பொள்ளாச்சி.நவ.10 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி உறுப்பினர்கள்,பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட,பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,தங்கள ;வாயில் கறுப்புத்துணியைக் கட்டியபடி உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சியை அடுத்துள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில்,குடிநீர் , தெருவிளக்கு வசதி உட்பட பல்வேறு வசதிகளை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திட்டப்பணிகளுக்கு உரிய நிதியை பேரூராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்திவருவதால்,வளர்ச்சிப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் புகார் தெரிவித்த பேரூராட்சி உறுப்பினர்கள்,மாவட்ட நிர்வாகம் உடனடியாக,இப்பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக,திமுக,அதிமுக,தேமுதிக உட்பட அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் தங்கள் வாயில் கறுப்புத்துணியைக் கட்டியபடி இப்போராட்டத்தில் கலந்து கொண்டதால்,இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்,முறைப்படி மன்றக்கூட்டத்தை நடத்தவேண்டும்,பொதுசுகாதாரத்தை சீர்படுத்த வேண்டும்,பேரூராட்சித் தலைவர் மற்றும் செயல்அலுவலர் ஆகியோர் முறையாக அலுவலகத்திற்கு வந்து தங்கள் பணிகளைச் செய்யவேண்டும் என்பதுட்பட பல்வேறு கோரிக்கைகளும் இப்போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment