பேசாமல் கிடந்த பெரியசாமி, எண்பது வயதான,உடல் துரும்பாய் இளைத்த ஒருநோயாளி,மகன்கள் அவரை தனியாக வைத்திருந்த ஒரு அறையில், அதிகமானபுழுக்கம் என்பதால் காற்றோட்டத்திற்காக,எலக்ட்ரீசியன் ஒருவரை அழைத்துவந்து புதிய மின்விசிறி மாட்டினார்கள்.
மின்விசிறியை மாட்டி அதனை ஓடவைத்தபோது,பெரியசாமிக்கு கடுமையானமூச்சுத்திணறல் ஏற்பட்டதோடு,உடம்பும் உதறித் தூக்கிப் போட்டது.
இதனால் அரண்டுபோன பெரியசாமியின் மகன்கள்,அருகாமையிலிருந்தமருத்துவரை அழைத்துவந்து,செய்த சோதனையில் மருத்துவருக்கு ஒன்றுமேவிளங்காத நிலை.
“எப்போதெல்லாம் இப்படியாகிறது..?.”
“மின்விசிறியை போடும்போதெல்லாம் அவருக்கு தூக்கி,தூக்கிப் போடுகிறதுடாக்டர்”
அப்படியா..சரி மின்விசிறியை போடுங்கள்..,
சுவிட்ச் போட்டதுதான் மாயம்;..,பெரியசாமி ஆவேசத்துடன் காற்றில் பறந்துசெல்லமுயன்றதுபோல இருந்தது.
பதறிப்போன டாக்டர்.உடனே சுவிட்சை நிறுத்திவிட்டு மீண்டும் பெரியசாமியைசோதனைசெய்ய,அப்படியொன்றும் வித்தியாசமான உடற்கோளாறு எதுவும்தென்படவில்லை.
‘இது என்ன மாயமாக இருக்கும்..?,மின்விசிறியைப் போட்டவுடன,பெரியசாமிபறக்கிறார் என்றால்,மின்விசிறியைப் போட்டவுடன்….’ யோசித்தபடியேமின்விசிறியை அவர் நோட்டமிட,அவரைப்பின்பற்றி எல்லோரும் மேலேயேபார்த்தபடி யோசிக்க..,
அதுவரை பேசாமல் கிடந்த பெரியசாமி, “டேய்..அந்த ஃபேனின் றெக்கையைதிருப்பி மாட்டுங்கடா..என்று கதறினார்.
“ …………………………”
இப்போது “அந்த எலக்ட்ரீசியனை” உதைப்பதற்காக பெரியசாமியின் மகன்கள்தேடிக்கொண்டிருக்கின்றனர்.
“டேய்.வெங்கடேசா…ஓடீரு..”
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment