pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Sunday, September 20, 2009

பாரதப் பிரதமர் விருது பெற்ற விஜயகுமாருக்கு பாராட்டுவிழா.!


மத்தியஅரசு விருதுபெற்ற கல்வியதிகாரிக்கு பாராட்டுவிழா.!

பொள்ளாச்சி.செப்.20 - 2007-2008.ஆம் ஆண்டிற்கான பாரதப்பிரதமர் விருதுபெற்ற,அனைவருக்கும் கல்வித்திட்ட அதிகாரி திரு.எம்.பி.விஜயகுமாருக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்,பண்ணாரி குழுமங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம் தலைமையில் பாராட்டுவிழா நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியர் உமாநாத்,பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


அனைவருக்கும் கல்வித் திட்டத்தை தமிழகத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக 2007-2008.ஆம் ஆண்டிற்கான விருது,தற்போது ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரி எம்.பி.விஜயகுமாருக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது. இதற்காக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பாராட்டுவிழா நடைபெற்றது.

பண்ணாரியம்மன் குழுமங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்டஆட்சியர் உமாநாத்,பாரதிய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர்,பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டு தங்கள் பாராட்டுதல்களைக் குறிப்பிட்டனர்.

மாவட்டஆட்சியர் உமாநாத்,தனது பாராட்டுரையின்போது,தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக,செயல்வழிக்கற்றல் முறையின் மூலம், அரசுப் பள்ளிமாணவர்களும் கல்வியில் முன்னேற்றம் காண உதவியவர் எம்.பி.விஜயகுமார் எனக் குறிப்பிட்டார்.

இதனையடுத்து ஏற்புரை வழங்கிய விஜயகுமார்,அனைவருக்கும் கல்வித்திட்டத்தினை தமிழகத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு தனக்கு உதவியாக பணிபுரிந்த மேற்பர்வையாளர்கள்,ஆசிரியப்பயிற்றுனர்கள் உட்பட அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

இவ்விழாவின் ஒரு பகுதியாக பொதிகை மன்றம் என்ற அமைப்பும் துவங்கப்பட்டது.பின்னர்,கல்வி கற்க முடியாமல் இடைநின்ற மாணவர்கள் சிலருக்கு,இவ்வமைப்பின் மூலம் கல்வியை மீண்டும் தொடர்வதற்கு வசதியாக நிதியுதவியும் அளிக்கப்பட்டன.இதற்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் உமாநாத் வழங்கினார்.


No comments:

Post a Comment