவும் அவனது ஆசிரியைகளும் கூறுகின்றனர்.பேட்டி-ஆசிரியை

Friday, March 5, 2010

பா.ம.க.விற்கு எதிராக மா.கம்யுனிஸ்ட் ஆர்ப்பாட்டம்.!







பொள்ளாச்சி.மார்ச்.5 மறைந்த மா.கம்யூ.தலைவர் டபிள்யூ.ஆர் வரதராஜனின் இறப்பு குறித்து சர்ச்சைக்கிடமான வகையில் செய்தி ஒளிபரப்பியது தொடர்பாகவும், சென்னையிலுள்ள மா.கம்யூ அலுவலகம் பாட்டாளி மக்கள் கட்சியினரால் தாக்கப்பட்டதற்கு கண்டணம் தெரிவித்தும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மா.கம்யூ.தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.ஆர் வரதராஜன் மரணமடைந்தார்.அவருடைய இறப்பின் காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. விசாரணை இன்னும் முழுமையடையாத நிலையில் அவருடைய இறப்பு குறித்து சர்ச்சைக்கிடமான வகையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று,நேற்;று செய்தி ஒளிபரப்பியது.மேலும் சென்னையிலுள்ள மா.கம்யூ அலுவலகம் பா...வினரால் தாக்கப்பட்டது.
இதனால் கடும் அதிருப்தியுற்ற மா.கம்யூ.தொண்டர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகம் முன்பாக,பா...விற்கு கண்டணம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி தாலுக்கா மா.கம்யூ.செயலாளர் கே.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு பா...விற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
திடீரென்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவஇடத்திற்கு வந்த போலீசார்,அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போராட்டக்குழுவினரைக் கைது செய்தனர்.





பொள்ளாச்சி.மார்ச்.5 பெட்ரோல்,டீசல் விலைஉயர்வு,ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி அகிலஇந்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து போராட்டக்குழுவினர் பெண்கள் உட்பட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல்,டீசல் விலைஉயர்வு பொதுவிநியோகத்திட்டத்திலுள்ள முறைகேடுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றும்,ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்யவேண்டும் லாபம் ஈட்டும் பொதுத்துறை பங்குகளை விற்கக் கூடாது,தொழிலாளர் நலச்சட்டங்களை கறாராக அமல்படுத்த வேண்டும் என்றும் அத்தியாவசியப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடைவிதிக்கவேண்டும் என்பதுட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல்போராட்;டங்கள் நடைபெற்றன.
சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஹெச்.எம்.எஸ், பி.எம்.எஸ் மற்றும் ஐ.என்.டி.யு.சி ஆகிய தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சங்கங்களின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உட்பட 200.பேர் கலந்து கொண்டனர்.

பின்னர் பொள்ளாச்சி காந்திசிலை அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்குழுவினரை போலீசார் கைது செய்தனர்.இதனால் கோவை சாலையில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து தடைபட்டது.