தனக்குள் ஏந்திக் கொண்டு-பிறக்கும்
புத்தாண்டுக்குப் பெருமை..!
தமிழுக்காய் பிறக்கும் ஆண்டு
தமிழ்ச்சான்றோர்க்கு-மேலும்
சிறப்பைச் சேர்க்கும் புத்தாண்டு
ஒப்பாரும்,மிக்காருமில்லாத
நாட்டை கனவாய்க்
கண்ட கம்பனுக்கும்,
கண்ணகியின் புரட்சியை
காவியமாய் படைத்திட்ட
இளங்கோவிற்கும்,
முத்தமிழ் வளர்த்த ஈசனிடம்
உண்மைக்காய் வாதிட்ட
புலவர் நக்கீரனுக்கும்
இருவரிக் குறளில்
எழுகடல் பொருள் தந்த
வள்ளுவனுக்கும்
பறையருக்கும்,புலையருக்கும்
விடுதலை வேண்டிய
மகாகவி பாரதிக்கும்,
ஓடப்பரையெல்லாம்
உதையப்பராக்கிய
பாவேந்தன் பாரதிதாசனுக்கும்
பெருமை சேர்க்கும்..
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை
தனக்குள் ஏந்திக் கொண்டு-பிறக்கும்
புத்தாண்டுக்குப் பெருமை..
தமிழால் பெருமையுறும்
புத்தாண்டு..,தமிழராய்
வாழ்வதில் பெருமை
சேர்க்கும் புத்தாண்டு..
இப்புத்தாண்டும்,தமிழும்போல
இணையட்டும் உம்வாழ்வில்
செல்வமும் நலமுமென..
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!

புதுகோட்டை
கவிஞர் .செ.காளிமுத்து
போக்குவரத்து காவல் நிலையம்
பொள்ளாச்சி -கோவை மாவட்டம்.
No comments:
Post a Comment