இரு மண்ணுளிப்பாம்புகளைப் பிடித்த பொதுமக்கள்
வனத்தறையினரிடம் ஒப்படைத்தனர்.!
பொள்ளாச்சி.டிச.19. கோவை மாவட்டம் பொள்ளாச்சியருகே பிடிபட்ட இரு மண்ணுளிப்பாம்புகளை பொதுமக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இவற்றை அமராவதி முதலைப் பண்ணைக்கு கொண்டு சென்று பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக வைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள மின்நகர் மற்றும் சூளேஸ்வரன்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து இரண்டு மண்ணுளிப்பாம்புகள் நேற்று பிடிபட்டன.
இவற்றைப்பிடித்த சஜீத்பாபு மற்றும் வீராச்சாமி ஆகியோர்,உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததோடு,பொள்ளாச்சி வனச்சரகர் வீரமணியிடம் அவற்றைக் கொண்டுவந்து ஒப்படைத்தனர்.அப்போது அவர்கள் மண்ணுளிப்பாம்புகளுக்கு எவ்வித மருத்துவகுணமும் இல்லையென்றும்,இவற்றை ராசிப்பாம்பு என்று கருதுவது வீண்வதந்தி என்றும் வனத்துறையினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.எனவே பொதுமக்களிடம் விழப்புணர்வு தேவை என்பதை வெளிப்படுத்தவே இவற்றை வனத்துறையினரிடம் ஒப்படைத்தோம் என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு வனத்துறை அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.பிடிபட்ட மண்ணுளிப்பாம்புகள்,அமராவதி முதலைப்பண்ணையில் வைத்து பராமரிக்கப்படும் என்றும்,பொதுமக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இவை பயன்படுத்தப்படும் என்றும் வனச்சரகர் வீரமணி தெரிவித்தார்.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment