பொள்ளாச்சி.மே.18.கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள பெரிய களந்தை பகுதியிலுள்ள ஜோதிடர் ஒருவரின் வீட்டில் சிறுத்தைப்புலி,புள்ளிமான் ஆகியவற்ற்pன் தோல்கள் கண்டுபடிக்கப்பட்டதையடுத்து ஜோதிடரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் இவரிடம் ஏராளமான பிராந்தி பாட்டில்கள் மற்றும் வயாக்ரா மாத்திரைகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கோவைமாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது பெரியகளந்தை.இங்குள்ள மணியக்காரர் தோட்டம் பண்ணை வீட்டில்,மூர்த்தி.55.என்பவர்,சிறுத்தைப்புலியின் தொல் மீது அமர்ந்து ஜோதிடம் பார்ப்பதாக,ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து,பொள்ளாச்சி வனச்சரகர் வீரமணி தலைமையில்,வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்மூர்த்தியின் வீட்டில் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.இச்சோதனையில்,ஜோதிடம் பார்ப்பதற்காக மூர்த்தி அமரும் நாற்காலியில் சிறுத்தைப்புலியின் தோல் ஒன்று விரிக்கப்பட்டிருப்பதும்,யாகம் நடத்தும் இடத்தில் புள்ளிமானின் தோல் ஒன்று விரிக்கப்பட்டிருப்பதும் கண்டுபடிக்கப்பட்டது.மேலும் வனத்துறையினர் தொடர்ந்து நடத்திய சோதனையில் கடா மானின் தலையுடன் கூடிய கொம்புகள்,நட்சத்திர ஆமையின் ஓடு,மற்றும் யானையின் பல் ஆகியவையும் இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர்,ஜோதிடர் மூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டதில்,இவற்றை வைத்திருப்பதற்கான எவ்வித அரசு ஆவணங்களும் அவரிடம் இல்லையென்பது தெரியவந்தது.
இதனையடுத்து விலங்குகளின் பாகங்களைப் பறிமுதல் செய்த வனத்துறையினர்,வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்,ஜோதிடர் மூர்த்தியையும் கைது செய்தனர்.பின்னர் பொள்ளாச்சி நடுவர் நீதிமன்ற எண்.2.ல் ஆஜர் செய்யப்பட்ட மூர்த்தி 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.
ஜோதிடர் வீட்டிலிருந்து விலங்குகளின் தோல் மற்றும் உடல் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
more vedios in youtube-sunpollachi channel
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment