அம்மனை அழைத்;துவர கத்திபோடும் திருவிழா.!
பொள்ளாச்சி.செப்.28 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள நெகமம் பகுதியில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தங்கள் கைகளிலும் தோளிலும் கத்தியால் வெட்டிக்கொண்டு தங்கள் உடலை வருத்தி சௌடாம்பிகை அம்மனை தங்கள் ஊருக்குள் வந்து அருள் பாலிக்க வேண்டும் என்று வேண்டுதல் நடத்தும் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடு;த்துள்ளது நெகமம் இங்குள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.இதேபோல் இந்த ஆண்டும் நடைபெற்ற விழாவில் சக்திஅழைத்தல்,திருவிளக்கு வழிபாடு,சரஸ்வதி பூஜை,ஆயுதபூஜை உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான அலகு சேவை எனப்படும் கத்திபோடும் நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது.ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகையம்மன் தங்கள் ஊருக்குள் வந்து அருள் பாலித்து மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்பதற்காக கத்திகளால் தங்கள் கைகளிலும் தோள்களிலும் வெட்டிக்கொண்டு தங்கள் உடலை வருத்தியபடி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சௌடாம்பிகை அம்மனை அழைத்தனர்.
பஞ்ச வாத்தியங்கள் முழங்க நெகமம் சக்தி விநாயகர் கோவிலில் துவங்கிய நிகழ்ச்சி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஸ்ரீ சௌடாம்பிகை அம்மன் கோவில் வரை ஊர்வலமாகச் சென்று முடிந்தது. இத்திருவிழாவில் முளைப்பாரி எடுத்தபடி ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment