பொள்ளாச்சி.ஜன.19 கேரளமாநிலத்திலிருந்து,கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு எவ்வித அரசு ஆவணங்களுமின்றி கொண்டுவரப்பட்ட யானையை,ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.மேலும் இது தொடர்பாக யானைப்பாகன் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சிஒன்றுக்கு கேரளமாநிலம் பாலக்காடு பகுதியிலிருந்து,ஏமனூர் பகவதியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான ராஜசேகரன் என்ற யானை கொண்டுவரப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த ஆனைமலை புலிகள்காப்பக களஇயக்குனர் பசவராஜ் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி வனச்சரகர் வீரமணி தலைமையில் வனத்துறையினர் கோவை சாலையில் தணிக்கைணில் ஈடுபட்டனர்.
அப்போது தனியார் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கேரளமாநில எல்லையான நடுப்புணி வழியாக செல்வதற்காக யானையைக் கொண்டு சென்ற யானைப்பாகனான கேரளமாநிலம் பாலக்காடு மாவட்டம் கல்லேகுளங்கரை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்-எ-மணி வயது.38-மற்றும் அவரது உதவியாளர் கிருஷ்ணன்குட்டி-வயது.24- ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் கேரளம் மற்றும் தமிழகவனத்துறை உயர்அதிகாரிகளின் முன்அனுமதியோ,ஆந்திராக்ஸ் உள்ளிட்ட நோய்கள் இல்லை என்பதற்காhன மருத்துவசான்றிதழ்களோ இல்லையென்பது தெரியவந்தது.
இதனால் யானையைப் பறிமுதல் செய்த வனத்துறையினர்,யானைப்பாகனையும், உதவியாளர் ஆகிய இருவரையும் கைது செய்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து 15 நாள் சிறைக்காவலில் வைக்கப்பட்டனர்.
பொள்ளாச்சியில் யானை ஒன்று பறிமுதல் செய்;யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment