பொள்ளாச்சி.செப்.30 தனியொரு மாணவரின் முயற்சியால் அவர் படிக்கும் கல்லூரியிலேயே ஆதரவற்றோருக்கான மறுவாழ்வு மையம் துவங்கப்பட்டுள்ளது.மேலும் கல்லூரிகள்தோறும் இது போன்ற மையங்கள் துவங்கவேண்டும் என்றும் அவர் தனது ஆவலை வெளியிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி இறுதியாண்டு படித்து வருபவர் உதயகுமார். ஆதரவற்றோருக்கு ஏதேனும் ஒரு வகையில் மாணவர்கள் உதவி செய்யவேண்டும் என்ற தனது ஆவலை அவர் படிக்கும் கல்லூரியின் மாணவ மாணவியரிடையே தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.
இதனையடுத்து உதயகுமாரின் கோரிக்கையை ஏற்ற கல்லூரி நிர்வாகம் அளித்த அனுமதியை அடுத்து,ஆதரவற்றோருக்கான மறுவாழ்வு மையம் துவங்கப்பட்டுள்ளது.
உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் திரு.வித்யாகர் இம்மையத்தை துவங்கி வைத்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் முன்னிலையில் துவங்கப்பட்ட இம்மையத்தின் மூலம் ஆதரவற்றோருக்கான பல்வேறு உதவிகளையும் தொடர்ந்து செய்ய இருப்பதாகவும்,வரும் ஆண்டுகளில் இக்கல்லூரியில் பயில வரும் மாணவர்களும் தொடர்ந்து இவ்வமைப்பினை செயல் படுத்தும் வகையில் திட்டமிட்டுள்ளதாகவும் மாணவர் உதயகுமார் தெரிவித்தார்.
மேலும் இந்த அமைப்பின் மூலம் செய்யப்படும் உதவிகளுக்கு தாங்களும் உறுதுணையாக இருப்போம் என மற்ற மாணவர்களும் தெரிவித்துள்ளனர். mcet
No comments:
Post a Comment