கேரளா-தமிழ் மொழிச்சிறுபான்மைச் சட்டங்கள்
உரிமைப் போராட்ட மாநாடு.!
பொள்ளாச்சி.பிப்5. தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் மொழிச் சிறுபான்மைச்சட்டங்கள் அனைத்தையும் நடைமுறைப்படுத்த கேரளஅரசு முன்வரவேண்டும் என்று வலியுறுத்தி,கேரளமாநிலம் கொழிஞ்சாம்பாறையில், உரிமைப்போராட்ட அறிவிப்பு மாநாடு நடைபெற்றது.கேரளமாநிலத் தமிழ் வளர்ச்சிப்பணி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இம்மாநாட்டில் பல்வேறு தமிழ்அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கடந்த 1956.ஆம் ஆண்டு,கேரளமாநிலம் உருவாக்கப்பட்டபோது மத்திய, மாநிலஅரசுகள்,தமிழ்மொழிச் சிறுபான்மை மக்களுக்கு சட்டரீதியாக உரிமைகளை அளிக்க உத்தரவாதம் அளிக்கப்பட்டது.கேரள-தமிழக எல்லைகளில் வாழும் பொதுமக்களில்,15 சதவீதம் பேர்,தமிழர்களாக இருந்தால்,அது மொழிச் சிறுபான்மை தமிழ்ப் பகுதி என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது.
இப்பகுதிகளில் தமிழும் ஆட்சிமொழியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,கோவைமாவட்டத்தின் அருகாமையில் இருக்கும் கேரள எல்லைப்பகுதிகளில் உள்ள கொழிஞ்சாம்பாறை,சித்தூர்,கோபாலபுரம், கோவிந்தாபுரம்,எருத்தேன்பதி,வேலந்தாவளம் உள்ளிட்ட பகுதிகளில்,15 சதவீதம் முதல்,90 சதவீதம் வரை தமிழர்கள் வசித்துவருகின்றனர்.
இப்பகுதிகளில் பெரும்பான்மையாக தமிழர்கள் வசித்துவருவதால்,கேரளஅரசு பல்வேறு நிலைகளிலும்,தங்களைப் புறக்கணிப்பதாக அங்குள்ள தமிழ் அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ப்ளஸ்.டூ மாணவர்கள் தமிழகத்தில் மலையாளத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்போது,கேரளத்தில் உள்ள மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்ற பல ஆண்டுக் கோரிக்கையை,கடந்தமாதம் கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் கேரளஅரசு நிறைவேற்றியுள்ளது.ஆனால் தமிழ்மொழிச் சிறுபான்மைக்குரிய மேலும் பல உரிமைகள் நிறைவேற்றப் படவில்லை என்றும் கேரளாவில் நடைபெறும் கல்லூரித் தேர்வுகள் தமிழில் எழுதவும்,கல்விநிறுவனங்களில் ஐந்து சதவீத இடஒதுக்கீடு இருப்பதை நடைமுறைக்கு கொண்டுவரவும்,அரசுப்பணித்தேர்வு மீண்டும் தமிழில் நடத்தவும் வேண்டும் என்பதுடன் மொழிச்சிறுபான்மையினர் வசிக்கும் இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் உள்ள அலுவலர்கள் தமிழ்மொழி தெரிந்தவர்களாகவும்,அலுவலகப் பெயர்கள் தமிழிலும் இருக்கவேண்டும். வாக்காளர் பட்டியல்,வாக்குச்சீட்டுகள், ரேஷன்கார்டுகள் ஆகியவை தமிழில் இருக்கவேண்டும்.தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என சான்றிதழ் வழங்கப்பட்டவர்களுக்கு,கேரளத்திலும் சான்றிதழ்களை வழங்கவேண்டும் என்பதும் இவர்கள் கோரிக்கையாக உள்ளது.
பேட்டி-4 மற்றும்5-விக்டர்சார்லி-கேரளமாநில தமிழ்வளர்ச்சிப்பணி இயக்கம்.
அதேபோல், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதாலேயே,இப்பகுதி விவசாயிகளுக்கு போதுமான நீர்ப்பாசன வசதிகளும் செய்யப்படவில்லை என்றும்,இதனை இப்பகுதி சட்டமன்ற உறுப்பினரும் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
மேலும்,சித்தூர் மற்றும் கொழிஞ்சாம்பாறையிலிருந்து கோவை, பொள்ளாச்சிபகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கவேண்டும். மன்னார்;காட்டிலிருந்து அகழி, ஆனைகட்டி வழியாகவும்,கொல்லங்கோட்டிலிருந்து கோவிந்தாபுரம் வழியாகவும் பேருந்துகள் இயக்க கேரளஅரசு முன்வரவேண்டும் என்றும் இம்மாநாட்டின்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
visuals in youtube- sunpollachi-kerala-mozi sirupaanmainarin urimai poraatta maanaadu
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment