பொள்ளாச்சி.டிச.13 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வரிசெலுத்துவோருக்கான ஆலோசனை முகாம் நடைபெற்றது.ஆடிட்டர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இம்முகாமில்,திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் டேக்ஸ் ஃபாரம் எனப்படும் ஆடிட்டர்கள் சங்கம் சார்பில்,வரிசெலுத்துவோருக்கான ஆலோசனைமுகாம் நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் அனந்தராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், வணிகர் சங்கப்பிரதிநிதிகள்,அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் பங்கேற்றனர்.
வரிவிதிப்பு மற்றும் வரிசெலுத்துவது குறித்தும்,மத்திய கலால்வரி, விற்பனைவரி,ஏற்றுமதி, இறக்குமதிவரி மற்றும் மதிப்புக்கூட்டுவரி உட்பட பல்வேறு சந்தேகங்கள் குறித்தும்,இம்முகாமில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட முன்னாள் வணிகவரித்துறை இணைஆணையர் எம்.கருணாகரன், நிதிஅமிர்தம் மாதஇதழின் ஆசிரியரும்,வணிகவரித்துறை நிபுணருமான ஈரோட்டைச் சேர்ந்த ஆர்.முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
சங்க நிர்வாகிகளான சரவணன்,வேணுமுத்து,ஆனந்தப்பிரபு உள்ளிட்டோர் முகாமிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment