பொள்ளாச்சி.பிப்.5 கோவை மாவட்டம் பொள்ளாச்சி.பி.ஏ.கல்லூரி மாணவியர் மற்றும் மாணவர்கள்,பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு இரத்ததானம் செய்தனர்.ரத்ததானம் செய்ய முன்வந்த மாணவிகளுக்கு,கல்லூரித்தலைவர் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள புளியம்பட்டி பி.ஏ.கல்லூரி மாணவிகள்,பொள்ளாச்சி அரசுமருத்துவமனைக்கு,இரத்ததானம் அளிக்க விருப்பம் தெரிவித்ததையடுத்து,அரசு மருத்துவமனையின் நம்பிக்கை மையம் மற்றும் சிவா பாராமெடிக்கல் கல்லூரி ஆகியவை இணைந்து இன்று ரத்ததான முகாம் ஏற்பாடு செய்தனர்.
இம்முகாம் துவக்கவிழாவின்போது,பி.ஏ.கல்லூரியின் தலைவர் அப்புக்குட்டி,முதலில் இரத்ததானம் செய்து துவக்கிவைத்தார்.இதனையடுத்து 30.க்கும் மேற்பட்ட மாணவிகள்,தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டதையடுத்து,தங்கள் இரத்தத்தை தானமாக வழங்கினர்.
புpன்னர்,மாணவர்களும் தொடர்ந்து ரத்ததானம் செய்தனர். இம்முகாமில் பங்கு கொண்ட அரசுமருத்துவர்கள் காஜாமைதீன்,மணிகண்டன் ஆகியோர் மாணவ,மாணவியரிடம் பரிசோதனை மேற்கொண்டனர்.மேலும் 200.க்கும் மேற்பட்டோருக்கு இரத்தத்தின் மாதிரிவகைகளும் கண்டறியப்பட்டதுடன்,மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இம்முகாமின் முடிவில் மொத்தம் 75 யூனிட் இரத்தம் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி நகருக்கு முன்மாதிரியாக,இரத்ததானம் அளிக்க முன்வந்த கல்லூரிமாணவியர் மற்றும் மாணவர்களுக்கு அக்கல்லூரியின் தலைவர் அப்புக்குட்டி மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment