மின்சிக்கனத்தை வலியுறுத்தி
ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஊர்வலம்.!
பொள்ளாச்சி.டிச.19 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மின்சிக்கனத்தை வலியுறுத்தி பள்ளி,கல்லூரிமாணவர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்ர் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.இதில் சுமார் 500.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மின்வாரியம் சார்பில் மின்சிக்கனத்தை வலியுறுத்தி பள்ளி,கல்லூரி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் தங்கள் சைக்கிள்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளோடு
பங்கேற்றனர்.
பொள்ளாச்சியை அடுத்துள்ள வஞ்சியாபுரம் பிரிவில் துவங்கிய ஊர்வலத்தை,உடுமலை மின்பகிர்மான வட்டமேற்பார்வைபொறியாளர் சந்திரன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியின்போது உதவி செயற்பொறியாளர்கள் கிருஷ்ணசாமி,மற்றும் வைதேகி ஆகியோர் பங்கேற்றனர்.
ஜோதிநகர்,மாக்கினாம்பட்டி,உடுமலைசாலை,நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் வழியாக நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தையடுத்து பொள்ளாச்சியில் மின்சிக்கன விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில்கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்,ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் பசுவராஜ்,பேராசிரியர் மனோகரன் உள்ளிட்டோர் மின்சிக்கனம் குறித்து சிறப்புரையாற்றினர்.இதில்,ஐ.எஸ்.ஐ.தரம் பெற்ற மின்சாதனங்களை உபயோகப்படுத்தவேண்டும் என்றும்,மின்சாரத்தை பாதுகாப்பான வழிகளில் உபயோகப்படுத்துவது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
நம்ம ஊர் பரவாயில்லை!
12 years ago
No comments:
Post a Comment