பொள்ளாச்சி.மார்ச்.21.கோவை மாவட்டம் காந்pதிநகர்ப் பகுதியில்,குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகாமையில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால்,அப்பகுதியில் கடுமையான சுகாதாரக்கேடுகள் ஏற்பட்டு வருகிறது.மேலும் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு தொற்றுநொய்களுக்கும் ஆளாகிவருகின்றனர்.இப்பிரச்சினைக்கு தக்க தீர்வு காண அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறைப் பகுதியில் ஆடு,மாடு இறைச்சிக்கடைகள் மற்றும் மீன் கடைகளும் ஏராளமாக உள்ளன.இக்கடைகளில் வாராந்திர நாட்களில் செய்யப்படும் விற்பனையைவிட ஞாயிற்றுக்கழமைகளில் இறைச்சி விற்பனை நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
இந்நிலையில்,வெட்டப்படும் இறைச்சியின் கழிவுகளை,சரியான முறையில் அப்புறப்படுத்த,இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு போதிய வசதிகள் நகராட்சியால் செய்து தரப்படவில்லை.மேலும்,கடைகள் அமைந்துள்ள வளாகத்தை சுத்தம் செய்யும் பணியிலும் நகராட்சி நிர்வாகம் தொடர்ச்சியாக ஈடுபடுவதில்லை.
இதனால்,இறைச்சிக் கழிவுகள்,வால்பாறை பகுதியிலுள்ள காந்திநகர் குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகாமையில் கொட்டப்படுகிறது.தொடர்ந்து கொட்டப்பட்டுவரும் இறைச்சிக்கழிவுகளால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் ஏற்படு;கிறது.இதனால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 150 குடும்பங்கள் பெரம் மனஉளைச்சலுக்கு ஆளாகிவருகின்றனர்.
மேலும் குடிநீர் ஆதாரங்களுக்கு அருகாமையிலேயே கொட்டப்பட்டு வரும் இறைச்சிக்கழிவுகளிலிருந்து உற்பத்தியாகும் புழுக்களும்,தொற்றுநோய்க்கிருமிகளும்
இப்பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு வகையான தொற்றுநொய்களையும் ஏற்படுத்தி வருகிறது.இப்பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வுகாண நகராட்சி நிர்வாகத்தை பலமுறை வற்புறுத்தியும் இதுவரை தக்க நடவடிக்கை இல்லை என்று இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பேட்டி-ராமலட்சுமி
எனவே விரைவில் இப்பிரச்சினைக்கு தக்க தீர்வு காண தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில்,வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment