pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Thursday, February 25, 2010

பொள்ளாச்சி ஆழியாறு பார்வை மாடம்..!

சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்த பார்வைமாடம்.!

பொள்ளாச்சி.பிப்.25 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு அருகே,ஆனைமலை புலிகள் காப்பகத்தால் அமைக்கப்பட்டுள்ள வனஉயிரின விளக்கமையமும்,பார்வை மாடமும் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.வனம் மற்றும் வனஉயிரினங்களைக் குறித்து தாங்கள் அறிந்து கொள்ள இம்மையம் பெரிதும் உதவுவதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு சோதனைச்சாவடி அருகே அமைந்துள்ளது வனஉயிரின விளக்கமையம்.சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் ஆனைமலை புலிகள் காப்பகத்தால் அமைக்கப்பட்டுள்ள இம்மையத்தில்,இச்சரணாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மலைவாழ்மக்கள்,வனஉயிரினங்கள் மற்றும் வனத்தில் உள்ள தாவரவகைகள்,பூக்கள்,நீர்வாழ் விலங்கினங்கள் ஆகியவற்றைக்குறித்து விளக்கப்படங்களும்,மாதிரிச் செடிகொடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இளைப்பாறும் வசதிக்கான இருக்கைகளுடன் ஒரு பூங்காவைப் போன்ற அழகுடனும் அமைந்துள்ள இம்மையத்தின் சிறப்பம்சங்களுள் ஒன்றாக,இங்கு அமைக்கப்பட்டுள்ள பார்வைமாடம் விளங்குகிறது.பாதுகாப்பான படிக்கட்டுகளுடன் அமைந்துள்ள இக்போபுரத்தின் மீதிருந்து,ஆழியாறு அணையின் தோற்றம்,கிராஸ்ஹில்ஸ் எனப்படும் புல்மலை,வனத்தின் பசுமை,பல்வேறு வண்ணங்களில் அழகு காட்டும் மரங்கள் மற்றும் பறவைகள் என இயற்கை அழகை ரசிக்கமுடிவதால்,இக்கோபுரத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
மேலும்,இம்மாடத்தின் மீது நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.இம்மையத்தை சுற்றிப்பார்ப்பதன் மூலம் ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியின் தன்மையை அறிந்து கொள்ளமுடிவதாகவும்,அது தங்களுக்கு ஒரு படிப்பனையாகவும் உள்ளது என சுற்றுலாப்பயணிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும்,விடுமறைநாட்களில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவர்களும் இங்குவந்து இம்மையத்தை ஆவலுடன் சுற்றிப்பார்த்துவிட்டு செல்வதாகவும் வனத்துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.


பி.ஏ.பி.காண்டூர் கால்வாய் சீரமைக்க கோரிக்கை.. !


பொள்ளாச்சி.பிப்.25 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள பி.ஏ.பி. எனப்படும்,பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்திற்குட்பட்ட காண்டூர் கால்வாயில் ஏற்படும் நீர் சேதாரத்தை தடுக்கும் வகையில்,இக்கால்வாயை முற்றிலுமாகப் புதுப்பித்துதரவேண்டும் என்று,விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி,உடுமலை மற்றும் திருப்பூர்,ஈரோடு,கரூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள சுமார் 4.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள்,பி.ஏ.பி.திட்டத்தின்கீழ்,உடுமலை திருமூர்த்தி அணைவழியாக பாசனவசதிபெற்றுவருகின்றன.
இந்நிலையில்,இப்பாசனத்திட்டத்திற்கு அடிப்படையாக பரம்பிக்குளத்திலிருந்து கொண்டுவரப்படும் நீர்,சர்க்கார்பதி மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து 49.3 கி.மீ தூரத்திற்கு உடுமலை திருமூர்த்தி அணைவரையுள்ள காண்டூர் கால்வாய் வழியே செல்கிறது.
மேற்கு தொடர்ச்சிமலையின் அடர்ந்த வனப்பகுதிகளின் நடுவே அமைந்துள்ள இக்கால்வாயின் இருபுறமும் அடர்ந்து வளர்ந்த மரங்களின் வேர்கள் துளைப்பதாலும்,அவ்வப்போது ஏற்படும் சிறுஅளவிலான நிலச்சரிவுகளின் காரணமாகவும், கால்வாயின் பெரும்பகுதி கடுமையான சேதத்திற்குள்ளாவதும், அதனை பொதுப்பணித்துறையினர் சீரமைப்பதும் வாடிக்கையாக உள்ளது.

இவ்வாறு சேதமுற்ற பகுதிகளால் சர்க்கார்பதியிலிருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்பட்டால்,திருமூர்த்தி அணைக்கு 700 முதல் 750 கனஅடிநீர் மட்டுமே சென்று சேர்கிறது.
எனவே இக்கால்வாயினை வலுவான நிலையில் பொதுப்பணித்துறையின் மத்pப்பீட்டின்படி,ரூ.125 கோடி செலவில் முழுமையாக புதுப்பித்துதர வேண்டும் என பி.ஏ.பி.விவசாயிகள் சார்பில்,திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக்குழுத் தலைவர் மெடிக்கல் பரமசிவம் கோரிக்கை விடுத்துள்ளார்.


Wednesday, February 17, 2010

நீதி வேண்டும்..,இளம்பெண் அனிதா புகார்..!

ஏமாற்றிவிட்ட காதலனை,திருமணம் முடித்துவைக்கக்
கோரி,சார்ஆட்சியரிடம் மனு.!

பொள்ளாச்சி.பிப்.17. நான்கு வருடமாகக் காதலித்துவிட்டு,தன்னை ஏமாற்றிவிட்ட காதலனை தனக்கு திருமணம் முடித்துவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி,சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு தன்பெற்றோருடன் வந்து, இளம்பெண் ஒருவர் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள பொன்மலையூர் பகுதியைச் சேர்ந்த வாசுவின் மகள் அனிதா.இவர் அதே பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் என்பவரை கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்துவந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு,தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறி,அனிதாவை தனிமையில் வரவழைத்து,அனிதாவை மிரட்டி தகாதஉறவு வைத்துக் கொண்ட சசிக்குமார்,பின்னர் அவரைத் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இதனை அடுத்து பொள்ளாச்சி அனைத்துமகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த அனிதா,புகார் கொடுத்து பலதினங்களாகியும்,மகளிர் காவல் நிலையப் போலீசார் உரியநடவடிக்கை எடுக்கவில்லையென்றும்,ஒருதலைப்பட்சமாக விசாரணை மேற்கொண்டு சசிக்குமார் மீத எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்துவதாகவும்,மகளிர் காவல்நிலையப் போலீசார் மீது குற்றம்சாட்டிய அனிதா,இன்று-17.2.10-மாலை- பொள்ளாச்சி சார்ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்து,புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் மகளிர் காவல்நிலையப் போலீசார் மீது தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்,தன்னை ஏமாற்றிய காதலனை தனக்கு திருமணம் செய்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அனிதா தெரிவித்திருந்தார்.
தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் வந்து இளம்பெண் ஒருவர், தன்னைக்காதலித்து ஏமாற்றிய காதலனை தனக்கு மணம்முடித்து வைக்கவேண்டும் என்று கோரி மனுஅளித்த சம்பவம்,இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, February 6, 2010

நடிகர் ஜெயராம் மன்னிப்பு கேட்க வேண்டும்.!


நடிகர் ஜெயராம் பகிரங்க மன்னிப்புகோர வேண்டும்.
ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்.!

பொள்ளாச்சி.பிப்.6 நடிகர் ஜெயராம் கேரளாவில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது,தமிழ்ப் பெண்களைக் குறித்து,தரக்குறைவாகப் பேசியதைக் கண்டித்தும்,இதற்காக அவர் பகிரங்கமாக தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி,கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆதித் தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிரபல மலையாளம் மற்றும் தமிழ்நடிகரான ஜெயராம் கேரளாவில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.அப்போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜெயராம்,தமிழ்ப் பெண்களைக் குறித்து தரக்குறைவாக பேசினார்.இது ஒளிபரப்பும் ஆனது.
இதனைத் தொலைக்காட்சியில் கண்டபோது,தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும்,ஜெயராமுக்கு எதிராக கண்டணங்கள் தெரிவிக்கப்பட்டன.
இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று ஆதித்தமிழர் பேரவை அமைப்பின் சார்பில்,அதன் மாவட்ட நிர்வாகியான தி.செ.கோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்ப்பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசிய நடிகர் ஜெயராம் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்,அதுவரை வணிக நிறுவனங்கள் அவரை விளம்பரத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
பொள்ளாச்சி கடைவீதியிலுள்ள பிரபல வணிகநிறுவனம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால்,அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி கிழக்கு போலீசார், அனுமதியின்றி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால்,போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டபோது,இருதரப்பிற்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் நடைபெற்றது.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.பின்னர் அவர்களைப் போலீசார் கைது செய்தனர்.


Friday, February 5, 2010

பொள்ளாச்சி.பிப்.5 கோவை மாவட்டம் பொள்ளாச்சி.பி.ஏ.கல்லூரி மாணவியர் மற்றும் மாணவர்கள்,பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு இரத்ததானம் செய்தனர்.ரத்ததானம் செய்ய முன்வந்த மாணவிகளுக்கு,கல்லூரித்தலைவர் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள புளியம்பட்டி பி.ஏ.கல்லூரி மாணவிகள்,பொள்ளாச்சி அரசுமருத்துவமனைக்கு,இரத்ததானம் அளிக்க விருப்பம் தெரிவித்ததையடுத்து,அரசு மருத்துவமனையின் நம்பிக்கை மையம் மற்றும் சிவா பாராமெடிக்கல் கல்லூரி ஆகியவை இணைந்து இன்று ரத்ததான முகாம் ஏற்பாடு செய்தனர்.
இம்முகாம் துவக்கவிழாவின்போது,பி.ஏ.கல்லூரியின் தலைவர் அப்புக்குட்டி,முதலில் இரத்ததானம் செய்து துவக்கிவைத்தார்.இதனையடுத்து 30.க்கும் மேற்பட்ட மாணவிகள்,தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டதையடுத்து,தங்கள் இரத்தத்தை தானமாக வழங்கினர்.
புpன்னர்,மாணவர்களும் தொடர்ந்து ரத்ததானம் செய்தனர். இம்முகாமில் பங்கு கொண்ட அரசுமருத்துவர்கள் காஜாமைதீன்,மணிகண்டன் ஆகியோர் மாணவ,மாணவியரிடம் பரிசோதனை மேற்கொண்டனர்.மேலும் 200.க்கும் மேற்பட்டோருக்கு இரத்தத்தின் மாதிரிவகைகளும் கண்டறியப்பட்டதுடன்,மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இம்முகாமின் முடிவில் மொத்தம் 75 யூனிட் இரத்தம் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி நகருக்கு முன்மாதிரியாக,இரத்ததானம் அளிக்க முன்வந்த கல்லூரிமாணவியர் மற்றும் மாணவர்களுக்கு அக்கல்லூரியின் தலைவர் அப்புக்குட்டி மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.