pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Thursday, December 23, 2010

வால்பாறையில் பிடிபட்ட சிறுத்தை அமராவதி வனப்பகுதியில் விடுவிப்பு.!

பொள்ளாச்சி.டிச.23.கோவைமாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள கெஜமுடி தேயிலைத் தோட்டத்தில்,வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கிய சிறுத்தைப்புலி பாதுகாப்பான முறையில் உடுமலையை அடுத்துள்ள அமராவதி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
கோவைமாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள தாய்முடி எஸ்டேட்டில் வசிக்கும் சரண்யா என்ற சிறுமி கடந்த சிலதினங்களுக்கு முன்பு சிறுத்தைப்புலியால் தாக்கப்பட்டு,படுகாயமடைந்தார்.
இதனையடுத்து வனத்துறையினர்,அந்த சிறுத்தையைப் பிடிப்பதற்காக,தாய்முடி மற்றும் கெஜமுடி எஸ்டேட் பகுதியில் கூண்டுகளை வைத்தனர்.இதனையடுத்து கடந்த 11.ஆம் தேதியன்று,நள்ளிரவில்,இக்கூண்டில் சுமார் 3 வயதுள்ள சிறுத்தைப்புலி ஒன்று சிக்கியது. ஆனால்,சுமார் 4 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு,தான் சிக்கிய கூண்டின் கம்பிகள்,மற்றும் வலைகளை கடித்தும்,வளைத்தும் கூண்டிலிருந்து வெளியேறிய சிறுத்தைப்புலி தப்பி வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.
இதனையடுத்து கடந்த பதினொரு நாட்களாக,மீண்டும் மூன்று இடங்களில் கூண்டுகளை வைத்து,வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதே சிறுத்தைப்புலி கெஜமுடி அப்பர் டிவிசன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கியது. இதனையடுத்து,சிறுத்தைப்புலி உரிய மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு,சுமார் 70 கி.மீ,தூரத்திலுள்ள ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்குட்பட்ட அமராவதி வனச்சரகத்திறக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
ஆனால் கூண்டிலிருந்து உடனடியாக வெளியேறாமல்,சூழ்நிiiயை நோட்டமிட்ட சிறுத்தை,சிறிது நேரம் கழித்து வனத்த்pற்குள் பாய்ந்தோடியது. லூரியின் மீது பாதுகாப்பாக நின்றிருந்த வனத்துறையினர்,சிறுத்தை மீண்டும் திரும்பிவந்து,தாக்கும் அபாயம் இருந்ததால், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சிலரவுண்டுகள் சுட்டனர்.
இதனால் அரண்டு போன சிறுத்தை படுவேகமாக வனத்திற்குள் ஓடிமறைந்தது.அமராவதி வனப்பகுதியில் மான்கள் உட்பட,உயவுக்கான விலங்குகள் அதிகளவு உள்ளது.இங்கம் அதிகளவு சிறுத்தைகள் உள்ளதால்,அவற்றுடன் இணைந்து கொள்ளும்.சிறுத்தை வசிப்பதற்கு ஏற்ற இடமாக,இந்த வனப்பகுதி உள்ளதால்,பிரச்சினைகள் எதுவும் இல்லை.கடந்த ஆறுமாதங்குளுக்கு முன் வால்பாறையில் சிக்கிய சிறுத்தையும் அமராவதி வனப்பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.என்று திருப்பூர்; மாவட்ட வனப்பாதுகாவலர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
vedios in youtube-sunpollachi

No comments:

Post a Comment