பொள்ளாச்சியை சுற்றுலாமையமாக்க வேண்டும் தொழில் வர்த்தகசபை வலியுறுத்தல்.!
பொள்ளாச்சி.செப்.15. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சுற்றுலாமையமாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையின் 28.ஆம் ஆண்டு விழா,இதன் தலைவர் திரு.ஜி.டி.கோபால கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில், பொள்ளாச்சியை சுற்றுலா மையமாக அறிவித்து அதற்கான அலுவலகத்தையும் பொள்ளாச்சியில் அமைக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்றும்,பொள்ளாச்சி நகரை சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பாதுகாக்கும் வகையில் பசுமைபொள்ளாச்சி என்ற திட்டத்தை நகராட்சி சார்பில் துவங்கி அரசு அதிகாரிகள்,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,கல்லூரி மாணவ மாணவியர்,வர்த்தக அமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படவும் தமிழகஅரசு முன்வரவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
மேலும் திருப்பூரில் இயங்கிவரும் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை பொள்ளாச்சியில் அமைக்கவும்,பொள்ளாச்சி-பாலக்காடு-திண்டுக்கல்-கோவை அகலரயில் பாதை திட்டப்பணிகளை விரைவில் முடிக்கவும் மத்திய மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மறைந்த ஆந்திர முதல்வர் திரு.ராஜசேகரரெட்டியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சிகளில் பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையின் நிர்வாகிகளும்,உறுப்பினர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment