பொள்ளாச்சி.ஜன.16 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்து, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்ஸ்லிப்பில் இன்று யானைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.வனத்துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட,டாப்ஸ்லிப்பில் வனத்துறையினர் சார்பில்,யானைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் பசவராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்,கோழிகமுத்தி முகாமைச் சார்ந்த, நான்கு குட்டியானைகள் உட்பட 21 யானைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
இதனையடுத்து பொதுமக்கள் சார்பில் புதுப்பானைகளில் பொங்கல் வைத்து யானைகளுக்கு வழங்கப்பட்டது. புpன்னர்,யானைகளுக்கு பிடித்தமான கரும்பு,வெல்லம்,வாழைப்பழம் ஆகியவையும் வழங்கப்பட்டன.
மேலும் இவற்றை யானைகளுக்கு வழங்குவதில் பொதுமக்களும்,குழந்தைகளும் மிகுந்த ஆர்வம் காட்டியதோடு,புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.
ஆண்டுதோறும் காணும் பொங்கல் நாளன்று நடைபெறும் இவ்விழாவில்,முகாம் யானைகளின் உழைப்பை நினைவுகூறும் வகையிலும்,வனம் மற்றும் வனவளத்தில் யானைகளின் பங்கு குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இவ்விழா கொண்டாடப்படுவதாக ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் பசவராஜ் தெரிவித்தார்.
இவ்விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்வது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், யானைகளைக் குறித்து ஏராளமான செய்திகளை தாங்கள் அறிந்துகொள்ள உதவியதாகவும் தெரிவித்தனர். கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கலந்து கொண்டனர்.
ஏராளமான பொதுமக்கள் இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக 500.க்கும் மேற்பட்ட,கார்களில் இங்கு தொடர்ந்து வந்ததால் சேத்துமடை முதல் டாப்ஸ்லிப் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
No comments:
Post a Comment