சட்டஅமைச்சகத்தின் பரிந்துரையை கைவிட
வலியுறுத்தி சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்.!
பொள்ளாச்சி.செப்.23. சாலை விபத்துகளின்போது மற்ற காரணங்களை ஆய்வு செய்யாமல், வாகன ஓட்டுனர்கள் மட்டுமே விபத்துக்கு காரணம் என்று கூறி ஓட்டுனர்உரிமத்தை ரத்துசெய்வதும்,சம்பந்தப்பட்ட ஓட்டுனருக்கு 10 ஆண்டுகால சிறைத் தண்டணை விதிக்க வேண்டும் என்று சட்ட அமைச்சகம் செய்த பரிந்துரையை ரத்து செய்ய வலியுறுத்தியும்,கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சி.ஐ.டி.யு சாலைப் போக்குவரத்து மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சி.ஐ.டி.யு- சாலைப் போக்குவரத்து மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது,சாலை விபத்துகள் நடைபெறும்போது மற்ற காரணங்களைக் குறித்து ஆய்வு செய்யாமல் வாகன ஓட்டுனர் மட்டுமே விபத்துக்கு காரணம் என்று கூறி அவருடைய ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதையும்,
சம்பந்தப்பட்ட ஓட்டுனருக்கு,சட்ட அமைச்சகம் பரிந்துரைத்த பத்து ஆண்டு காலம் சிறைத் தண்டனையையும் ரத்துசெய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும்,சாலைப்போக்குவரத்து மோட்டார் தொழிலாளர்களுக்கு தனிநலவாரியம் அமைக்கவும்,பணிநேரத்தில் விபத்து ஏற்பட்டு உயிர் இழக்கும் ஓட்டுனர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும் வழங்க தமிழகஅரசு முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டது.
சி .ஐ.டி.யு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் நிர்வாகிகளான ஜி.பழனிச்சாமி,சேதுராமன்,பி.கே.சுகுமாரன், உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment