பொள்ளாச்சி.மார்ச்.5 மறைந்த மா.கம்யூ.தலைவர் டபிள்யூ.ஆர் வரதராஜனின் இறப்பு குறித்து சர்ச்சைக்கிடமான வகையில் செய்தி ஒளிபரப்பியது தொடர்பாகவும், சென்னையிலுள்ள மா.கம்யூ அலுவலகம் பாட்டாளி மக்கள் கட்சியினரால் தாக்கப்பட்டதற்கு கண்டணம் தெரிவித்தும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மா.கம்யூ.தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.ஆர் வரதராஜன் மரணமடைந்தார்.அவருடைய இறப்பின் காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. விசாரணை இன்னும் முழுமையடையாத நிலையில் அவருடைய இறப்பு குறித்து சர்ச்சைக்கிடமான வகையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று,நேற்;று செய்தி ஒளிபரப்பியது.மேலும் சென்னையிலுள்ள மா.கம்யூ அலுவலகம் பா.ம.க.வினரால் தாக்கப்பட்டது.
இதனால் கடும் அதிருப்தியுற்ற மா.கம்யூ.தொண்டர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகம் முன்பாக,பா.ம.க.விற்கு கண்டணம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சி தாலுக்கா மா.கம்யூ.செயலாளர் கே.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு பா.ம.க.விற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
திடீரென்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவஇடத்திற்கு வந்த போலீசார்,அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போராட்டக்குழுவினரைக் கைது செய்தனர்.
No comments:
Post a Comment