தமிழகத்தில் முதன்முறையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் டாஸ்மாக் எனப்படும் ,அரசு மதுபான கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கவுன்சிலிங் முறையில் பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டன.
கடந்த மூன்று ஆண்டுகளாக டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்கள் பணியிட மாறுதல் கோரி வந்ததை அடுத்து தமிழக அரசின் உத்தரவுப்படி இவர்களுக்கான கலந்தாய்வு முகாமை கோவை மண்டல மேலாளர் திரு குமாரவேல் பாண்டியன் மற்றும் மாவட்ட மேலாளர் திரு.சம்பத் ஆகியோர் நடத்தினர்.
இதில் பொள்ளாச்சியிலுள்ள அறுபது கடைகளின் ஊழியர்கள் கலந்து கொண்டதில் 29 பேர் பணியிட மாறுதல் உத்தரவு பெற்றனர். இது போன்ற முகாம்களை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடத்த உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment