குடிநீர் கேட்டு சாலை மறியல்போராட்டம்.!
பொள்ளாச்சி.செப்.19 கோவை மாவட்டம் பொள்ளாச்சியருகே முறையான குடிநீர்விநியோகத்தை வலியுறுத்தி பொள்ளாச்சி-கோவை சாலையில் அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது ஆச்சிபட்டி ஊராட்சி.இங்கு சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்நிலையில் இப்பகுதிக்கு 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை அரை மணிநேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது என்று புகார் தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் 200 பேர், இன்று பொள்ளாச்சி-கோவை சாலையிலுள்ள சேரன்நகர்ப்பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்தும் முடங்கியது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது தங்களுக்கு போதுமான அளவு குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து அரை மணிநேரம் நடைபெற்ற சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment