பொள்ளாச்சி.நவ.10 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள சூளேஸ்வரன்பட்டி நியாயவிலைக்டையை இரண்டாகப்பிரித்து, புதியநியாயவிலைக்கடையை உடனடியாக அமைக்கவேண்டும் என வலியுறுத்தி,பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி.இங்குள்ள நியாயவிலைக்கடையில் ஜோதிநகர்,அமைதிநகர் உட்பட பல பகுதிகளிலிருந்து பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் இக்கடையில் சுமார் 2700 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்படுவதால்,அவற்றை அனைவரும் பெறுவதில் கடும் சிரமம் ஏற்பட்டுவந்தது.
எனவே கடந்த சில தினங்களுக்கு முன்னர்,மேற்கண்ட கடையில் உள்ள குடும்ப அட்டைகளில் பாதியை,புதியநியாயவிலைக்கடையை அமைத்து அங்கு பொருட்கள் வழங்கவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தப்பட்டது.
இதனையடுத்து,அமைதிநகர் பகுதியில் புதிய நியாவிலைக்கடை அமைக்கப்படுவதாகவும்,அதில் 1200 குடும்ப அடடைகளுக்கு பொருட்கள் வழங்கப்படும் என்றும்,குடிமைப் பொருள் வழங்கல்துறையின் சார்பாக அறிவிக்கப்பட்டது.
ஆனால்,புதிய நியாயவிலைக்கடை இதுவரை அமைக்கப்படவில்லை.மேலும் பிரிக்கப்பட்ட 1200 குடும்பஅட்டைகளுக்கு சூளேஸ்வரன்பட்டியிலுள்ள கடையிலும் பொருட்கள் வழங்கப்படவில்லை.இதனால் அப்பகுதி பொதுமக்கள் aதங்களுக்குரிய பொருட்கள் கிடைக்காமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தியுற்ற பொதுமக்கள்,சூளேஸ்வரன்பட்டியிலுள்ள நியாயவிலைக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அப்போது இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர உடனடியாக புதிய நியாயவிலைக்கடையை இப்பகுதியில் அமைக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment