pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Tuesday, January 5, 2010

ரேக்ளா பந்தயங்கள்.!





கோவை மாவட்டம் பொள்ளாச்சியின் பசுமையையும், மற்றும் அழிவின் விளிம்பில் இருக்கும் காங்கேயம் காளை இனத்தையும் பாதுகாக்கவேண்டும் என்று வலியுறுத்தி,பொள்ளாச்சியை அடுத்துள்ள வடக்கிபாளையம் பகுதியில் ரேக்ளா மாட்டுவண்டிப்பந்தயம் நடைபெற்றது.200 மற்றும் 300 மீ என இருபிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளை,தமிழக கால்நடைத்துறை அமைச்சர் திரு.பொங்கலூர் பழனிச்சாமி கொடியசைத்து துவக்கிவைத்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புசபை மற்றும் நெகமம் கே.வி.கே.அறக்கட்டளை சார்பில் ரேக்ளா மாட்டுவண்டிப் பந்தயங்கள் நடைபெற்றன. பொள்ளாச்சியின் பசுமையையும்,சுற்றுச்ச+ழலையும் பாதுகாக்கவேண்டும் என்றும்,அழிந்து வரும் காங்கேயம் காளை இனத்தைப் பாதுகாப்பதில் விவசாயிகளிடையே விழிப்புணர்வை வலியுறுத்தியும் இப்போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளை தமிழக ஊரகத்தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கொடியசைத்து துவக்கிவைத்தார். மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்துணைத்தலைவர் திரு.செல்லமுத்து உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
200 மீ மற்றும் 300 மீ என இருபிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் கோவை மாவட்டம் மட்டுமின்றி,திருப்பூர்,ஈரோடு மாவட்டங்கள் மற்றும் கேரளமாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 300க்கும் மேற்பட்ட ரேக்ளா பந்தயவீரர்கள் கலந்து கொண்டு,ரேக்ளா மாட்டுவண்டிகளை ஓட்டினர்.
பந்தயதூரத்தை மிகக்குறைந்த விநாடிகளில் கடந்துசெல்லும் ரேக்ளா வண்டிகளுக்கு முதல் மூன்று பரிசுகளாக ஒரு சவரன் தங்கம் முதல் அரை சவரன் வரையான தங்கக் காசுகளும்,ஆறுதல் பரிசுகளாக கேடயங்களும் வழங்கப்பட்டன.
மேலும்,காங்கேயம் காளைஇனம் அழிந்து வருவதாகவும்,அதனை பராமரிக்கும் விவசாயிகளுக்கு தமிழகஅரசு மானியம் வழங்கவேண்டும் என்றும், இப்போட்டிகளை நடத்திய அமைப்பின் சார்பில் தமிழகஅரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment