pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Wednesday, July 7, 2010

மாட்டுசந்தை வியாபாரிகள் கோரிக்கை.!

பொள்ளாச்சி மாட்டுச்சந்தையை புறக்கணித்த கேரள வியாபாரிகள்.!
பலகோடி வர்த்தகம் பாதிப்பு.!

பொள்ளாச்சி.ஜுலை.7 தமிழகத்திலிருந்து அதிகப்படியான மாடுகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் மாடுகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்படுவதைக் கண்டித்து,கேரள மாட்டுவியாபாரிகள்,கோவைமாவட்டம் பொள்ளாச்சி மாட்டுச்சந்தையை புறக்கணித்து,காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டதால், பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் சுமார் ரூ.4 கோடி ரூபாய் அளவில் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவைமாவட்டம் பொள்ளாச்சியில் செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் கூடும், மாட்டுச்சந்தையிலிருந்து,அடிமாடுகள் மற்றும் கறவைமாடுகள் ஆகியவற்றை,பெரும்பாலும் கேரளமாட்டு வியாபாரிகள் வாங்கி,கேரளப்பகுதிகளுக்கு, லாரிகளில் ஏற்றிச் செல்வது வழக்கம். இந்நிலையில்,மாடுகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிகப்படியான மாடுகளை ஏற்றிச் செல்வதாகக் கூறி,பல்வேறு அமைப்புகள் பிராணிகள் வதை தடுப்புச்சட்டத்தைக் காட்டி,புகார் செய்வதையடுத்து,வழக்குப்பதிவு செய்யும் பொள்ளாச்சி போலீசார், லாரிகள் மற்றும் மாடுகளைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து நடைபெற்றுவரும் இவ்வாறான வழக்குகளில்,அபராதத்தொகை செலுத்தப்பட்டு லாரிகளை திரும்பப் பெற முடிந்தாலும்,பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை கோசாலையிலிருந்து திரும்பப் பெறமுடியாததால்,பல லட்ச ரூபாய் அளவில் தங்களுக்கு நட்டம் ஏறபட்டுவருவதாக கேரளமாட்டு வியாபாரிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

இதனையடுத்து இப்பிரச்சினையில் தலையிட்டு தமிழக கேரளஅரசுகள் தக்க தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தி,கடந்த 1.7.10- முதல் பொள்ளாச்சி மாட்டுச்சந்தையை புறக்கணிக்கும் போராட்டத்தில் கேரள கால்நடை வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.மேலும்,அதிகப்படியான மாடுகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கும் வகையில் தமிழகஅரசுடன்,கேரளஅரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தி,இன்று- ஜுலை.7.-கேரள சட்டமன்றத்திற்கு ஊர்வலமாகச் சென்று மனு கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து,பொள்ளாச்சி மாட்டுச்சந்தைக்கு கேரளவியாபாரிகள் வராதநிலையில் மாட்டுச்சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது.இந்நிலை தொடர்ந்தால் பொள்ளாச்சி மாட்டுச்சந்தை மூலம் நேரடியாகவும்,மறைமுகமாகவும் பயன்பெற்றுவரும் விவசாயிகள்,லாரி ஓட்டுனர்கள்,தரகர்கள் உட்பட பலஆயிரம்பேர் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

எனவே,பொள்ளாச்சி மாட்டுச்சந்தையை நம்பியுள்ள அனைவரும் பயன்பெறும் வகையில்,20.க்கும் மேற்பட்ட மாடுகளை லாரிகளில் ஏற்றிச்செல்லும் வகையில்,உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க தமிழக,கேரள அரசுகள் முன்வரவேண்டும் என்று தமிழ்நாடு மாட்டுவியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment