பொள்ளாச்சி.நவ.4 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் மற்றும் ஆழியாறு இலங்கை அகதிகள் முகாமில் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மற்றம் மாவட்ட ஆட்சியர் உமாநாத் ஆகியோர் இன்று ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு,வரும் 10.ஆம் தேதிக்குள் அறிக்கைகள் சமர்ப்பிக்குமாறு தமிழகமுதல்வர் திரு.மு.கருணாநிதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து,கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் மற்றும் ஆழியாறு அகதிகள் முகாமில் ஊரகத்தொழில் துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பொங்கலுர் பழனிச்சாமி,மாவட்ட ஆட்சியர் உமாநாத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் உட்பட அதிகாரிகள் இன்று ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது அகதிகள் முகாமில்,மின்சாரவசதி,தெருவிளக்கு,குடிநீர் வசதி,சாலை வசதிகள்,சாக்கடை மற்றும் கழிப்பிட வசதிகள் கூடுதலாகத் தேவை என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.மேலும் இலங்கைத்தமிழர்களுக்காக தமிழகஅரசு அளித்துவரும் மாதாந்திர உதவித்தொகையை,மாதத்தின் முதல் வாரத்திலேயே கிடைக்குமாறு செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.இது குறித்து அமைச்சர் பழனிச்சாமி கூறும்போது அரசுக்கு அளிக்கப்படும் அறிக்கையைத் தொடர்ந்து,இம்முகாமில் தேவைப்படும் வசதிகளை விரைவில் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment