பொள்ளாச்சி.டிச.17. கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியற்கல்லூரி மாணவர்கள் இன்று நடைபெற்ற முகாமில்,2.வது நாளாக இரத்ததானம் செய்துள்ளனர்.இம்முகாமின் மூலம்,2009.ஆம் ஆண்டைமுன்னிட்டு 2009 யூனிட் இரத்தத்தை பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சேமிப்பதற்காகவும் இக்கல்லூரி மாணவர்கள் உதவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் என்.ஐ.ஏ.கல்விநிறுவனத்தைச் சேர்ந்த நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நேற்று நடத்திய இரத்த தான முகாமில் 121 மாணவர்கள் தங்கள் இரத்தத்தை தானமாக வழங்கினர்;. இதனையடுத்து,இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்ற முகாமில் மகாலிங்கம் பொறியியற் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் 22 பேர் தங்கள் இரத்தத்தை தானமாக வழங்கினர். இம்முகாமின் மூலம் 2009.ஆம் ஆண்டை முன்னிட்டு,2009 யூனிட் இரத்தத்தை சேமித்த சாதனையை,பொள்ளாச்சி அரசுமருத்துவமனை எட்டியதற்கு என்.ஐ.ஏ.கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உதவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2009.வது நபராக தனது இரத்தத்தை தானமாக வழங்கிய கல்லூரிப் பேராசிரியர் நர்மதா மற்றும் மாணவர்களை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட அனைவரும் பாராட்டியதோடு நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment