நன்றி- தினமலர்
கறுப்பு ஆடுகளுக்குகொண்டாட்டம்! நா.மு.நாச்சியப்பன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்:
யானையின் வாயில் புகுந்த கரும்பையோ, வேறு உணவையோ திரும்பப் பெற முடியாது என்பது உலகறிந்த உண்மை. அதேபோல, சுவிஸ் வங்கிகளில் நமது அரசியல் புள்ளிகளும், பணக்கார கறுப்புப் பண முதலைகளும் போட்டு வைத்துள்ள பணத்தையும் பெற முடியாது.பா.ஜ., தன் தேர்தல் அறிக்கையில், "சுவிஸ் வங்கிப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுப்போம்' எனக் கூறியது; எப்படி என்று விளக்கவில்லை. எனவே, "நாம் அமைதியாக இருந்தால், பொதுமக்கள் ஏதும் நினைத்து விடுவரோ...' என பயந்த பிரதமரும், நிதி அமைச்சரும், "பேச்சு வார்த்தை தொடரும், நடவடிக்கை எடுப்போம்' என்று நாடகமாடுகின்றனர்.வங்கிகள் கோடிக்கணக் கில் பணமுதலைகளுக்கு கொடுத்த தொகையை, வராக்கடனில் தள்ளுபடி செய்த இவர்களா, சுவிஸ் வங்கியிலிருந்து லட்சம் கோடிகளில் உள்ள பணத்தை மீட்க நடவடிக்கை எடுப்பர்? அந்த அளவு பொறுப்பு, அரசிடம் நிச்சயம் இல்லை.சுவிஸ் வங்கியின், "எங்கள் நாட்டு வங்கிகளில், பணம் போட்டுள்ள வாடிக்கையாளர்கள் பற்றிய விவரம் எக்காரணம் கொண்டும் தெரிவிக்கப்பட மாட்டாது' என்ற சமீபத்திய அறிவிப்பு, பணம் போட்டுள்ள கறுப்பு ஆடுகளின் கொண்டாட் டத்திற்கு வழி வகுத்துள் ளது.மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் எந்தத் தள்ளுபடியும், ஏழைகளைச் சேர்வதில்லை; பெரிய பணக்காரர்களும், கட்சிக்காரர்களும் தான் பலனடைகின்றனர். ஆட்சியில் இருப்பவர்கள், இதை ஆராய்ந்து, தெளிந்து செய்வதில்லை. பொதுமக்கள் பணம் கோடிக்கணக்கில் வீணாவது இது போலத்தான்!
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment