pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Monday, September 14, 2009

மலைவாழ் மக்கள் கோரிக்கை




மலைவாழ் மக்கள் கோரிக்கை.!

பொள்ளாச்சி.செப்.14 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களின் குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி,பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டது.இது குறித்து வனத்துறை அலுவலர்களிடம் கலந்தாலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது இந்திராகாந்தி வனவிலங்குச் சரணாலயம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம்.இங்குள்ள வனப்பகுதிகளில் 23.க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புகளுக்குரிய குடிநீர் உட்பட அடிப்படைவசதிகள் மற்றும் சாலைகள் ஆகியவற்றையும்,தங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு மின்வசதியும் தேவை என, இன்று-14.09.09- நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மலைவாழ்மக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

மேலும் வனத்தில் விளையும் பொருட்களை சேகரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையையும் அகற்ற அரசு நடவடிக்கை தேவை எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து மலைவாழ்மக்களின் கோரிக்கைகளைக் குறித்து,வனச்சரக அதிகாரிகள் திரு.சிவமணி,திரு.தங்கராஜ்பன்னீர் செல்வம், திரு.சிவக்குமார், திரு.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் ஒன்றும் சார் ஆட்சியர் திரு.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

மலைவாழ் மக்களின் கோரிக்கைகள் குறித்தும்,வனப்பகுதிகளில் மேற்கொள்ளக் கூடிய பணிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அம்சங்களுக்கு எதிரான கோரிக்கைகள் ஆகியவற்றைக் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து உரிய பரிசீலனைக்குப் பிறகு மலைவாழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சார்ஆட்சியர் திரு.அன்பழகன் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment