வால்பாறையில் வித்தியாசமான திறமையைக் கொண்ட சிறுவன்.!
பொள்ளாச்சி.மார்ச்.13 கோவை மாவட்டம் வால்பாறையில் வித்தியாசமான திறமயுடைய பள்ளிச்சிறுவன்,ஒருவன்,சக மாணவர்களையும்,அப்பகுதி பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறான்.
ஏதேனும் காரணத்திற்காக,நம்மை நோக்கி வாயை மூடிக்கொள் என்றால்,உதடுகளை இறுக்கியோ,அல்லது கைகளாலோ நமது வாயை மூடிக்கொள்வோம்.இதை மட்டுமே சாதாரணமாக அனைவரும் செய்யமுடியும். ஆனால் இதேபோல காதுகளை மூடிக்கொள்ளச் சொன்னால் என்னசெய்வது..?
அதனையும் செய்ய முடியும் என்றால் ஆச்சரியம்தானே..?
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள ஈட்டியார் எஸ்டேட் தொழிலாளியான கிருஷ்ணனின் மகன் பிரேம்குமார்.இவன் இங்குள்ள பள்ளியில் 4.ஆம் வகுப்பு படித்துவருகிறான். சாதாரணமாக மற்ற குழந்தைகளைப்போல இவனது உடல் உறுப்புகள் இருந்தாலும்,இவனது காதுகள் மட்டும் வழக்கத்தைவிட சற்று பெரிதாக உள்ளது.
இதனை இவன் பயன்படுத்தும் விதம்தான் மற்றவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. இவனுடைய காதுகளை இவன் விரும்பும்போது,செவியின் துவாரத்தை அடைக்கும்படியாக மூடிவைத்துக்கொள்ள முடிகிறது.இதனால், தான் படிக்கும்போதோ,தேவையில்லாத சப்தத்தை கேட்கவிரும்பாதபோதோ தனது காதுகளை அவன் மூடி வைத்துக்கொள்கிறான்.
எவ்வித சப்தமும் கேட்காத வகையில் கிருஷ்ணனின் காதுகளைப் பயன்படுத்த முடிவது சக மாணவர்களையும்,அப்பகுதி பொதுமக்களையும் ஆச்சரியப்படுத்திவருகிறது.
தொலைக்காட்சிகளில் வரும் பல்வேறு சாதனை நிகழ்ச்சிகளைப் பார்த்த தனக்கு,ஏதேனும் வித்தியாசமாக செய்யவேண்டும் என்று தோன்றியதாகவும்,அதற்கு வசதியாக தனது காதுகள் பயன்பட்டது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் கிருஷ்ணன் கூறுகிறான். பேட்டி-கிருஷ்ணன்
சிறுவனின் ஆர்வத்திற்கு உதவும் வகையில் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவருவதாகவும் அவனது ஆசிரியைகளும் கூறுகின்றனர்.பேட்டி-ஆசிரியை
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment