எல்.ஐ.சி.ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
பொள்ளாச்சி.செப்.25. ஆயுள்காப்பீட்டுக்கழக முகவர்களாகப் பணியாற்றுபவர் களுக்கு அளிக்கப்பட்டு வரும் கமிஷன்தொகையை ரத்து செய்யும் விதத்தில் பரிந்துரை செய்த ஸ்வரூப் கமிட்டியைக் கண்டித்தும் அப்பரிந்துரைகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆயுள்காப்பீட்டுக் கழக முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர்களாக அகிலஇந்திய அளவில் சுமார் 13 லட்சம்பேர் பணியாற்றிவருகின்றனர்.பொதுமக்களிடமிருந்து இவர்கள் பெறும் பாலிசியின் அடிப்படையில் முகவர்களுக்கு கமிஷன் தொகை வழங்கப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளில் இக் கமிஷன் தொகை முதலில் 25 சதவீதமாக இருந்து பின்னர் 10 சதவீதமாகவும்,அதனையடுத்து வெறும் 2 சதவீதமாக மட்டுமே தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் 2011.ஆம் ஆண்டு முதல் முகவர்களுக்கு ஆயுள் காப்பீட்டுக்கழகத்திலிருந்து கமிஷன் தொகை வழங்கப்படமாட்டாது என்றும் பாலிசிதாரர்களாகிய பொதுமக்களிடமிருந்து கமிஷன் தொகையைய் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றும் ஸ்வரூப் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் பெருகிவரும் நிலையில் பொதுத் துறையாக ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை முடக்கும் வகையில் அமைந்துள்ள ஸ்வரூப் கமிட்டியைக் கண்டித்தும்,அதன்பரிந்துரையை மத்தியஅரசு அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தியும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பாலக்காடு சாலையிலுள்ள ஆயுள்காப்பீட்டுக் கழகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை விளக்கி முழக்கங்கள் எழுப்பினர்.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment