pollachi media club tv

-18.5.11-Nfhit khtl;lk; nghs;shr;rpia mLj;Js;s ngupafse;ijapy; trpf;Fk; N[hjplh; tPl;by; rpWj;ijg;Gyp>Gs;spkhd; Njhy;>el;rj;jpu Mikapd; XL>ahidg;gy;>flh khd;fspd; jiyAld; $ba nfhk;Gfs; ,Ug;gJ fz;Lgpbf;fg;gl;lijaLj;J N[hjplh; %h;j;jp tdj;Jiwapduhy; ifJ nra;ag;gl;lhh;…- ,e;jpahtpy; tWikf;Nfhl;Lf;F fPNo trpf;Fk; ngUk;ghd;ik kf;fshy; Njh;e;njLf;fg;gLk; ekJ rl;lkd;w cWg;gpdh;fSf;F-Viog;gq;fhsh;fs;.?-> murhy; mq;fPfupf;fg;gl;L toq;fg;gLk;>rk;gsk; Fwpj;j tpguq;fisg; ghUq;fs;..> kdrhl;rp Ngrf;$lhjh..?-rh.n[ag;gpufh\pd; rpwg;Gf;fl;Liu.czh;tpir ghlfh; rkh;g;gh Fkudpd; ghly;fs; rd;nghs;shr;rp.A.l;Ag; tPbNahtpy; Nfl;L kfpOq;fs;. -2011“Gj;jhz;L rpwg;Gr; nra;jp”- ehkf;fy; khtl;l Ml;rpaupd; tho;f;if xU ghlk;.! -muthzpfis mutizg;Nghk;.-rpwg;Gf;fl;Liu.r.md;guR-rq;fkk; ntspaPL>
nghs;shr;rp kPbah fpsg; b.tp.. nrhy;tnjy;yhk; cz;ik..! nra;jpfSf;fhd tPbNah gjpTfisg; ghh;f;fTk;..! Pollachi Press Club Tv.. solvathellaam unmai , –click on the video and watch the visuals..more vedios in youtube.com,and type the address bar.. sunpollachi..

Thursday, December 10, 2009

ஓயுமா மணல் கடத்தல்..?

o


கிணத்துக்கடவு வழியாகத் தொடரும் மணல் கடத்தல்.!

பொள்ளாச்சி.டிச.12. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வழியாக கேரளமாநிலத்திற்கு மணல்கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.இதனால் அப்பகுதியிலுள்ள சாலைகள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு சிதிலமடைந்துள்ளதால் மற்ற வாகனங்களின் போக்குவரத்துக்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது கிணத்துக்கடவு. இங்கிருந்து சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ள வீரப்பகவுண்டனூர் அருகே கேரள எல்லை துவங்குகிறது. தற்போது கரூர் மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளிலிருந்து லாரிகளில் கடத்தப்படும் மணல் இவ்வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

பொதுமக்களால் இடையூறு ஏற்படாதவகையில், தடுப்பதற்காக பல இடங்களில் 10 பேர் வரை கொண்ட பலகுழுக்களின் கண்காணிப்பும் தகவல் பரிமாற்றமும் மேற்கொள்வதையடுத்து, இவர்களின் செல்போன் கட்டளைப்படியே லாரிகள் வீரப்பகவுண்டனூர் சாலைகளின் வழியே பயணித்து கேரளஎல்லையை அடைந்து,கேரளமாநிலம் வடகரை மற்றும் ஒழலப்பதி வழியாக சென்று வருகிறது.
இவ்வாறு.கடந்த பலமாதங்களாக நாளொன்றுக்கு சராசரியாக,சுமார் 200 லாரிகள் வரை மணல் கடத்தப்படுகிறது என்றும்,ஆனால் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் மணல் கடத்தியதாக இரண்டுலாரிகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் மணல் கடத்தலில் ஈடுபடும் லாரிகளின் போக்குவரத்து காரணமாக, வீரப்பகவுண்டனூர்,சொக்கனூர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் பெரிதும் பழுதடைந்துள்ளதால்,இருசக்கரவாகனம் மற்றும் பேருந்து, ஆம்புலன்ஸ், சரக்குவாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்களின் போக்குவரத்துக்கும் பெரிதும் இடையூறு ஏற்பட்டுள்ளது என்றும்,மணல் லாரிகள் செல்வதை தடைசெய்யும் வகையில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து செயலாற்றும் வகையில்,அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

vedios in youtube.com-kkr.1,kkr.2


No comments:

Post a Comment