ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க
வழக்கறிஞர்கள் சங்கம் வேண்டுகோள்.!
பொள்ளாச்சி.ஜன.6 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒருங்;கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க அரசு முன்வரவேண்டும் என்றும்,வழக்கறிஞர்கள் சங்கம் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும்,புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் சங்கநிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சார்பு நீதிமன்றம்,மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் எண்.1.மற்றும் எண்.2 ஆகியவை தனித்தனி இடங்களில் அமைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு நடைபெற்ற வழக்கறிஞர்கள் மன்றத்தேர்தலில் சங்கத்தின் தலைவராக பி.குமரவேல்,செயலாளராக மணிவண்ணன் மற்றும் பொருளாளராக விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கான பதவியேற்பு விழா வழக்கறிஞர்கள் சங்க வளாகத்தில்,இன்று நடைபெற்றது.முன்னாள் தலைவர் மீரான்மைதீன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் 100.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து புதிய நிர்வாகிகளாகப் பதவியேற்றுக் கொண்டவர்கள் சார்பில் பேசிய வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் குமரவேல்,பொள்ளாச்சியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் அமைந்த ஒருங்கிணைந்த வளாகம் ஒன்றை அமைக்க தமிழகஅரசு முன்வரவேண்டும் என்றும்,அதனை நிறைவேற்றும் முயற்சியில் வழக்கறிஞர்கள் சங்கநிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment