ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணி.!
பொள்ளாச்சி.அக்.7. ஹெல்மெட்டின் அவசியம் குறித்தும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரப்போக்குவரத்து அலுவலகம்,காவல்துறை மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து,விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்த சுமார் 200.க்கும் மேற்பட்டோர் அனைவரும் ஹெல்மெட் அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து விதகளை பொருட்படுத்ததாமல் செல்லும் வாகன ஓட்டிகள்,விபத்தில் சிக்குவதும்,தலைக்கவசமாகிய ஹெல்மேட் அணியாததால் உயிரிழப்பதும், வாடிக்கையாகி வருகிறது.
வுpபத்துகளை தவிர்க்கும் வகையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரப்போக்குவரத்து அலுவலகம்,காவல்துறை மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து இன்று ஊர்வலம் நடத்தின.
மகாலிங்கபுரம் பகுதியிலிருந்து புறப்பட்ட இந்த ஊர்லத்தை காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் தங்கதுரை கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இந்த ஊர்வலத்தில் போக்குவரத்து விதிகள் மற்றும் தலைக்கவசத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் 200.க்கும் மேற்பட்டோர் ஹெல்மேட் அணிந்து தங்கள் இருசக்கர வாகனத்துடன் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி நகரின் முக்கியவீதிகள் வழியாக சென்ற இந்த ஊர்வலம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முடிவடைந்தது.பின்னர்,அங்கு நடைபெற்ற கூட்டத்தில் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து விதிகளை மதிப்பதன் அவசியம் குறித்து அதிகாரிகள் எடுத்துக் கூறினர்.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment