பொள்ளாச்சி.ஜன.5 போக்குவரத்து வாரவிழாவை முன்னிட்டு,கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து தலைக்கவசம் எனப்படும் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணியை நடத்தின.இதில் ஏராளமானோர் ஹெல்மெட் அணிந்தபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் சார்பில் கடந்த ஜனவரி.1.ஆம் தேதிமுதல் போக்குவரத்து விழிப்புணர்வு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக இன்று தலைக்கவசம் மற்றும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து இருசக்கர வாகனஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,பேரணி நடத்தப்பட்டது.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியிலிருந்து துவங்கிய இப்பேரணியை வருவாய்க்கோட்டாட்சியர் அன்பழகன் கொடியசைத்து துவக்கிவைத்தார் வட்டாரப்போக்குவரத்து அலுவலர் மணி,போக்குவரத்து ஆய்வாளர்கள் உதயகுமார்,சிவகுமாரன்,செல்வி,பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நமச்சிவாயம் மற்றும் டிராபிக் வார்டன் அமைப்பைச் சேர்ந்த கமலக்கண்ணன் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மகாலிங்கபுரத்திலிருந்து துவங்கிய ஊர்வலம்,நகரின் முக்கிய சாலைகள் வழியாக உடுமலை சாலையிலுள்ள வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் வரை நடைபெற்றது.தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர், தலைக்கவசத்துடன்,தங்கள் இருசக்கர வாகனத்துடன் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment