
பொள்ளாச்சி.ஜன.9 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையப் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் உரிமம் பெறாத மற்றும் சமீபத்தில் வெளியான தமிழ்ப்படங்களின் திருட்டு விசிடியை விற்பனை செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்து திருட்டு விசிடிக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கோவை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின்பேரில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார்,இன்று பொள்ளாச்சியில் உள்ள சில விசிடி மற்றும் டிவிடிக்களை விற்பனை செய்;யும் கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
உடுமலை சாலை,சுப்ரமணியசாமி கோவில்தெரு,பத்ரகாளியம்மன் கோவில் வீதி உட்பட பல இடங்களில் நடைபெற்ற,இச்சோதனையில்.சமீபத்தில் வெளியான கந்தகோட்டை,உனக்குள் ஒருவன்,வேட்டைக்காரன், அவதார், ஆதவன், பழசிராஜா, யோகி, ரேணிகுண்டா,படிக்காதவன்,உட்பட பல்வேறு புதிய தமிழ்ப்படங்கள் மற்றும் உரிமம் பெறாத திரைப்படங்கள்,ஆபாசப்படங்கள் என 165 விசிடிக்களை போலீசார் கைப்பற்றினர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார்,கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களான,அப்துல்லா, ஜெகதீசன், உமேஷ், இல்பான்ஷா ஆகிய 4 பேரையும் கைது செய்து குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1.ல் ஆஜர்படுத்தியதையடுத்து,அவர்கள் 15 நாள் சிறைக்காவலில் வைக்கப்பட்டனர்.
இதனிடையே,போலீசார் அதிரடி சோதனையை இன்று மேற்கொள்ளவுள்ளதாக
அதிகாலையிலேயே,திருட்டுவிசிடிக்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் பலரும் தெரிந்து கொண்ட தகவலையடுத்து,பல்வேறு கடைகள் மூடப்பட்டே இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment