pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Thursday, January 13, 2011

P.A.P திட்ட அலுவலகத்தில் விவசாயிகள் என்ற பெயரில் கலாட்டா.!


பொள்ளாச்சி.ஜன.12.கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்திற்குட்பட்ட,காண்டூர் கால்வாய் சீரமைப்புப் பணிக்காக,ரூ.184.5 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டது.இதற்காக வந்திருந்த வந்திருந்த ஒப்பந்ததாரர்களை,விவசாயிகள் என்ற பெயரில்,பி.ஏ.பி.திட்ட அலுவலகத்திற்குள் நுழைந்த சிலர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் ஐதராபாத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள பி.ஏ.பி.எனப்படும் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்திற்குட்பட்ட காண்டூர் கால்வாய் சீரமைப்புப் பணிக்காக,தமிழகஅரசு ரூ.184.5.கோடியை ஒதுக்கியுள்ளது.மூன்று கட்டங்களாக நடைபெறும்,இப்பணிக்காக ஒப்பந்தம் கோரப்பட்டதையடுத்து,தமிழகம்,ஆந்திரா மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஒப்பந்தாரர்கள் 21 பேர்,தங்கள் ஒப்பந்தங்களை இன்று பி.ஏ.பி.திட்ட அலுவலகத்தில் அளிப்பதற்காக வந்திருந்தனர்.
பி.ஏ.பி.திட்ட கண்காணிப்புப் பொறியாளர் ரங்கநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின்போது,விவசாயிகள் என்ற பெயரில் நுழைந்த 10.க்கும் மேற்பட்டோரில் சிலர் திமுக கரைவேட்டியுடன் வந்தது மட்டுமின்றி,பெரும்பாலான ஒப்பந்ததாரர்களை,தனியே அழைத்துச்சென்று பேசினர்,பின்னர் அவர்களை மனுச் செய்யவிடாமல் தடுத்து மிரட்டினர்.மேலும் ஆந்திரமாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த ஈஸ்வர் என்ற ஒப்பந்ததாரை, அடையாளம் தெரியாத சிலர் தாக்கியதில் அவர் லேசான காயமடைந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து,பி.ஏ.பி.திட்ட அலுவலக அதிகாரிகள் கொடுத்த,புகாரின்பேரில், டி.எஸ்.பி.முத்தழகு தலைமையில்,சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், கலாட்டாவில் ஈடுபட்டவர்களை வெளியேற்றியதையடுத்து அங்கு இயல்பு நிலை திரும்பியது.
ஓப்பந்ததாரர்கள் தாக்கப்பட்டது மற்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து, விவசாயிகளாக வந்தவர்களிடம் விசாரித்தபோது,கடந்த முறை காண்டூர் கால்வாயில் பணிகளை மேற்கொண்ட சிலர்,ஒழுங்காக செய்யாமல் போனதால்,கால்வாயில் பழுதுகள் ஏற்பட்டன என்றும்,அதனால் அதனை முறைப்படுத்துவதற்காக விவசாயிகள் என்ற முறையில் வந்ததாகவும் தெரிவித்தனர்.
ஆனால்,ஆரம்பம் முதலே,குறிப்பிட்ட ஒரு ஒப்பந்ததாரரை மட்டும் உள்ளே அனுமதித்துவிட்டு மற்றவர்களை மிரட்டியும்,தாக்க முற்படுவதுமாகவும் இருந்ததால்,ரூ.184.5 கோடிக்கான டெண்டரை மொத்தமாக ஒருவரே சுருட்டுவதற்கான முயற்சிகளே தெரிந்தது.யார் அந்த வி.ஐ.பி. என்பதற்கான விடையை மட்டும் விவசாயிகளாக வந்த பொள்ளாச்சி,சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த திமுகவினர் தெரிவிக்கவில்லை.
vedios in you tube- sunpollachi

No comments:

Post a Comment