கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில்,விலஙிகுகள் கணக்கெடுப்புப் பணிகள் இன்று காலை முதல் துவங்கியது.தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெறும் இப்பணியில்,வனத்துறை ஊழியர்கள்,தன்னார்வத் தொண்டர்கள் உட்பட சுமார் 400பேர் பல குழுக்களாகப் பிரிந்து ஈடுபட்டுள்ளனர்.
கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில்,புலி,யானை,வரையாடு,கரடி,பல்வேறு வகை மான்கள் உள்ளிட்ட,விலங்குகள் ஏராளமான அளவில் வசித்துவருகின்றன.
இந்நிலையில்,வருடம்தோறும் வனவளம் குறித்து அறிந்து கொள்வதற்காக, விலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுவது வழக்கம்.இதன்படி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி,வால்பாறை, மானாம்பள்ளி,உலாந்தி,மற்றும் உடுமலை,அமராவதி ஆகிய வனச்சரகங்களில் இன்று முதல் விலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.
தொடர்ந்து 3 தினங்கள் வரை நடைபெறும் இக்கணக்கெடுப்புப் பணியில் வனத்துறை ஊழியர்கள்,தன்னார்வத் தொண்டர்கள்,விஞ்ஞானிகள்,வனவிலங்கு ஆர்வலர்கள் உள்ளிட்ட சுமார் 400 பேர் பங்கேற்றுள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சுமார் 958 சதுர.கி.மீ பரப்பளவையும் பல்வேறு பகுதிகளாக,நேர் கோட்டுமுறையில் பிரிக்கப்படுவதையடுத்து,இவ்வழியே கணக்கெடுப்புக் குழுவினர் பயணிக்கின்றனர்.அப்போது வழியில் தென்படும் தாவரஉண்ணிகள் மற்றும் மாமிசஉண்ணிகள் ஆகியவற்றை நேரடியாக காண்பது குறித்தும்,அவற்றின் எச்சங்கள் மற்றும் காலடித்தடங்கள்,உண்ணப்பட்ட இரைகள் ஆகியவற்றைக் குறித்தும் தயாரிக்கப்படும் குறிப்புகளின் அடிப்படையில் இக்கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.
மேலும்,வருடம்தோறும் நடைபெறும் இக்கணக்கெடுப்புப் பணியின் மூலம் வனப்பகுதிகளில் உள்ள தாவரங்களின் செழுமை மற்றும் விலங்குகளின் பெருக்கம் ஆகியவை கண்ணகாணிக்கப்படுவதாகவும், இவற்றின் எண்ண்pக்கை கூடுவது அல்லது குறைவதற்கேற்ப மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கணக்கெடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறை அதிகாரிகள் மற்றும் தன்னர்வத் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.
பேட்டி- தங்கராஜ் பன்னீர் செல்வம்-வனச்சரகர்
vedios in youtube- sunpollachi-anaimalai tiger reserve senses-
vedios in youtube- sunpollachi-anaimalai tiger reserve senses-
No comments:
Post a Comment